Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர்களுக்கு

Featured Replies

 

தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர்களுக்கு

 

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் புதிய தேசிய அர­சாங்­கத்தின் அணு­கு­முறை வித்­தி­யா­ச­மாக இருக்­க­வேண்டும் என்­பதே பொது­வான எதிர்­பார்ப்­பாகும். அது­மட்­டு­மின்றி தேசிய அர­சாங்­கத்தின் புதிய முயற்­சிகள் ஊடாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்­பிக்­கையும் மக்கள் மத்­தியில் உள்ள நிலையில் அந்த நம்­பிக்­கையில் ஏமாற்­றத்தை அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது.

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­கா­ரத்தில் புதிய அணு­கு­மு­றையை முன்­னெ­டுத்து நிரந்­தரத் தீர்வை அடை­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்று அக்­க­றை­யுள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். காரணம் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து முயற்­சி­களும் அணு­கு­மு­றை­மை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன. எனவே புதிய அர­சாங்கம் புதிய முறை­மையில் சிந்­திக்கும் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

ஆனால் அர­சாங்­க­மா­னது தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­ய­மைத்­துள்­ளது. அந்த அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யா­னது பிர­தான வழி நடத்தும் குழு­வையும் ஆறு நிறை­வேற்றுக் குழுக்­க­ளையும் நிய­மித்­துள்­ளது.

இந்த பிர­தான வழி­ந­டத்தும் குழு­வா­னது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தலை­மையில் இயங்­கு­கின்­றது.

அத்­துடன் அனைத்துக் கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த பிர­தான நட­வ­டிக்கை குழுவில் இடம்­பெ­று­கின்­றனர்.

இந்த வழி­ந­டத்தும் குழுவில் சிறு­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், சுமந்­திரன், டக்ளஸ் தேவா­னந்தா, மனோ கணேசன் ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் முழு­மை­யான பொறுப்பு பிர­தான வழி­ந­டத்தும் குழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆறு நிறை­வேற்றுக் குழுக்­களும் ஒவ்­வொரு விட­ய­தா­னங்­களின் கீழ் அறிக்­கை­களை தயா­ரித்து பிர­தான வழி­ந­டத்தும் குழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ளன.

எனினும் முக்­கிய மூன்று விட­யங்­களை பிர­தான வழி­ந­டத்தும் குழுவே கையாள்­கி­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம், புதிய தேர்தல் முறை மற்றும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் ஆகிய மூன்று விட­யங்­களை பிர­தான நட­வ­டிக்கை குழுவே ஆராய்ந்து வரு­கி­றது.

அதன்­படி ஏற்­க­னவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இந்த பிர­தான வழி நடத்தும் குழு ஆராய்ந்­தி­ருந்­தது. விரைவில் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம் தொடர்­பிலும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின் பிர­தான வழி நடத்தும் குழு ஆரா­ய­வுள்­ளது.

அத்­துடன் உப நிறை­வேற்றுக் குழுக்­களின் விட­ய­தா­னங்கள் குறித்த அறிக்கை மற்றும் பிர­தமர் நிய­மித்­தி­ருந்த மக்கள் கருத்­த­றியும் புத்­தி­ஜீ­விகள் குழுவின் அறிக்கை என்­ப­ன­வற்­றையும் தாம் ஆராய்ந்த மூன்று பிர­தான விட­யங்­களின் முடி­வையும் கொண்டே இந்த பிர­தான வழி நடத்தும் குழு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரைபை தயா­ரிக்­க­வுள்­ளது.

அந்­த­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின் பிர­தான வழி­ந­டத்தும் குழு­வா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை தயா­ரிப்­பது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை கடந்த 7 ஆம் திக­தி­முதல் ஆரம்­பித்­துள்­ளது.

அதன்­படி இது­தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்­கான திக­தி மற்றும் நேரம் தொடர்­பாக இந்த முத­லா­வது சந்­திப்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி அடுத்­து­வரும் வாரங்­களில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை தயா­ரிப்­பது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின் பிர­தான குழு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

இதே­வேளை பிர­தான நட­வ­டிக்கை குழுவின் கீழ் செயற்­ப­டு­கின்ற ஆறு நிறை­வேற்றுக் குழுக்­களில் அதி­க­மான குழுக்கள் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள விட­ய­தானம் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­களை பிர­தான வழி­ந­டத்தும் குழு­விற்கு சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் பிர­தமர் நிய­மித்த மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்­கையை இந்த பிர­தான வழி­ந­டத்தும் குழுவே ஆராய்ந்து வரு­கி­றது. அதன்­படி இந்தக் குழுவே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் உள்­ளிட்ட அர­சி­ய­ல­மைப்பு வரைபை தயா­ரிக்கும்.

அந்­த­வ­கையில் இந்த பிர­தான வழி­ந­டத்தும் குழு­வா­னது தற்­போது முக்­கி­ய­மான ஒரு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்தக் குழுவில் உள்ள 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமர்ந்து தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி இறுதி தீர்­மா­னத்தை எடுக்­கப்­போ­கின்­றனர். அது எவ்­வ­கை­யாக இருக்கும் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்­க­வேண்டும்.

எவ்­வா­றெ­னினும் மிக நீண்­ட­கா­ல­மாக அர­சியல் தீர்வு ஒன்­றுக்­காக குரல்­கொ­டுத்­து­வரும் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை தயா­ரிப்­பது குறித்து அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி நடத்தும் குழு­வா­னது கவனம் செலுத்­த­வேண்டும்.

