Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு

Featured Replies

ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு

 

சென்னை: அதிமுகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் உள்ளதாகவும் அவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடையும் எனவும் சூசகமாக கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.

 

நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: அ.தி.மு.க.வில் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் ஒரு இறுக்கமான சூழல் இருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்: கட்சிக்காக உழைச்சவங்களை ஓரங்கட்டிவிட்டு, "பேக்கேஜ் பேசிஸ்'ல கட்சியை நடத்துனா தொண்டர்கள் இறுக்கமாகத்தான் இருப்பாங்க. கட்சியில 80 சதவீதம் பேர் சசிகலா வகையறாக்களைப் பிடிச்சி உள்ளே வந்துடுறாங்க.

22-1474545607-sasikala-pushpa--1210-600.jpg

ஓபிஎஸ்

நேர்மையா உள்ளே வர்றவங்களால முதல்வரை அணுக முடியலை. பல விதமான குடைச்சல்கள். ஓ.பி.எஸ். அண்ணாச்சி இருக்கார். அவர் மீது கோபம் வந்தது. ஓரங்கட்டினாங்க. ஆனா, டக்குன்னு பிடிக்க வேண்டியவங்கள பிடிச்சாரு மீண்டும் பெரிய ஆளாயிட்டாரு.

22-1474545638-natham-viswanathan-515-600.jpg

நத்தம்

நத்தம் விஸ்வநாதனை வெளியேத்துறாங்க. அப்புறம் முக்கியத்துவம் கிடைக்கும். குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு. சசிகலா வகையறாக்களின் ஊழல்கள், அரசியல் தலையீடுகள் நிறைய இருக்கு. முதல்வர் இதை ரிவியூ பண்ணணும்.

22-1474545616-sasikala-pushpa-12121-600.jpg

 

அதிருப்தி எம்எல்ஏக்கள்

கேள்வி: ஆளுங்கட்சியில் அதிருப்தியாக உள்ள எம்.எல்.ஏ.க்களை வைத்து அ.தி.மு.க.வை உடைக்க திட்டமிடுகிறீர்களாமே?

பதில்: உடையுமா? உடைக்கப்படுமாங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த வேலையும் எனக்கு தெரியாது. ஆனா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நிறைய அதிருப்திகள் இருக்கு. அப்படிப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னிடம் பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க.

22-1474545629-sasikala-pushpa456-600.jpg

  வரலாறு பேசும் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வரும்போது, அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு வந்துட்டா சின்னம்மா கும்பலிடம் கட்சி போய்டுமே, அப்படிப்போனா அவ்வளவுதான்னு ஆதங்கத்துல நிறைய பேர் இருக்காங்க. அதனால, பொறுத்திருந்து பாருங்க, வரலாறு பேசும். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.  

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-faces-split-says-sasikala-pushpa-263452.html
 

  • தொடங்கியவர்

என்னுடைய ஆட்டம் இனிமேல்தான்.. சம்பந்தப்பட்டவர்களால் தாங்க முடியாது.. சசிகலா புஷ்பா மிரட்டல்!

 

 

 சென்னை: தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியில் போட்டுடைக்கும்போதுதான் தம்முடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும்; அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கவே முடியாது என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

 

நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கேள்வி: உங்களுக்கு எம்.பி. பதவியைக் கொடுத்த ஜெயலலிதாவே, பதவியை ராஜினாமா செய் என உத்தரவிட்டும் நீங்கள் செய்யாதது கட்சித் தலைமைக்கு செய்யும் துரோகமில்லையா?

பதில்: நான் எதுக்கு மனசாட்சிக்கு விரோதமா நடந்துக்கணும்? என்னுடைய உழைப்புக்காக கொடுக்கப்பட்ட பதவியை நான் எதுக்கு இழக்கணும்? சசிகலா மாதிரி சிலர் இருக்காங்க. வீட்டை விட்டு போன்னு சொன்னா போய்டுவாங்க. அப்புறம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துட்டு வந்துடுவாங்க.

22-1474547607-sasikala-pushpa-aiadmk-600.jpg

ஜெ.வைவிட உழைத்திருக்கிறேன்

அதை நாங்க பண்ண முடியாது. தலைமையை விட அந்த கட்சிக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன். அதனால துரோகம் பண்ணிட்டேன்னு யாரும் என்னை குற்றம்சாட்ட முடியாது.

22-1474547598-sasikala-pushpa34.jpg

 

துரோகப் பட்டியல் இது..

நம்பி வந்தவங்களுக்கு துரோகம் செய்றது அவங்களுக்குத்தான் பழக்கம். சட்டமன்றத்துல அவங்களை (ஜெ.) அவமானப்படுத்திய வீரபாண்டி ஆறுமுகத்தை அடித்து மூக்கை உடைத்த தாமரைக்கனியையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து கேவலப்படுத்தி அனுப்பியது, சாத்தான்குளம் மற்றும் சைதாப்பேட்டை இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்த வெங்கடேசப்பண்ணையாரை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது என துரோகம் செய்தது அவங்கதான்.

22-1474547587-sasikala-pushpa-01-600.jpg

பின்னணியில் யார்?

கேள்வி: அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை. ஆனா, உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த துணிச்சலுக்கு காரணம், தி.மு.க. எம்.பி. கனிமொழியும், தொழிலதிபர் வைகுண்டராஜனும் கொடுத்து வரும் ஆதரவும், பா.ஜ.க. தலைவர்களின் ஒத்துழைப்பும்தான் என்று சொல்லப்படுகிறதே?

வைகுண்டராஜன் ஒரு தொழிலதிபர். அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. கனிமொழி, தி.மு.க. என்கிற ஒரு பெரிய இயக்கத்தின் மகளிர் அணிச்செயலாளர். அந்த கட்சியின் எம்.பி.யாகவும் இருக்கிறார். அவர்களுக்கும் அரசியல் ரீதியாக ஏகப் பட்ட பணிகள் இருக்கு. அப்படிப்பட்ட நிலையில், என்னை இயக்க வேண்டிய அவசியம் அவங்களுக்கு எதுக்கு?  

22-1474547574-sasikala-pushpa456.jpg

  சொல்லாத ரகசியங்கள்...

எனக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் பலரும் உண்மையைக் கேட்டிருக்காங்க. இன்னும் சொல்லாத பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆட்டம் அப்ப ஆரம்பிக்கும்... அதையெல்லாம் போட்டுடைக்கும்போதுதான் என்னுடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும். அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கமுடியாது! இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-warns-admk-leaders-263456.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.