Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயதொழில் செய்வதற்கு உதவி வழங்கும் திட்டம்

Featured Replies

5326_1472868649_image-0-02-01-afad5f8f70c57c0a15f3919131900528f07154645ae019374c1a3cf5d6902b79-V.jpg

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி வழங்கும் திட்டம் அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்துவிட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வரமுடியாமல் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் போது அந்த சமுதாயத்தின் பிரதி நிதியாக இருக்கின்ற மக்களே விடுதலையின் விடியலாக உருவெடுக்கின்றார்கள். அத்தகைய மக்கள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும், தம் இனம் சார்ந்தவர்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்காகவும் போராடி உரிமையை வென்றெடுக்க தம்மையே அர்ப்பணிக்கிறார்கள். இப் போராட்டதிற்காக பலர் தம் உயிரையே தியாகம் செய்கிறார்கள். அதில் சிலர் தம் உடல் அங்கங்களையும் இழந்து விடுகிறார்கள். முடிவில் இலங்கை இராணுவத்தால் பெருமளவில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகமானவர்கள், தடுப்பு முகாம்களில் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது பல மக்கள் விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். அத்துடன் விடுவிக்கப்பட்டவர்கள், வட கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக வசித்து வருகின்றார்கள். தற்போது விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் வாழும் மக்களில் பலர் சமுதாயத்தில் கலந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள் என்பது, வருத்தத்துக்குரிய உண்மை. ஆனால் தற்போது இவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி உள்ளார்கள்? இவர்களின் எதிர்காலம் என்ன? என்பது குறித்து பெரிதாக யாரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. இதில் பலர் உடல் அங்கங்களை இழந்து அங்கவீனமாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எமக்காக தம்மையே இழந்த இவர்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? கடந்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்ததை தொடர்ந்தும் எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாமல் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கடமை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கான முயற்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியின் பலனாக மூன்றாம்கட்டமாக கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பதினைந்து குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கோழி வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, மாடு வளர்ப்பு, சீமெந்து கல் வெட்டும் இயந்திரம், மீன் பிடி உபகரணங்கள்  போன்ற சுயதொழில்களை செய்வதற்கான நிதி உதவியினை பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பெற்றுக்கொடுத்தார்.

5326_1472868649_image-0-02-01-f1c728f40f1f92c152f18e1170751cea5daf5ff7a9cd79df7d48fefabeaf09b5-V.jpg

5326_1472868649_image-0-02-01-592fbcf9f825354dd8ea669053d83cf7b965c44afab078ee0376b501adb5e34f-V.jpg

5326_1472868649_image-0-02-01-2b6c257fca4ffc1da7d961c124d4bca38cc9d9106aa7668e8db0bbc4ee2b5ac7-V.jpg

5326_1472868649_image-0-02-01-0bc3a1289fe0e9b25569954b5eb88c2c6690c2b3957868070c62c4b70bade767-V.jpg

http://battinaatham.com/description.php?art=5326

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.