Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரறிவாளன் மீது தாக்குதல்

Featured Replies


பேரறிவாளன் மீது தாக்குதல்
 
 

article_1473740917-perarivalan-600-jpg-1இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

தாக்குதலில் காயமடைந்த அவர், காயமடைந்ததால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சிறையில் இருக்கின்ற, ஆயுள்தண்டனை கைதியான ராஜேஷ் என்பவர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/181749/ப-ரற-வ-ளன-ம-த-த-க-க-தல-#sthash.gZPu9yvQ.dpuf
  • தொடங்கியவர்

பேரறிவாளனை சிறையில் சந்தித்த அற்புதம்மாளின் கோரிக்கை!

DSC_0198.JPG

வேலூர் : சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் இன்று சந்தித்து பேசினார். காயமடைந்த பேரறிவாளனை தன்னோடு வைத்து கவனித்துக்கொள்ள பரோலில் விடுவிக்க வேண்டும் என அவர்ர் கோரிக்கை விடுத்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை சக கைதி ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளன் காயமடைந்தார். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் கைதிகளின் அறை மாற்றுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்ததாகவும் சிறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் மத்திய சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தனர். இதன் பிறகு அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், "பேரறிவாளன் சிறையில் யாரிடமும் முக சுழிப்பு கூட செய்தாவன். அவன் மீது தாக்குதல் நடந்திருப்பது வருத்தமாக உள்ளது. 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் இருந்து வரும்  பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வந்தது இல்லை. ஜனவரி மாதம் பரோலுக்கு முயற்சி மேற்க்கொண்டு வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0e073597-fda0-451d-a86e-104a027093c2.jpg

சிறைத்துறையினர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிபடுத்தவே பேரறிவாளனை தேர்வு செய்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இது போன்று தாக்குதல் நடத்தப்படும் என்று சிறை துறையினரே எதிர்பார்க்கவில்லை. காலை எழுந்த உடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலில் கை, கால்களில் ரத்தம் கட்டி இருக்கிறது. தலையில் 4 தையல்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

நேற்று வரை நன்றாக பேசிவந்த ராஜேஷ் திடீரென  தாக்கியதாக பேரறிவாளன் தெரிவித்தார். ஏற்கனவே சிறுநீர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தற்போது தாக்குதலில் காயமடைந்திருப்பதால் அவரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைக்கு  காயமடைந்த பேரறிவாளனை என்னுடன் வைத்து கவனித்துக்கொள்ள முதல்வர் உடனே பரோல் வழங்க வேண்டும். மருத்துவ குழுவினர் தற்போது சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்துள்ளனர். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் இனிமேல் பேரறிவாளன் பாதுகாப்பில் குறை ஏற்படாது என சிறைத்துறையினர் உறுதியளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68335-arputhammal-meets-perarivalan-in-vellore-prison.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பேரறிவாளன் மீது தாக்குதல் ஏன்?

சிறைக்குள் சட்டவிரோத செயல்பாடுகள்!அதிர்ச்சி

 

p15a.jpg

வேலூர் மத்திய சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கொலைவெறியோடு தாக்கப்பட்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறைக்குள் ராஜேஷ் கண்ணா என்ற கைதி, பேரறிவாளனைத் தாக்கியதாக செய்தி வெளியானது.

சிறைக்குள் என்ன நடந்தது என்று வேலூர் சிறை வட்டாரங்களில் விசாரித்தோம். “ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ‘வாட்ஸ்அப்’ யுவராஜ் உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்புத் தொகுதி அறைகளில் தனித் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த உயர் பாதுகாப்புத் தொகுதி மூன்று வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளது. அதில், பேரறிவாளன் இருக்கும் அறைக்கு எதிர் வரிசையில் ராஜேஷ் கண்ணா என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், ஆள் கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். அவருக்கு 2002-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. முதலில் திருச்சி மத்திய சிறையிலும், பிறகு புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்ட ராஜேஷ் கண்ணா, கடந்த மூன்றரை ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 14-ம் தேதி காலை 6 மணிக்கு கைதிகளின் அறைக் கதவுகள் திறக்கப்பட்டன. வெளியே வந்த ராஜேஷ் கண்ணா, நேராக பேரறிவாளன் அறைக்குச் சென்றார். கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு அடி நீளமுள்ள இரும்புக்கம்பியால் பேரறிவாளன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். என்ன நடக்கிறது என்று பேரறிவாளன் சுதாரிப்பதற்குள், கைகளிலும் தாக்கியுள்ளார். வலியால் துடித்த பேரறிவாளன், மயக்கமாகிவிட்டார். உடனே, பக்கத்தில் இருந்த கைதிகளும், சிறைக்காவலர்களும் ஓடிவந்து பேரறிவாளனை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். பேரறிவாளனுக்கு தலையின் முன்பகுதியில் இரும்புக்கம்பி குத்தியதில் ரத்தம் கொட்டியது. அவருக்குத் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டன’’ என்றார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது முதல் முறையாக தாக்குதல் நடந்துள்ளது. எதற்காக அவரை ராஜேஷ் கண்ணா தாக்கினார் என்று உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “ராஜேஷ் கண்ணா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால்,

p15b.jpg

2002-ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ல் திருச்சி மத்திய சிறையில் இருந்த ராஜேஷ் கண்ணா, அங்கு கைதிகளுக்கு நன்னெறி வகுப்பு எடுக்க வந்த கன்னியாஸ் திரியை கத்தியால் குத்தியுள்ளார்.  செல்போன், போதை வஸ்துக்கள் போன்றவற்றை சிறைக்குள் கைதிகள் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க தேடுதல் குழு உள்ளது. ஆனால், இந்தத் தேடுதல் குழுவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு வரும் சமூகவிரோதிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கவும், அவர்களின் சட்டவிரோத செயல் பாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க பணம் வாங்குகிறார்கள். இவர்களைப் பற்றி யாரோ சிறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்கள். அதனால், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ‘புகார் செய்தது பேரறிவாளன்தான். அதனால் உன்னை சாதாரண சிறைக்கு மாற்றப்போகிறார்கள்’ என்று தேடுதல் குழுவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் கண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான், இந்தத் தாக்குதலுக்குக் காரணம்” என்றார்கள்.

