Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Featured Replies

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
 
Tamil_News_large_1592215_318_219.jpg
 

புதுடில்லி : தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்குகள் தொடர்பான பட்டியல் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ''நீங்கள் பொது வாழ்வில் இருக்கும் ஒருநபர். அதனால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது. தமிழகத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது. அவதுாறு வழக்கு சட்டம், தமிழகத்தில் தான் அதிக அளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

 

பின், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1592215

Breaking Now பொதுவாழ்க்கையில் இருக்கும் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்- ஜெ.வுக்கு சுப்ரீம்கோர்ட்

 
எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகளைப் போட அரசு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது- ஜெ.வுக்கு கண்டிப்பு 

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என கற்றுக் கொள்ளுங்கள்: ஜெ.வுக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுரை 


அவதூறு வழக்குகளுக்கு தடை கோரிய வழக்கில் ஜெயலலிதாவை கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம் 


தம் மீதான விமர்சனங்களை அடக்குவதற்காக அவதூறு வழக்குகளை போடுவதை நிறுத்த வேண்டும் 


அவதூறு வழக்குகளைப் போடுவதற்கு பதில் நல்ல நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்- ஜெ.வுக்கு அட்வைஸ் 

Read more at: http://tamil.oneindia.com/
 

  • தொடங்கியவர்

அதிகப்படியான அவதூறு வழக்கு தொடுப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

 

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

தமிழக அரசின் அதிகப்படியான அவதூறு வழக்குகள், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடையாளம் அல்ல என உச்ச நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 6-ல் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பேசியதாக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் விஜயகாந்த் மீதான மற்றொரு அவதூறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அரசின் அரசியல் எதிரிகளுடனான பிரச்சினைகளைத் தீர்க்கும் தபால்காரர் இல்லை என விமர்சித்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் தமிழக அரசை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

'ஜனநாயக ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல'

அரசு கொள்கைகள் மீதான விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்ளவும் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், அண்மைக்காலங்களில் நாடு முழுவதும் எந்த ஒரு மாநிலமும் இந்த அளவு கிரிமினல் அவதூறு வழக்குகளை அரசு தரப்பு வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி தாக்கல் செய்ததில்லை எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, "கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்குகளை இந்த நீதிமன்றம் ஆராய்ந்தது. முதல்வரின் உடல்நிலை குறித்த செய்திக்கு எல்லாம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதுதான் சரியான வழி அல்ல. இது ஜனநாயக ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், அரசியல் எதிரிகள் என இத்தனை அதிகமான கிரிமினல் அவதூறு வழக்குகள் பதியப்பட்டிருப்பது மாநில அரசின் அதிகாரப் பிடியில் அரசு சட்ட அலுவலகம் இருப்பதையே உணர்த்துகிறது" எனக் கூறினார்.

'தைரியமாக எதிர்கொள்ளவும்'

மேலும் நீதிபதிகள் கூறும்போது, "அரசு கொள்கைகள் விமர்சிக்கப்பட்டாலோ அல்லது பொது வாழ்வில் இருக்கும் ஒரு நபர் விமர்சனத்துக்கு உள்ளானாலோ அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர விமர்சன குரல்களை நெறிக்கும் வகையில் மாநில அரசு இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது" என்றனர்.

புதிய நோட்டீஸ்:

அவதூறு வழக்குகள் தொடர்பாக தமிழக அரசுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/அதிகப்படியான-அவதூறு-வழக்கு-தொடுப்பது-ஜனநாயகத்துக்கு-உகந்தது-அல்ல-தமிழக-அரசு-மீது-உச்ச-நீதிமன்றம்-காட்டம்/article9025802.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.