Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை

Featured Replies

விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை

showImageInStory?imageid=293000:mr

 

 

 

ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரு­கிறார். இலங்கை வந்து என்ன செய்­யப்­போ­கிறார்? யார் யாருடன் பேசப்­போ­கின்றார்? அவரின் வருகை எவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்? இந்த விஜ­ய­மா­வது 2009 ஆம் ஆண்டு விஜ­யத்தைப் போலன்றி மக்­க­ளுக்கு விடிவு கிட்­டுமா? போன்ற விட­யங்­களே இவ்­வாரம் மக்கள் மத்­தியில் உலா வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையின் மோதல் விவ­காரம் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அர­சியல் தீர்வு போன்ற விட­யங்­களில் மிகவும் நெருங்­கிய நிறு­வ­ன­மாக உலக பலம் வாய்ந்த அமைப்­பாக ஐக்­கிய நாடுகள் சபை திகழ்­கின்­றது. எனவே அவ்­வாறு மிகப்­பெ­ரிய நிறு­வ­ன­மான ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்றார் என்­பது இல­கு­வான விட­ய­மல்ல.

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இந்த வரு­டத்­துடன் பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கிறார். எனவே ஐ.நா. செய­லாளர் நாயகம் என்ற ரீதியில் அவரின் இறுதி விஜ­ய­மாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

எதிர்­வரும் 31 ஆம் திக­தி­யி­லி­ருந்து செப்­டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார் . அத்­துடன் காலிக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்து சுனாமி அழிவு மீள­மைப்பு மற்றும் யுத்த பாதிப்பு குறித்து ஆரா­ய­வுள்ளார்.

குறிப்­பாக அர­சாங்கம் மற்றும் எதிர்த்­த­ரப்­புக்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் ஜெனிவா பிரே­ரணை அமு­லாக்கம் மற்றும் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோ­ரு­ட­னான கலந்­து­யைா­டல்­க­ளின்­போது ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் விசா­ரணை பொறி­மு­றையின் முன்­னேற்றம் என்­பன குறித்து ஆரா­யப்­படும். எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடை­பெறும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத் தொட­ரிலும் ஜனா­தி­ப­தியும் ஐ.நா. செயலர் பான் கீ மூனும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

இதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­மந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். இச் சந்­திப்­பின்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் ஆரா­யப்­படும்.

அத்­தடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அமை­ய­வேண்­டி­யதன் அவ­சியம் என்­பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பான் கீ மூனுக்கு விளக்­க­ம­ளிக்­க­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­துடன் சில தினங்­களில் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்­தி­ருந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்றை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யி­ருந்­தது.

ஆனால் இம்­முறை பான்­கீ­மூனின் விஜ­ய­மா­னது 2009 ஆம் ஆண்டு விஜ­யத்தை போன்று அமைந்­து­வி­டக்­கூ­டாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்து சில தினங்­களில் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். கொழும்பு வந்­த­டைந்த அவர் நேர­டி­யாக வட பகு­திக்கு சென்று யுத்த அழி­வு­களை பார்­வை­யிட்­டி­ருந்தார்.

அதன் பின்னர் பான் கீ மூன் இலங்­கை­யி­லி­ருந்து செல்­வ­தற்கு முன்­பாக அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து கூட்­ட­றிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்தார். அந்தக் கூட்­ட­றிக்­கையில் யுத்­தத்தின் பின்­ன­ரான முக்­கிய நிலை­மைகள் தொடர்பில் விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும், பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும், இடம்­பெ­யர்ந்த மக்கள் அனை­வரும் விரை­வாக மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும், தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்டும், நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் போன்ற முக்­கிய விட­யங்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் வெளியிட்ட ஒன்­றி­ணைந்த கூட்­ட­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பான் கீ மூன் இலங்­கைக்கு வந்து சென்று ஏழு வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் ஏதா­வது நடந்ததா ?

ஒன்றும் நடக்­க­வில்லை. பொறுப்­புக்­கூறல் முன்­னெ­டுக்­கப்­ப­டவும் இல்லை, அர­சியல் தீர்வு காணப்­ப­டவும் இல்லை, எதுவும் நடக்­க­வில்லை. மாறாக யுத்த வடுக்கள், காயங்­களும் பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் அவ்­வாறே தொடர்­கின்­றன. காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­ட­போ­திலும் இது­வரை முழு­மை­யாக மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

எனவே கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜ­யத்­தினால் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்த பயனும் கிடைக்­க­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும். ஆனால் ஒரு நன்மை கிடைத்­தது என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அதா­வது 2009 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் விஜ­யத்தின் ஊடாக இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு சர்­வ­தேச அவ­தா­னத்தைப் பெற்­றி­ருந்­தன.

எனவே ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இம்­முறை இலங்கை விஜ­ய­மா­னது 2009 ஆம் ஆண்டு விஜயம் போன்று அமைந்து விடக்­கூ­டாது. இம்­மு­றை­யா­வது அவரின் விஜத்­தி­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின வடுக்கள் ஆறு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைக்க வேண்டும்.

குறிப்­பாக பான் கீ மூனின் இலங்கை விஜ­யத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்­கை­யா­னது விசேட பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வந்­த­தது. அந்த பிரே­ர­ணைக்கு மனித உரிமைப் பேரவையில் 29 வாக்­குகள் ஆத­ர­வாக கிடைத்­தன. 8 நாடுகள் எதிர்த்து வாக்­க­ளித்­தன.

