Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

Featured Replies

சென்னை விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

 

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பி.பெஞ்சமின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பி.பெஞ்சமின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பத்தகம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு மாரியப்பன் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை தமிழக இளைஞர் நலன், விளை யாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின், விளையாட்டுத் துறை அதிகாரிகள், பாராலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பூங்கொத்துகளை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர் களிடம் மாரியப்பன் கூறியதாவது:

பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர், எனக்கு ஊக்கமளித்த தாய், சகோதரர்கள், பள்ளி, கல்லூரி ஆசரியர்கள், நிர்வாகத்தினர் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அடுத்து வரும் 2020, 2024 பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பதே எனது லட்சியம். இந்த லட்சியத்தை அடைய தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகை உதவியாக இருக்கும்.

உடலில் ஏற்படும் குறைபாடுகள் சாதனை படைக்க ஒரு தடையல்ல. மன தைரியத்துடன் முயற்சிகளை மேற்கொண்டால் மாற்றுத் திறனாளிகள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பாராலிம்பிக் போட்டியில் வீரர்கள் பங்கேற்க அதிக முக்கியத்துவமும், ஊக்கமும் அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

அரசுப் பணி

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், பாராலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், நாட்டுக்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார். அவர் கோரிக்கை விடுத்தால் குரூப் 1 நிலையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-விமான-நிலையத்தில்-மாரியப்பனுக்கு-உற்சாக-வரவேற்பு/article9141850.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

சேலம் குலுங்க... குலுங்க...!'- மாரியப்பனை சிலிர்க்க வைத்த சொந்த ஊர்

Mariyappan%20native%202.jpg

பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் இன்று சொந்த ஊர் சென்றார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அண்மயில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையுடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து மாரியப்பன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்து இறங்கினார்.

Mariyappan%20native%201.jpg

விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பா.பெஞ்சமின், தமிழக விளையாட்டு துறை செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளியே வந்த அவருக்கு, நேரு விளையாட்டு அரங்கில் இருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், "இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் தங்கப்பதக்கம் வென்று தந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த மத்திய-மாநில அரசுகள், மத்திய விளையாட்டு ஆணையம், இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம், பயிற்சியாளர், பெற்றோர், நண்பர்களுக்கு எனது நன்றி. 2020, 2024-ம் ஆண்டுகளில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று மீண்டும் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்ப்பேன். பாராலிம்பிக் போட்டிகளில் முக்கியத்துவம் குறைவாக உள்ளது. மேலும் பலருக்கு ஊக்கம் தந்தால் பல பதக்கங்களை வெல்லலாம். சாதனை படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல" என்று கூறினார்.

Mariyappan%20native%201a.jpg

 

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த மாரியப்பனை சேலம் மாவட்ட எல்லையான தொப்பூரில் கலெக்டர் சம்பத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அங்கிருந்து தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு சொந்தமான வாகனத்தின் மேற்கூரையில் மாரியப்பன் அமர்ந்தார். அவருடன் அவரது தாயார் சரோஜா மற்றும் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். பாதுகாப்புக்கு காவலர்கள் இருவர் உடன் இருந்தார். மாரியப்பனை சாலையின் இருமடங்கிலும் நின்று பொதுமக்கள் வரவேற்றனர். நண்பர்கள், உறவினர்கள் மாரியப்பனை சிறிது நேரம் தோளில் தூக்கிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து வரவேற்புடன் சொந்த ஊர் வந்தடைந்தார். அங்கு தாரைப்தப்பட்டை முழங்கவும், மேளதாளத்துடனும் மாரியப்பனை ஊர்மக்கள் வரவேற்றனர். கிராமத்தில் மாரியப்பனின் பிளெக்ஸ் பேனர் வைத்து ஊர் மக்கள் அமர்க்களப்படுத்தினர். தங்க மகன் மாரியப்பன் வருகையால் சொந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது. 

http://www.vikatan.com/news/tamilnadu/68780-huge-celebrations-in-gold-medal-winner-mariyappans-native.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.