இந்த நாட்டின் எதிர்­கால தலை­வி­தியை தீர்­மா­னிக்கும் பொறுப்பு இந்த பிர­தான வழி நடத்தும் குழு­விடம் இருக்­கின்­றது. குறிப்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன், மனோ கணேசன் உள்­ளிட்டோர் இந்த பிர­தான வழி நடத்தும் குழுவில் அங்கம் வகிப்­ப­தா­னது பாரிய நம்­பிக்­கையை தரு­வ­தாக அமை­கின்­றது.

அது மட்­டு­மின்றி எப்­போ­துமே தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் தனது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ளாத பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா மற்றும் எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போதும் ஆளும் கட்­சிக்கு மாறி­ய­போதும் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்வே அவ­சியம் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இந்த பிர­தான வழி நடத்தும் குழுவில் இருக்­கின்­ற­மையும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை அதி­க­ரித்­துள்­ளது.

தற்­போ­தைய நிலை­மையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் இயங்கும் பிர­தான வழி நடத்தல் குழு­வா­னது ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை தற்­போது பெற்­றுக்­கொண்­டுள்­ளது. அத்­துடன் பிர­த­ம­ரினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த லால் விஜே­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் கருத்­த­றியும் குழு­வா­னது தனது அறிக்­கையை இந்த பிர­தான வழி நடத்தல் குழு­விடம் கைய­ளித்­துள்­ளது.

அதன்­படி பிர­தான வழி நடத்தல் குழு­வா­னது தான் ஆராயும் மூன்று பிர­தான விட­யங்­களின் முடி­வு­க­ளையும் ஆறு உப நிறை­வேற்றுக் குழுக்­களின் அறிக்­கை­க­ளையும் மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்­கை­யையும் ஆராய்ந்து புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரை­பை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

எனவே புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காணும் விட­யத்தில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும். குறிப்­பாக தற்­போது பிர­தான வழி நடத்தல் குழுவின் பரி­சீ­ல­னையில் இருக்கும் மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்­கை­யா­னது பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அதா­வது ஒரு சில தரப்­பினர் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் ஒரு சில தரப்­பினர் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டக்­கூ­டாது என்றும் யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்­தனர். அவை அனைத்­தையும் மக்கள் கருத்­த­றியும் குழு­வா­னது தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்து பிர­தான வழி நடத்தும் குழு­வா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரைபை முன்­வைக்­க­வுள்­ளது. அந்த வரை­புக்கு பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்டும்.

ஆனால் இவ்­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடு­வதில் சில சிக்­கல்கள் ஏற்­ப­டலாம் என்று பிர­தான வழி நடத்தும் குழுவின் பிர­தி­நிதி ஒருவர் குறிப்­பி­டு­கின்றார். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரைபை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடும்­போது அதில் பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும். உதா­ர­ண­மாக தேர்தல் முறை மாற்றம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் போன்­றன அதில் உள்­ள­டங்­கலாம்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே சிக்­கல்கள் தோன்­றலாம். உதா­ர­ண­மாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வாக்­க­ளிக்கும் மக்கள் அர­சி­ய­ல­மைப்பு வரைபில் காணப்­படும் நிறை­வேற்று அதி­காரம் ஜனா­தி­பதி முறை மாற்­றத்தை விரும்­பலாம். மறு­புறம் தேர்தல் முறை மாற்­றத்தை எதிர்க்­கலாம். அதனால் அவர்­க­ளினால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பின்­போது தீர்க்­க­மான முடி­வுக்கு வர முடி­யாமல் போகலாம்.

எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடு­வதில் நடை­முறைச் சிக்­கல்கள் எழலாம். அதனால் இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ண­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் கீழ் இயங்கும் பிர­தான வழி நடத்தல் குழுவின் உறுப்­பினர் ஒருவர் சுட்­டிக்­காட்­டு­கிறார்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்று தொடர்பில் பிர­தான வழி நடத்தும் குழு­வா­னது ஆரா­ய­வேண்டும்.

இது­வரை காலமும் தயா­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­களில் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை உறு­திப்ப­டுத்தும் தீர்­வுத்­திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. கடந்த 1978 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பில் தீர்­வுத்­திட்டம் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் பின்னர் இந்­தி­யாவின் தலை­யீட்­டுடன் 1987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டம் சேர்க்­கப்­பட்­டது. அது மட்­டுமே அர­சி­ய­ல­மைப்பு ரீதியில் தீர்­வுத்­திட்­டத்­துக்கு துணைபோன கட்டமாகும். ஆனால் அந்த தீர்வும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக அமையவில்லை.

ஆனால் இம்முறை அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதே இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இது சிறந்ததொரு நிலையாகும். எனவே இந்த நிலை உரிய முறையில் செயலுருவாக்கம் பெறப்படவேண்டும். குறிப்பாக கடந்த காலங்களில் விடுபட்ட தவறுகளிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக கூறுவது என்றால் அரசாங்கமும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலான யோசனையை பிரதான வழி நடத்தல் குழுவுக்கு சமர்ப்பித்திருக்கலாம். அதனையடுத்து அந்த இடத்திலிருந்து பிரதான வழி நடத்தல் குழு தீர்வுத்திட்டம் குறித்து பேச்சுக்களை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் அரசாங்கமும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே அதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. எவ்வாறெனினும் தீர்வு குறித்து ஆராயவுள்ள பிரதான வழி நடத்தல் குழுவானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து கவனம் எடுக்கவேண்டியது முக்கியமானதாகும்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=17/09/2016

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்ததிட்டத்தை அவச அவசரமாக மேடையேற்றி போர்குற்ற விசாரணைக்கு சர்வதேச அனுசரணை வேவையற்றது என்ற நிலைப்பாட்டை தமிழர் தரப்பிலிருந்தே வரவழைப்பதன் மூலம் ஐநாவின் நெருக்குவாரங்களிலிருந்து தப்பிக்க வழிதேடுகிறது சிங்கள அரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.