Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் தீர்வு இனஅழிப்புத்தான்

Featured Replies

இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை அழிப்பது தான் என்பதை சிங்கள் தேசம் மீண்டும் ஒரு முறை நடைமுறைப்படுத்தத்தொடங்கி விட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதன் வெளிப்பாட்டைத்தான் மன்னார் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீதான தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது. இத்தாக்குதலானது இன அழிப்பு நோக்கில் சிறிலங்கா பேரின வாதிகளால் நன்றாகத் திட்டமிட்டப்பட்டு மேற் கொள்ளப் பட்டுள்ளது. இத்தாக்குதல் மேற் கொள்ளப் படுவதற்கு முதல் நாள் அதாவது கடந்த ஜனவரி முதலாம் நாள் சிறிலங்காப் படைதுறைப் பேச்சாளர் ஒருவர் மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தளம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்திருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளின் தளங்கள் எவையும் மக்கள் குடியிருப்புப்பகுதிகளில் இருப்பதில்லை என்பது சகலரும் அறிந்த விடயம்.

இந்தக் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன் பின்னர், தாக்குதல் நடத்தப் படுவதற்கு முதல் நாள் இவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. மறு நாள் 02 ஆம் திகதி செவ்வாய் கிழமை மன்னார் மாவட்டத்தின் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தி 16 அப்பாவிப் பொது மக்களை படு கொலை செய்ததுடன் 37 வரையான மக்களையும் காயப்படுத்தி உள்ளனர். அத்துடன் இக்கிராமத்தை முற்றாகவே அழித்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் யாழ்ப்பாணம் நவாந்துறைப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனவக் குடும்பங்களே இந்தப் படகுத்துறைக் கிராமத்தில் தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக குடியமர்த்தப்பட்டனர். நாளாந்தம் கடற்றொழிலை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று அழிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படகுத்துறை கிராம மக்கள் வழமை போல தமது நாளாந்தக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை காலை 9.30 மணிக்கு மூன்று கிபீர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதலை மேற் கொண்டனர். இதில் 37 வரையான பொது மக்களின் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 16 வரையான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படடனர். 37 வரையானோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கிராமத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 213 பேர் வாழ்ந்த அழகிய கிராமம். கடலை நம்பி கவலை போக்கி வாழ்ந்த இவர்களின் வாழ்வை சிங்களப் பேரின வாதிகள் சிதைத்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் சகல வழிகளிலும் மிகவும் பின்தங்கிய ஒரு இடமாக மன்னார் மாவட்டம் உள்ளது. இந்தத் தாக்குதல் நடை பெற்றதும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பலவேறு பட்ட இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை அழிக்க வேண்டியவர்களை 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மன்னார் நகருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.

மன்னார் நகருக்கு அவசர நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சுலபமான ஒரு விடயமாகும். அதாவது போக்கு வரத்திற்கான வீதி மற்றும் நவீன வசதி கொண்ட மன்னார் மருத்துவமனை இதை விட மேலதிகச் சீகிச்சைக்காக வவுனியா அனுராத புரம் கொண்டு செல்லவும் முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மன்னார் பொது மருத்துவ மனையில் இருந்து இரண்டு நொயாளர் காவு வண்டிகள் தாக்குதல் நடை பெற்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மன்னாரில் இருந்து உயிலங்குளம் சோதனைச் சாவடி வரையும் வந்த நோயாளர் காவு வண்டிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்ட வில்லை. இரண்டு நோயாளர் காவு வண்டிகள் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னர் மீண்டும் மன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

காயமடைந்தவர்கள் மிகவும் மோசமான வீதிகளினூடாக சுமார் 127 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே கிளிநொச்சி மருத்துவ மனையில் மருத்துவ நிபுணர்களுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு மாவட்ட மருத்துவ மனைக்கான வசதிகள் கூட இந்தப் பொது மருத்துவ மனைக்கு இல்லையென்பது இங்கு சுட்டிக்கபட்ட வேண்டிய விடயமாகும் காலை 9.30 மணிக்கு விமானத்தாக்குதல் மூலம் காயமடைந்த ஒருவரை பிற்பகல் 5.00 மணிக்கு பின்னர் தான் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு வர முடிந்தது. அவ்வளவிற்கு வீதிச் சீரின்மை, வாகன வசதியின்மை காரணங்களாகும். இவ்வாறு சிகிச்சைக்காக எடு;த்து வரப்பட்ட தாயும் அவரது குழந்தையும் மருத்துவ மனையில் வைத்து உயிரிழந்துள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தமிழீழ விடுதலை; புலிகள் அமைப்பைச் சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை. அனைவரும் சிறுவர்களும் குழந்தைகளும் பொது மக்களுமாகும். இந்தப் படுகொலையினை சிறிலங்கா அரசு மூடி மறைக்கும் நோக்கில் பல அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றது.

கடந்து சென்ற ஆண்டில் எமது மக்கள் துன்பங்களையும் துயரங்களையும் அழிவுகளையும் சந்தித்து, பிறந்துள்ள புதிய ஆண்டில் எதிர் பார்ப்பக்களை நம்பியிருந்தனர். வருடம் பிறந்து இரண்டாவது நாள் மன்னார் இலுப்பைக் கடவையில் கத்தோலிக்க மக்கள் வாழ்ந்த இந்தக் கிராமம் முற்றாக சிங்களப் பெரினவாதிகளால் அழிக்கப்பட்டிருக்கின்றது.

இது போன்று கடந்த 1993 அம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த சந்திரிகா காலத்தில் கிளாலி கடல் நீரேரி ஊடாக பயணித்த 50 இற்கும் அதிகமான அப்பாவி பொது மக்களை படு கொலை செய்தனர். இவ்வாறு அன்றைய படு கொலையும் இன்று நடை பெற்ற படுகொலையும் இனஅழிப்பின் தொடர்ச்சியை காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சனையை அவர்கள் மீதான படுகொலைகள் மூலம் தீர்க்க அரச பயங்கர வாதம் முனைகின்றது. இவ்வாறுதான் கடந்த 1948 களில் இருந்து சிங்களப் பேரினவாதம் செய்து வருகின்றது.

இனி வரும் நாட்களில் எம்மக்கள் மீதான படு கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வழிவகுக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இவ்வாறான படுகொலைகளை நிறுத்த முடியும். இன்று படகுத்துறைக் கிராமம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் போக எஞ்சியுள்ள மக்கள் வாழ்விடங்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து அகதிகளாக அவலப் படுகிறார்கள்.

44 குடும்பங்களைக் கொண்ட 213 அங்கத்தவர்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் கொல்லப்பட்டவர்கள் படுகாயமடைந்தவர்கள் போக 168 பேர் வரை எஞ்சியுள்ளனர். இவர்களுடைய வாழ்வும் இனவாதிகளால் சிதைக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் இதற்கு முன்னர் நாவாந்துறையில் கடற்படையினரால் பலர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அதற்கு அஞ்சி தமது வாழ்வை தொடர்வதற்காக வந்து குடியேறியவர்கள்.

இவ்வாறான படு கொலைகள் தமிழர் வாழ்வில் பட்டியல்களாக நீண்டு செல்கின்றனவே தவிர அதற்கான தீர்வு அல்லது தடுப்பதற்கான வழி வகைகள் எவையும் ஏற்படுத்தப் படவி;ல்லை. எனவே இவ்வாறான படு கொலைகளை தடுக்க எமக்கான பாதுகாப்பு வழிமுறையை நாம் கையிலொடுக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=18&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.