Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார்

Featured Replies

அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார்
2016-09-27 09:53:27

(நெவில் அன்­தனி)

 

19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான கொத்­மலை கிண்ண கால் இறுதிப் போட்­டியில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் அணி கோல் காப்­பாளர் ஏ.பிருந்­தாபன் 3 சம­நிலை முறிப்பு பெனல்­டி­களை அடுத்­த­டுத்து தடுத்து நிறுத்­தி­யதன் பல­னாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்­ப­டையில் புனித பத்­தி­ரி­சியார் அணி வெற்­றி­கொண்டு அரை இறு­திக்கு முன்­னே­றி­யது.

 

19519_DSC1276.jpg

 

சிட்டி புட்போல் லீக் மைதா­னத்தில் நேற்று பிற்­பகல் கடும் உஷ்­ணத்­திற்கு மத்­தியில் நடை­பெற்ற இப் போட்­டியின் 3 ஆவது நிமி­டத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி அணி ப்றீ கிக் மூலம் முத­லா­வது கோலைப் போட்­டது.

 

எம்.கே.எம்.பாஸில் 22 யார் தூரத்­தி­லி­ருந்து எடுத்த ப்றீ கிக்கை முறை­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட அணித் தலைவர் எம்.எவ்.எம். பந்தை அலா­தி­யாக கோலினுள் புகுத்­தினார். 

 

இதனை அடுத்து ஹமீத் அல் ஹுசெய்னி கோல் மழை பொழியும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் புனித பத்­தி­ரி­சியார் பின்­கள வீரர்கள் சிறப்­பாக தடுத்­தாடி எதி­ர­ணியின் கோல் போடும் பல முயற்­சி­களை முறி­ய­டித்­தனர்.

 

இடை­வேளை நெருங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது ஆர். ஷாந்­தனின் கோர்ணர் உதையை முறை­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட புனித பத்­தி­ரி­சியார் வீரர் எஸ். அபீஷான் பந்தை தலையால் முட்டி கோல் நிலையை 1–1 என சமப்­ப­டுத்­தினார்.

 

இடை­வே­ளையின் பின்னர் இரண்டு அணி­யி­னரும் பந்தை அங்கும் இங்கும் உதைப்­பதில் குறி­யாக இருந்­தனர். எவ்­வா­றா­யினும்  ஹமீத் அல் ஹுசெய்னி அணி­யினர் மூன்­றுக்கும் மேற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் எதி­ர­ணியின் கோல் வாயி­லுக்கு அருகில் சென்ற போதிலும் கோல் போடும் வாய்ப்­பு­களை கோட்டை விட்­டனர்.

 

1951934.jpgமறு­மு­னையில் புனித பத்­தி­ரி­சியார் முன்­கள வீரர்கள் ஓவ் சைட் வலையில் சிக்­கி­யதால் அவர்­களால் வெற்றி கோலைப் புகுத்த முடி­யாமல் போனது. 
போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது கோல் நிலை 1–1  என சம­நி­லையில் இருந்­ததால் மத்­தி­யஸ்தர் பெனல்டி முறையை அறி­மு­கப்­ப­டுத்­தினர்.
இதில் 3 க்கு 1 என்ற கோல் அடிப்­ப­டையில் புனித பத்­தி­ரி­சியார் வெற்­றி ­பெற்று அரை இறு­திக்கு முன்­னே­றி­யது.

 

1951934.jpg

 

புனித பத்­தி­ரி­சி­யாரின் கடைசி பெனல்­டியை ஹமீத் அல் ஹுசெய்னி கோல்­காப்­பாளர் மகேந்­திரன் தினேஷ் தடுத்து நிறுத்­தி­ய­போ­திலும் அவர் விதி­க­ளுக்கு முர­ணாக கோல் கோட்­டுக்கு முன்னால் நகர்ந்து பந்தை தடுத்தார் என மஞ்சள் அட்டை காட்­டிய மத்­தி­யஸ்தர், மீள் பெனல்­டியை வழங்­கினார். மீள் பெனல்­டியை கோலினுள் புகுத்­திய ஆர். ஷாந்தன், யாழ். பத்­தி­ரி­சியார் அணியின் வெற்­றியை உறுதி செய்தார்.

