Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணின் மைந்தர்களுக்கு

Featured Replies

வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை பெரும் சிக்கலாக விஸ்வரூபம் எடுத்து இலங்கைத் தீவையே தனது வன் முறைத் தீயால் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது.

உரிமை வேண்டி கௌரவ வாழ்வு வேண்டி நீதியும் நியாயமும் கோரி சுதந்திரம் கேட்டு தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சுதந்திர வேள்வியில் தகித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் சூட்டை தகிப்பை சகிக்க முடியாது தடுமாறுகின்றது தென்னிலங்கைப் பேரினவாதம்.

புறச் சக்திகள், வெளிநாடுகள் போன்ற எவற்றினதும் ஆதரவின்றித் தனித்துத் தன்னந் தனியாக இந்தப் போராட் டத்தை ஈழத்தமிழர் தாயகம் முன்னெடுக்கின்றது. தமிழர் தாயக மக்களின் நேரடிப் பங்களிப்போடும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஊக்குவிப்பு உதவியோடும் தமிழகத் தமிழர் களின் ஆத்மார்த்தமான ஆதரவோடும் மட்டுமே இந்த விடு தலைப் போரைத் தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகின்றது.

ஆனால்

சர்வதேச ஆதரவோடு குறிப்பாக ஏகாதிபத்திய சக்திக ளின் பெருமளவு ஆயுத மற்றும் இராணுவப் பயிற்சி உதவி கள், நிதிப் பங்களிப்புகள் போன்றவற்றோடு இலங்கை அரசுப் படைகள் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமது படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அப்படி சர்வதேச உதவிகளோடு செயற்பட்டாலும் புலி களை அடக்கி ஒடுக்கும் முற்றாகச் செயலிழக்க வைக்கும் தமது இலக்கு ஈடேறாத நிலையில் அதை எட்டுவதற்கு வேறு விதமான இராஜதந்திர ரீதியிலான தந்திரோபாயங் களையும் கொழும்பு அரசு நாடுகின்றது.

ஆயுத வலிமைமிக்க அயல் நாடுகளை தமிழர் தாயகப் பிரதேசத்தோடு நேரடியாகத் தொடர்புடைய திட்டங்களில் ஈடுபடவைத்து, அவற்றின் நலனைப் பேணும் மையங் களை அங்கு உருவாக்குவதன் மூலம் அப்பிரதேசம் தமிழர் தரப்பின் புலிகள் தரப்பின் கைகளில் வீழாமல் இருப் பதற்குச் சம்பந்தப்பட்ட நாட்டின் முழு உதவியையும் அனு சரணையையும் உறுதிப்படுத்திக் கொள்வது. இதுதான் கொழும்பு வகுத்துள்ள தந்திரோபாய யுக்தி.

பலாலி விமானத்தள ஓடுபாதைத் திருத்தப் பணிகளுக் கான ஒப்பந்தத்தை அதற்கான நிதி உதவி வழங்கும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் சாட்டில் அந்த ஓடு தளத்தைப் பயன்படுத்தும் விசேட உரிமையையும் இந்தியா வுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது கொழும்பு. இந்த நட வடிக்கை மூலம் இந்த விமானத் தளத்தில் படைத் தளத் தில் இந்தியாவின் நலனையும் சேர்த்து முடிச்சுப் போட் டுக்கொண்டது இலங்கை.

ஆக, இனி பலாலி விமானப் படைத் தளத்தைப் புலிகள் கைப்பற்ற முயற்சித்தாலும் அந்த விமானத்தளத்தின் ஓடு பாதையைப் பயன்படுத்தும் உரிமையுடைய அந்தப் படைத் தளத்தின் நலனில் அக்கறையுள்ள இந்தியா அதற்கு அனு மதிக்காது, அப்படி ஒரு சிக்கல் நிலைமை வந்தால் புலிக ளுக்கு எதிராக இந்தியா மீண்டும் களத்தில் இறங்கி தனக்கு உதவும் என்று கொழும்பு கருதுகின்றது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக் குக் கையளித்தமையும் சம்பூரில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்போடு அனல் மின் நிலையம் கட்ட முயற்சிக்கின்ற மையும், மன்னார் என்று கடற்படுக்கையில் எண்ணெய் அகழ் வுப் பணிக்கான பொறுப்பு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டமையும் இந்த நோக்கத்தில்தான்.

