Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா தூதரை தாக்கத் தூண்டிய சம்பவங்கள்!

Featured Replies

சிறீலங்கா துதரை தாக்கத் தூண்டிய சம்பவங்கள்!

அண்மையில் மலேசியாவில் சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதல் நடாத்தப்பட்டதற்கான காரணங்கள் பற்றி மலேசிய துணைப் பொதுச் செயலாளர் இராமசாமியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அண்மையில் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பயணம் செய்திருந்தார்.

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மலேசிய வாழ் தமிழ் மக்களால் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காவல்துறையில் பதியப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்களை மகிந்த ராஜபக்ஷவை மலேசியாவுக்கு அழைக்கவேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மலேசிய அரசாங்கமோ தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்தது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணமாக இருந்தார்.

யாராவது வன்முறைக்கெதிராக போராடும்போது நாம் அவர்களைத் தடுக்கமுடியாது. சிறீலங்காவின் உயர் ஸ்தானிகர் இப்ராகிம் சாகிப் அன்சார் கோலாம்பூர் சர்வதேச விமான நிலையத்தை அடையும்போது சில தமிழ் இளைஞர்களும் அவ்விடத்தை அடைந்தனர். இதன்போது தமிழ் இளைஞர்கள் எங்கே மகிந்த ராஜபக்ஷ என இப்ராகிம்மிடம் கேட்டனர். அதற்கு நாங்கள் சிறீலங்காவில் புலிகளை அழித்தொழித்தோம். அதேபோல் மலேசியாவிலும் புலிகளை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

இது ஒரு விரோதச் செயல், அவர் ஒரு இராஜதந்திரிபோல் கதைக்கவில்லை. இது அவர்களுக்கு ஆத்திரத்தையூட்டியது. அதனாலேயே அவர்கள் தாக்கினார்கள். இதனால் 5பேரை காவல்துறை கைதுசெய்துள்ளது.

இப்ராகிம் மலேசியாவின் சாதாரண தூதுவர் இல்லை. அவர் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழீழத்தின் விடுதலைக்காக ஆதரவு வழங்கிய தமிழர்களின் விபரங்களைச் சேகரித்து சிறீலங்காவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அத்துடன் கடந்த சில வருடங்களாக மலேசியாவுக்குள் அகதிகளாக வரும் தமிழர்களின் விபரங்களைத் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக, பல தமிழ் அகதிகள் மலேசிய அதிகாரிகளால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இப்ராகிம்மினுடைய இந்த ஆரோக்கியமற்ற செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர் இந்த நாட்டில் தனது சேவையை வழங்குவதற்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=40889

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின்னணியை... விரிவாக அறியத்  தந்த,  செய்தியை இணைத்தமைக்கு நன்றி ஆதவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Athavan CH said:

இப்ராகிம் மலேசியாவின் சாதாரண தூதுவர் இல்லை. அவர் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழீழத்தின் விடுதலைக்காக ஆதரவு வழங்கிய தமிழர்களின் விபரங்களைச் சேகரித்து சிறீலங்காவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அத்துடன் கடந்த சில வருடங்களாக மலேசியாவுக்குள் அகதிகளாக வரும் தமிழர்களின் விபரங்களைத் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக, பல தமிழ் அகதிகள் மலேசிய அதிகாரிகளால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இப்ராகிம்மினுடைய இந்த ஆரோக்கியமற்ற செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர் இந்த நாட்டில் தனது சேவையை வழங்குவதற்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சோனகன்ரை தொப்பியிலை இருக்கிற குஞ்சம் அங்கையும் இஞ்சையும் ஆடுமாம்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.