 

இத­னி­டையை தினேஷ் ஒரு பெனல்­டியை தடுத்து நிறுத்­தி­ய­துடன் புனித பத்­தி­ரி­சியார் கோல்­காப்­பாளர் பிருந்­தாபன் 3 பெனல்­டி­களைத் தடுத்து நிறுத்தி அணியின் ஹீரோ­வானார்.

 


இன்­றைய இரண்­டா­வது கால் இறுதிப் போட்­டியில்
திருச்­சி­லுவை, புனித ஜோசப் வாஸ் அணிகள்

 

இச்­சுற்­றுப்­போட்­டியில் இரண்­டா­வது கால் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

சிட்டி லீக் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இப் போட்டியில் களுத்துறை திருச்சிலுவை அணியும் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் அணியும் விளையா டுகின்றன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19520#sthash.9eAylxkd.dpuf
  • தொடங்கியவர்

கொத்மலை சொக்ஸ் கிண்ணம் ; அரையிறுதிக்கு முன்னேறியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி

 

கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கெதிராக இடம்பெற்ற கொத்மலை சொக்ஸ் கால்ப்பந்தாட்டத்  தொடரின் காலிறுதிப் போட்டியில், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி பெனால்டி முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

jaffna-SPC.jpg

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கொத்மலை சொக்ஸ் கால்பந்தாட்ட தொடரின்  முதலாவது காலிறுதிப் போட்டி நேற்று சிற்றி லீக் மைதானத்தில் இடம்பெற்றது.

 

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா ஏழு அணிகள் போட்டியிட்டன. 

 

அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் மோதின. நான்கு குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப்பெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின.

SPC-jaffna.jpg

அந்தவகையில் நேற்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப்போட்டியில் குழு “டி” யில் இடம்பிடித்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி  அணியும், குழு “ஏ” யில் இடம்பிடித்த கொழும்பு ஹமீத் அல்-ஹுசெய்னி கல்லூரி அணியும் ஒன்றையொன்று சந்தித்தன.

SPC.jpg

போட்டி ஆரம்பமாகியது முதல் ஆட்டம் விறுவிறுப்பாக இடம்பெற்றது. போட்டியின் 3 ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணிக்கு  ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. 

ஹமீத் அல் ஹுசெய்னி வீரர் கரீம் பாசில் பந்தை உதைய, அதனை அணித்தலைவர் அமான் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச் செய்தார்.

sss.jpg

ஹமீத் அல் ஹுசெய்னி வீரர்கள் மேலும் கோல் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும் புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பின் கள வீரர்களின் சிறப்பான செயற்பாட்டால் அம் முயற்சிகள் கைகூடவில்லை.

 

ஆட்டத்தின் முதல் பாதியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், மேலதிக நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு கோணர் உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. 

பத்திரிசியார் அணி வீரர்  ஆர். ஷாந்தன் கோணருக்கான பந்தை உயர்வாக செலுத்த அதனை  அபீஷான் தலையால் முட்டி கோலாக மாற்றி அணியின் நிலையை சமப்படுத்தினார்.

 

பின்னர் தீர்மானம் மிக்க இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும் தமது அணிக்கான வெற்றிக் கோலைப் போடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அந்த வாய்ப்புகள் எதுவும் கைகூடவில்லை.

ssa.jpg

எவ்வாறிருப்பினும் இரு அணியினரும் இரண்டாவது பாதியில் எந்த கோல்களையும் போடவில்லை. எனவே போட்டியின் வெற்றிதோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி உதைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 

 

புனித பத்திரிசியார் அணியின் கோல்காப்பாளர் பிருந்தாபன் சிறந்த முறையில் 3 பெனால்டி உதைகளை தடுத்து நிறுத்த, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 3-1என பெனால்டி முறையில் வெற்றிபெற்றது.

 

 

இந்த வெற்றியின் மூலம் கொத்மலை சொக்ஸ் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகிய முதல் அணியாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி திகழ்கின்றது.

இப் போட்டியின் சிறந்த வீரராக சிறப்பாக பெனால்டி உதைகளை இலவகமாக தடுத்து வெற்ளிக்கு வித்திட்ட புனித பத்திரிசியார் அணியின் கோல் காப்பாளர் பிருந்தாபன் தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/11799

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.