மன்னாரில் கரையை ஒட்டிய கடற்படுக்கையில் எண்ணெய்ப் படிவுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்து, அது பற்றிய ஆய்வு களை நடத்தி, கணிப்பீடுகள், மதிப்பாய்வு அறிக்கைகளை நோர்வே நாடே தயாரித்தது. நிலத்துக்குக் கீழான எரிபொருள் அகழ்வுப் பணியில் உலகில் முன்னணி நாடு நோர்வேயே. இலங்கையை அண்டிய கடற்படுக்கையில் எரிபொருள் புதைந்து கிடக்கின்றமையைக் கண்டுபிடிக்கும் தகுதியும், திறமையும், வலிமையும் நோர்வேக்கு இருந்ததால் அந்தப் பொறுப்பை அந்த நாட்டிடம் ஒப்படைத்தது கொழும்பு.

ஆனால், அகழ்வுப் பணியை நோர்வேக்குக் கையளிக்க மறுத்துவிட்டது அது அதற்குக் காரணம் உண்டு.

அகழ்வுப் பணி ஆரம்பித்த பின் அப்பிரதேசத்தில் புலிகளின் தலையீடு வருமானால், அல்லது அக்கடல் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் விழும் ஆபத்து ஏற்படுமானால், அத்தகைய சந்தர்ப்பத்தில் நோர்வே புலிகளை இரா ணுவ ரீதியில் எதிர்கொண்டு நின்று, அப்பிரதேசத்தைத் தக்க வைப்பதற்கு தனக்கு உதவாது என்று கொழும்பு நினைக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் இராணுவ வலிமை பொருந்திய இந்தியாவும், சீனாவும் உறுதியாக நின்று தனக்கு உதவக் கூடியன என்று கொழும்பு கருதுகின்றது; நம்புகிறது.

அதனாலேயே நோர்வே இவ்விடயத்தில் இதுவரை ஆற்றிய ஆய்வுப் பணிகளுக்கு ஒரு தொகைப் பணத்தைக் கணக்கிட்டு, அதற்கு வழங்கி, அந்நாட்டை இப்பொறுப்பி லிருந்து வெட்டி விட்டு, அகழ்வுப் பணியை இந்தியாவிடமும், சீனாவிடமும் வழங்கத் தீர்மானித்திருக்கின்றது கொழும்பு.

இலங்கை அரசின் இத்தகைய இராஜதந்திர வலைகளில் சிக்கி, தமிழர் தாயகத்தின் வளங்களைச் சூறையாடும் பெரும் திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லாதிக்க நாடுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மண்ணின் ஆட்சிக்கட்டமைப்புக்கான உரிமை பற்றிய சர்ச்சை தீர்க்கப்படாமல் அது பெரும் இனப் போராக வெடித்துள்ள இந்தச் சூழலில், பொருளாதார, வர்த்தகக் கூட்டுறவு என்ற போர்வையில் காலைப் பதிப்பது உகந்தது அல்ல.

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திலும், மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணியிலும் தம்மை ஈடுபடுத்த முயற்சிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இது சமர்ப்பணம்.

அந்தந்தப் பகுதி மக்களின் நலன்களுக்கு எதிராக, அரசாங்கம் என்ற தலைப்பாகை கட்டி நடத்தப்படும் உள் நோக்கம் நிறைந்த சூழ்ச்சிகளில் தங்களையும் சம்பந்தப் படுத்திக் கொள்வது, ஒரு வகையில் மண்ணின் மைந்தர்க ளுக்குச் செய்யப்படும் துரோகமே.

நன்றி : உதயன் 22 ஜன 2007

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.