Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான்

Featured Replies

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான்

 

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

207073.jpg

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.

 

இலங்கை அணியின்  சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492  ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

 

இதேவேளை, 329 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10248 ஓட்டங்களையும் 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

78 இருபதுக்கு -20  போட்டிகளில் விளையாடி   1884 ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

http://www.virakesari.lk/article/10629

  • தொடங்கியவர்

டில்சான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்

 

 

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர்.kumar-sangakkara-mahela-jayawardene-dils

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.

இவரது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார,

இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் இழந்துள்ளது. 

 

இலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். டில்சான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசாகும். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/10642

  • தொடங்கியவர்

ஓய்வு பெறுகிறார் தில்ஷான்

 

 
தில்ஷான்
தில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்த தில்ஷான் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் 39 வயதான தில்ஷான் வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியோடு சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான திலகரத்னே தில்ஷான் ஆரம்ப காலத்தில் நடுவரிசையில் களம் இறங்கினார். குறுகிய ஓவர்கள் போட்டியில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து 2009-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார்.

தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட பிறகு ஒரு ஆண்டில் ஆயிரம் மற்றும் அதற்கு மேலாக ரன் எடுத்த சாதனையை 4 முறை தில்ஷான் நிகழ்த்தினார். இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷான் 22 சதங்கள் உட்பட 10,248 ரன்கள் குவித்துள்ளார். 106 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். டி 20 போட்டிகளில் 78 ஆட்டங்களில் 1884 ரன்கள் குவித்துள்ளார் தில்ஷான்.

விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்தை லாவகமாக அடிப்பதில் வல்லவராக தில்ஷான் திகழ்ந்தார். தில்ஷானின் இந்த பிரத்யேக ஷாட் 'தில் ஸ்கூப்' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. ஓய்வு அறிவிப்பின் மூலம் தனது 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு தில்ஷான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2019-ம் ஆண்டு உலகக் கோப் பைக்கு அணியை தயார் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக தில்ஷானிடம் வாரியம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ஜெயசூர்யாவிடம் தில்ஷான் ஆலோசனை நடத்தினார்.

எனினும் ஓய்வு முடிவு எடுப்பதில் தில்ஷான் தயக்கம் காட்டி வந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 22 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 10 ரன்கள் மட்டுமே தில்ஷான் சேர்த்தார். மேலும் அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, கவுசல் பெரேரா ஆகியோர் சீரான முன்னேற்றம் கண்டு வருவதால் தற்போது தில்ஷான் ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார்.

இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்ககரா ஆகியோருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த 4-வது வீரர் என்ற பெருமைக்கும் தில்ஷான் சொந்தக்காரராக உள்ளார். இவர் தனது வாழ்நாள் சராசரியாக 39.26 வைத்துள்ளார்.

2009-ம் ஆண்டில் டி 20 போட்டிகளின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றார்.

2014-ல் ஐசிசி டி 20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றதில் தில்ஷானின் பங்கு அதிகம் இருந்தது. மேலும் 2009, 2012 டி 20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இலங்கை அணியிலும் தில்ஷான் இடம் பெற்றிருந்தார். 2007, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை கால் பதித்திலும் தில்ஷான் முக்கிய பங்காற்றினார்.

http://tamil.thehindu.com/sports/ஓய்வு-பெறுகிறார்-தில்ஷான்/article9035320.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.