Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜியோ சேவை: தொலைத் தொடர்புத் துறையை கலங்க வைக்கும் ரிலையன்ஸ் அதிரடி

Featured Replies

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

160904114243_reliance_jio_digital_credit_bbc_624x351_bbc.jpg

ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது.
அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை, அழைப்புக்கள், வீடியோ மற்றும் பல செயலிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்குள் 90 சதவீத மக்களை இந்த திட்டம் சென்றடையும் என்று நம்புவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதிகப்படியான போட்டி
இந்த திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தின் போது இந்த 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
இந்த 4 ஜி சேவை இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போட்டியை உருவாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பானி இந்த திட்டத்தை அறிவித்த அடுத்த தருணத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்லின் பங்கு மதிப்பு 1.3 பில்லியர் டாலரை இழந்து 8.5 சதவீதமாக குறைந்தது.
500 மில்லியன் டாலர் மதிப்பில் ஐடியா அலைபேசியின் சந்தை மதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது; ரிலையன்ஸின் பொருட்களும் 3 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளன.
நெருக்கடியில் போட்டியாளர்கள்

160904114726_relaince_jio_modi_ad_credit_bbc_624x351_bbc.jpg

நாட்டில் தொலைத் தொடர்பு புரட்சியை ஏற்படுத்த விரும்பவுதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோவின் இந்த திட்டம் மற்ற போட்டியாளர்களுக்கு பாதகமாகியுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தொலைத் தொடர்புத்துறையின் ஒட்டுமொத்த கடன் 50 பில்லியன் டாலராக இருக்கும் நேரத்தில், ரிலையன்ஸ் இந்தச் சந்தையில் நுழைகிறது என்று பிபிசி செய்தியாளர் ஷில்பா கண்ணன் கூறுகிறார்.
அதே நேரத்தில், ஜியோவின் இந்த கட்டணப் போரை ஆரோக்கியமற்றது என சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இதில் வெற்றியாளர்கள், வாடிக்கையாளர்களே என்ற கருத்தும் நிலவுகிறது.

http://www.bbc.com/tamil/india/2016/09/160905_reliance_jio

ரிலையன்ஸ் ஜியோ தொழில் ரகசியம் என்ன?

oil_2999632f.jpg
 

கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.

முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?

மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.

இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

எப்படி இலவசம்?

எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.

ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.

எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.

கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!

 

http://tamil.thehindu.com/business/business-supplement/ரிலையன்ஸ்-ஜியோ-தொழில்-ரகசியம்-என்ன/article9074652.ece?widget-art=four-all

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.