Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்", இந்தியர்களின் முதலைக் கண்ணீர்!!!!

Featured Replies

கடந்த சனியன்று எனது வீட்டு அருகில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான தலைமுடி வெட்டும் கடைக்கு தலையை மேலால எடுக்க சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள் உட்பட பத்து வட இந்தியர்கள் இருந்திருப்பார்கள். போனது தொடக்கம் முடியும் வரை கட்டிப்பிடித்து அழாத குறையாக விம்மிக் கொண்டிருந்தார்கள். என்ன???? "பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்". அரை மணி நேரம் தலையை குடுத்துக் கொண்டிருந்த எனக்கோ பொறுமை இழந்து "இந்தியர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாடம்" என்றேன். "ஏன்?" என்றார் ஒருவர். நானோ "இந்தியாவில் இல்லாத இனவாதமா??, மொழி வாதாமா? சாதியமா? ... " என்று ஒரு பட்டியல் போட்டேன்.எப்படி இந்தியாவில் சாதி என்ற மிருகம் தலை விரித்தாடுகின்றதை மெல்லமாக விட்டு விட்டு, வீடு வந்தேன். ஒரு சிறிய திருப்தி!!

பிரித்தானியாவில் சனல் 4 நடத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் இந்த சில்பா கலந்து கொண்டிருக்கும் "பிக் பிரதர்". அந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சில்பா செட்டி "போலியாக" நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இக்குற்றச்சாட்டை இந்தியர்களின் "சன்றைஸ்" ரேடியோவிலும் பலர் இந்தியர்களாலேயே கூறப்பட்டது. அதற்கு மேல் அந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பல பிரட்சனைகளுக்கு எண்ணை ஊற்றி எரிய விட்டதும் சில்பாதான்! ஆனால் பின்பு சில இனவாதம் சம்பந்தமான பிரட்சனைகள் வந்தது உண்மைதான்.

அதற்காக இங்குள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர், பிரித்தானிய பாராளுமன்றத்தில் மனு கொண்டுவருமளவிற்கு ஒன்றும் நடந்து விடவில்லை. மாறாக இவர்களின் இச்செயல்கள் இங்கு இனவாதத்தை தூண்டுவதாகவே உள்ளது.

* இந்தியாவில் இனங்கள், மதங்களிற்கிடையில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், பிரித்தானியாவில் இனவாதமென்று கூக்குரலிட இந்தியர்கள் அருகதை உடையவர்களா?????

* சொந்த நாட்டினுள் உள்ள மக்களையே "தொடக்கூடாதர்கள்" என்ற ஒரு சாதிக்குள் அடக்கி கூத்தாடும் இவர்களா இனவாதம் பற்றிக் கதைப்பது????

இது இந்தியர்களின் முதலைக் கண்ணீர் ஒழிய வேறொன்றுமில்லை!!!! இந்தியாவில் இல்லாததை பிரித்தானியாவில் எதிர் பார்க்கிறார்கள்!!!! மிகப் பெரிய வேடிக்கை என்னவென்ரால் இந்தியாவை சகிப்புணர்வு/ நட்புணர்வு/சகோதரத்துவ உணர்வுள்ள தேசமாக இந்நிகழ்ச்சியின் பின் ஜோடிக்க முயல்கிராகள். இந்நிகழ்ச்சியால் இந்தியர்களின் மனங்களெல்லாம் புண்பட்டு விட்டதாம்!!!! புண்பட்டதற்கு மருந்து கட்ட இங்குள்ள பொய்யூடகங்களும், அரசியல் பொய்யர்களும்!!!!! .....ம்ம்ம்ம்ம்... விட்டால் இன்னும் விடுவாஙகள்!!!

"தன்னை திருத்திக் கொள், சமுதாயம் தானே திருந்துமாம்", அப்படி முதலில் "பாரதமாதாவின் புதல்வர்கள் தங்களைத் திருத்தட்டும், உலகம் தானே திருந்தும்"!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தினனியம் என்ற இடத்தில் தலித் துகளை மலம் தின்ன வைத்த கொடுமையையையும் கவுண்டன் பட்டியில் மூத்திரம் குடிக்க வைத்த வேதனையையும் பேசாத இந்திய பெரிமிதம் இருந்தென்ன? இறந்தென்ன?