எவ்­வா­றெ­னினும் 47 உறுப்பு நாடு­களை கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை கொண்டு வந்த பிரே­ரணை வெற்றி பெற்­றது. அந்த பிரே­ர­ணையில் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான இலங்­கையின் நிலைமை தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் அந்த பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டி­ருந்த விட­யங்கள் கூட உரிய முறையில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் 2012, 2013, 2104 ஆம் ஆண்­டு­களில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­க­ளினால் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அவற்றில் யுத்­தத்துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் நிலைமை குறித்து பல்­வேறு விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் எதுவும் நடக்­க­வில்லை.

எவ்­வா­றெ­னினும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இது­வரை தீர்க்­கப்­ப­டாத நிலை­மையே தொடர்­கி­றது.

குறிப்­பாக நல்­லி­ணக்க முயற்­சிகள் ஏழு வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இது­வரை வெற்­றி­ய­டை­ய­வில்லை. யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை நீதி வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

யுத்­த­கா­லத்தில் அப­க­ரிக்­கப்­பட்ட பொது மக்­களின் காணிகள் இது­வரை மீள் வழங்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சாங்கம் காணி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­போ­திலும் இது­வரை அந்த மக்­களின் காணிகள் மீள் வழங்­காத பிரச்­சினை தொடர்ந்து கொண்டு இருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி யுத்­த­கா­லத்தில் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் இது­வரை எந்­த­வொரு தீர்வும் காணப்­ப­டாமல் இருக்­கின்­றது. காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க தமிழ் பேசும் மக்கள் நீண்­ட­கா­லமாக போராடி வரு­கின்ற அர­சியல் தீர்வு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு முறையும் அர­சியல் தீர்வு என்ற விடயம் தொடர்பில் பேசப்­பட்டு வரு­கின்ற போதிலும் தீர்­வா­னது எட்­டாக்­க­னி­யா­கவே இருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் அத­னூ­டாக அர­சியல் தீர்வு எவ்­வாறு உள்­ள­டக்­கப்­படும் என்று இது­வரை தெ ளிவற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையும் இது­வரை முழு­மை­ய­டை­யாத நிலையே தொடர்­கின்­றது. இன்னும் 31 க்கும் மேற்­பட்ட நலன்­புரி முகாம்­களில் மக்கள் வடக்கில் தங்­கி­யுள்­ளனர். அவர்­களை அவர்­களின் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­ற­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

அது மட்­டு­மன்றி யுத்­தத்தின் பின்னர் யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் மக்­களின் வாழ்­வா­தாரம் குறித்து பாரி­ய­ளவில் கவனம் செலுத்­த­வேண்­டிய தேவையும் இது­வரை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. யுத்­தத்­தினால் கண­வனை இழந்த பல பெண்கள் தமது குடும்­பத்தை கொண்டு நடத்­து­வதில் பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர்.

இவ்­வாறு யுத்தம் முடி­வ­டைந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த ஏழு வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. புதி­தாக ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு ஆர்வம் காட்­டி­வ­ரு­கின்­ற­மையை மறுக்க முடி­யாது.

ஆனால் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் ஆர்­வத்தை வெ ளிக்­காட்­டி­னாலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றன ஒரு தீர்க்­க­மான மற்றும் முக்­கி­யத்­துவம் மிக்க கால கட்­டத்­தி­லேயே ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரு­கிறார்.

அதன்­படி இப்­போது ஆரா­யப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனின் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இந்த விஜ­ய­மா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விடிவை தருமா ? பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்­குமா ? அல்­லது 2009 ஆம் ஆண்டில் நடை­பெற்­ற­தைப்­போன்றே இம்­மு­றையும் பான் கீ மூனின் இலங்கை விஜ­ய­மா­னது வெறு­மனே பெய­ர­ளவில் விஜ­ய­மாக மட்டும் அமைந்­து­வி­டுமா?

இந்தக் கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­ய­வில்லை. காரணம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தமிழ் பேசும் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் எவ்­வாறு தாக்கம் செலுத்தும் என்று கூற முடி­யாது. 2009 ஆம் ஆண்டு ஒரு அனு­பவம் இருக்­கின்­றது. ஆனால் அப்­போது காணப்­பட்­ட­தை­விட இப்­போது அர­சியல் சூழல் மாறி­விட்­டது. அர­சாங்கம் மாறிவிட்டது. நல்லிணக்கம் மீது ஆர்வம் கொண்ட இருவர் தற்போது நாட்டின் உயர்மட்ட அதிகாரத்தில் இருக்கின்றனர்.

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரச்சினையானது சர்வதேசம் வரை சென்றுள்ளதுடன் சர்வதேச அவதானம் பாரியளவில் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பான் கீ மூனை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின்போது தமிழ் பேசும் மக்களின் தற்போதைய உண்மையான யதார்த்த நிலையை பான் கீ மூன் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு உரிய விளக்கத்தை அளிக்க முன்வரவேண்டும்.

இம்முறையாவது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயமானது பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் விமோசனமாக அமையவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் பான் கீ மூன் ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/08/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.