மகன் தாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக சிறைக்குச் சென்றனர், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும், தந்தை குயில்தாசனும். அற்புதம்மாளிடம் பேசினோம். “என் மகன் 25 வருஷமா சிறையில இருக்கான். அவன் நலமோடு விடுதலையாகி வருவான்னு எதிர்ப்பார்த்து காத்திருக்கும்போது, இப்படியொரு சம்பவம் நடந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தச் சம்பவத்துக்கு முந்தின நாள்கூட அறிவிடம் அந்தப் பையன் நல்லா பேசியிருக்கான். மறுநாளே தாக்குற அளவுக்குப் போறதுக்கு என்ன காரணம்? இதுல எனக்கு சந்தேகம் இருக்கு. முதல்வர்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும். கடந்த ஜனவரி மாதம் பரோல் கேட்டு மனு செய்தோம். 9 மாதங்கள் ஆச்சு. விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வந்த இந்த வழக்கில், கைதியை பரோலில் அனுப்ப என்ன தயக்கம் என தெரியவில்லை” என்று கண்கலங்கினார்.

ஒரு தாயின் கண்ணீரால் முதல்வரின் மனம் கரையுமா?

http://www.vikatan.com/juniorvikatan/2016-sep-21/crime/123501-perarivalan-attacked-in-vellore-prison.art

  • தொடங்கியவர்

'சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்...!'  -பேரறிவாளன் தாக்குதல் பின்னணி  

arivu%20hospital.jpg

வேலூர் சிறையில் தாக்குதலுக்கு ஆளான பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ' கொலைவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அவருக்கு நெருக்கமான சிலர் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் பேரறிவாளன்' என்கின்றனர் சிறை அதிகாரிகள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி வட மாநில கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர், இரும்புக் கம்பியால் பேரறிவாளனைக் கடுமையாகத் தாக்கினார். இதில், கை, கால் மற்றும் தலைப் பகுதியில் கொடும் காயத்திற்கு ஆளானார். சிறை வாழ்க்கையால் சிறுநீரகத் தொற்று, நரம்பு, மூட்டு பிரச்னை மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் பேரறிவாளனை குறிவைத்து நடந்த இந்தத் தாக்குதல் சிறை வட்டாரத்தை மட்டுமன்றி, அரசியல் கட்சிகளையும் அதிர வைத்தது. இதையடுத்து, ' தன் மகனை பரோலில் விட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தில் மனு கொடுத்தார் அற்புதம் அம்மாள். 

மருத்துவ சிகிச்சை முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு, தாக்குதல் குறித்துக் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் மனித உரிமை ஆர்வலர் ஒருவர், " ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். இதற்காக, 25 ஆண்டுகளாக தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார் அற்புதம் அம்மாள். அண்மையில், ஏழு பேர் விடுதலையை எதிர்நோக்கி பேரணியில், கட்சி சார்பில்லாமல் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏழு பேர் விடுதலையை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியொரு கொடூர தாக்குதல் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 

தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ் கண்ணா என்ற கைதி, அடிக்கடி பேரறிவாளன் கொட்டடிக்கு வந்து, சகஜமாகப் பேசக் கூடியவர்தான். ஆனால், தாக்குதலுக்கு முன்பான ஒரு வாரம் முழுவதும் பேரறிவாளனுக்கு நெருக்கமான இரண்டு கைதிகள் அறையிலேயே ராஜேஷ் கண்ணா இருந்துள்ளார். அவர்கள்தான், பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள். அந்த இரண்டு சக கைதிகளோடு சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், அவர்களோடு நட்பு பாராட்டியே வந்தார். இந்த வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என நினைத்திருந்தால், சிறை நன்னடத்தை விதிகளின்படி பேரறிவாளன் எப்போதோ வந்திருக்க முடியும். ' ஏழு பேரும் ஒன்றாகத்தான் வெளியில் வருவோம்' என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

' நம்மை விடுவிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், அரசுக்கு எதிராக நளினி போன்றவர்கள் தொடுக்கும் வழக்குகளால் சிரமம்தான் ஏற்படுகிறது. எந்த வழக்கு போட்டாலும், ' உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது' என்ற ஒற்றைச் சொல்தான் வெளியில் வருகிறது. எனவே, அரசுக்கு எதிரான வழக்குகள் வேண்டாம்' என்பதுதான் பேரறிவாளனின் கருத்தாக இருக்கிறது. இதைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளனர். அதிலும், கொலைவெறியோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைதி ராஜேஷ் கண்ணாவிடம், ' உனக்கு எதிராக சிறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதே பேரறிவாளன்தான்' என அவரைத் தூண்டிவிட்டுள்ளனர். 

தாக்குதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் பேரறிவாளன். ' இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா? நண்பர்களே இவ்வாறு செய்தால், எதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்? சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்' எனக் கதறி அழுதிருக்கிறார். நரம்பு, மூட்டு பிரச்னைகளுக்கு மருந்து சாப்பிடும்போது, வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. தாக்குதலுக்குப் பின்னர் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்து வருகிறார் பேரறிவாளன்" என்றார் வேதனை கலந்த முகத்துடன். 

http://www.vikatan.com/news/tamilnadu/68597-shocking-reasons-behind-for-perarivalan-attack-in-prison.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.