சில்பா செட்டியின் நிகழ்ச்சி மூக்கால் வழிந்து முக்கால் பக்கம் கருத்து எழுதின ஒரு பேப்பர் என்னவோ ஆனான ஆடுகள் தவிடு புண்ணாக்குக்கு அலைய இந்த ஆடு என்னத்துகோ அலைஞ்சதாம்....

இந்தியாவின் பொருளாதாரம் படு வேகமாக வளர்கிறது. அதனால் அதன் சந்தையும் வளர்கிறது. சந்தை வளர்ந்தால் வியாபாரிகளிற்கு தேவையான இடமாகி விடும்.

அதுபோக சீனாவை விட மேற்குலம் இந்தியாவை தன்னால் ஒரளவேனும் கட்டுப்படுத்தக் கூடிய ஒத்துழைக்கக் கூடிய பொது நலன்கள் சவால்களை கொண்ட நேச சக்த்தியாக எதிர்கால வல்லரசாக பார்க்கிறது.

மேற்குல மீடியா நிறுவனங்கள் இந்தியாவின் வழர்ந்து வரும் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வின் ஒரு பங்கை தமதாக்கிக் கொள்ள முனைவார்கள். பிக்பிரதர் இந்தியாவில் விரைவில் தொடங்கினால் ஆச்சரியம் இல்லை. உல்டா நிகழ்ச்சிகள் அல்ல உண்மையா பிக்பிரதர் நிறுவனத்தின் நிகழ்வு.

பிரித்தானியாவும் சில்பா விடையத்தை கொஞ்சம் தூபமிடுவதும் அதற்கு பாராளமன்றம் வரை இடங் கொடுப்பதும் மக்கள் அபிப்பிராயத்தில் இந்தியாவின் நேச சக்தியாக காட்ட அதை மேலும் பலப்படுத்த. அதாவது நாங்கள் இந்தியர்களின் (உயர் தர ஆளும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களின்) உணர்வுகளை மதிப்பளித்து நடந்து கொள்பவர்கள் என்று காட்டிக் கொள்ள. இது இந்தியாவோடு உயர்நிலை உறவுகளை பலப்படுத்த கீழ் நிலையில் போடப்படும் அத்திவாரம்.

சில காலத்திற்கு முன்னர் (2005 என நினைக்கிறேன்) செய்த ஒரு ஆய்வில் அமெரிக்காவிற்கு வெளியில் அதிக அமெரிக்க ஆதரவு மக்கள் அபிப்பிராயம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. கவனிக்கவும் பல மேற்குல நாட்டு மக்களிடம் கூட இல்லாத இந்த ஆதரவுத் தொனி இந்தியாவில் அவதானிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளும் இந்தியாவின் ஏனைய ஆளும் வர்க்க முடிவுகளிற்கும் பட்டி தொட்டியில் பிறப்பாலே சாதி அடிப்படையில் மலம் அள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுபவர்களிற்கு பங்கு இருக்குமா? இன்று அல்ல எதிர்காலத்திலும் தான்.

மலம் அள்ளி வாழ்கையை ஓட்டுமாறு நிர்ப்பந்திக்கபடுபவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். மேக்கப் கலையாது ரிசுவால் மென்மையாக ஒத்தி ஒத்தி இனவாதம் பற்றி அழுபவர்களும் ஓகோ என்று தமது வாழ்க்கையை இன்னும் வளமாக ஓட்டிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote name='தலித்' date='Jan 24 2007, 11:57 AM' post='252879']

இந்தியாவில் தினனியம் என்ற இடத்தில் தலித் துகளை மலம் தின்ன வைத்த கொடுமையையையும் கவுண்டன் பட்டியில் மூத்திரம் குடிக்க வைத்த வேதனையையும் பேசாத இந்திய பெரிமிதம் இருந்தென்ன? இறந்தென்ன?

சில்பா செட்டியின் நிகழ்ச்சி மூக்கால் வழிந்து முக்கால் பக்கம் கருத்து எழுதின ஒரு பேப்பர் என்னவோ ஆனான ஆடுகள் தவிடு புண்ணாக்குக்கு அலைய இந்த ஆடு என்னத்துகோ அலைஞ்சதாம்....

ஓம்.......இந்த சில்பா சட்டி தான் இப்ப எங்கள் தாயகத்து அவசர மனிதாபிமான பிரச்சினை கண்டியளோ!

Edited by mathuka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.