Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல்

Featured Replies

ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல்

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள்.

 

ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

 ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இந்த 90 நிமிட நேரம் நடந்த ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது.

ஹிலரி கிளிண்டன் அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

 

ஹிலரிக்கும், ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

 ஹிலரிக்கும், ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

மேலும், அமெரிக்க அதிபராக பதவி வகிக்கத் தேவையான பலம் ஹிலரிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் அவருடையே கனவுலகிலேயே வாழ்கிறார் என்றும் அவர் அவருடைய வருமான வரி கணக்கு விஷயத்தில் வெளியிடாமல் மறைக்கிறார் என்றும் ஹிலரி குற்றம் சாட்டினார்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ,ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த காலத்தில் அனுப்பிய 30,000க்கும் மேற்பட்ட மின்ன்ஞ்சல்களை வெளியிட்ட உடன், தான் தனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன் என்றார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தை 10 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

http://www.bbc.com/tamil/global-37480981

  • தொடங்கியவர்

‘தீவிரவாதம், இனவெறித் தாக்குதல், ஒபாமா சர்ச்சை...!’ - அனல் பறந்த ஹிலரி - டிரம்ப் நேருக்கு நேர்

hillary_vc1.jpg

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக  கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளின்டன் மற்றும் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற அனல் பறக்கும் முதல் விவாதம் நியூயார்க்கில் இன்று காலை நடைபெற்றது.   

அமெரிக்க மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை மட்டும் வேறுபட்டதல்ல, அங்குள்ள அரசியல் அமைப்பும் தேர்தல் நடைமுறைகளும்கூட வேறுபட்டதே. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இங்கு அதிபர் தேர்தல் நடைபெறும். தற்போது அதிபராக உள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடியவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
அமெரிக்காவின் இரு பிரதானக் கட்சிகளான குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையின்படி, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, அயல்நாட்டு உறவு போன்ற பல்வேறு தலைப்புகளில் நேருக்கு நேர் விவாதம் செய்வர். இந்த ஆண்டுக்கான விவாதம் நான்கு கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி முதல் விவாதம் இன்று நியூயார்க்கில் உள்ள ஹொப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில், NBC செய்தி நிறுவனத்தின் நெறியாளர் லெஸ்டர் ஹோல்ட் முன்னிலையில் 6 கட்டங்களாக மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்களைக் காணலாம்.

    1. வரிவிதிப்பு முறை

இரு அதிபர் வேட்பாளர்களுமே தற்போதைய வரிவிதிப்பு முறையில் மாற்றம் தேவையென வாதிட்டனர். “கோடீஸ்வரர்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு அதிகரிக்கப்படும்” என ஹிலரி உறுதியளித்தார். அவர் மேலும் டிரம்ப் ஏன் தனது வருமானவரிப் பற்றிய அறிக்கையை வெளியிடவில்லையென கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த டிரம்ப் ''ஹிலரி தொடர்ந்து மறைத்து வரும் 33,000 மின்னஞ்சல்களை பகிரங்கமாக வெளிட்டால், நான் எனது வருமான அறிக்கையை உடனடியாக வெளியிடத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    2. தீவிரவாதம்

''ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக்கில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் போது உருவானது. அது மேலும் சிரியாவில் காலூன்றி தீவிரவாதத்தை பரப்பி வருவதை முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் தடுக்க தவறிவிட்டார்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ஹிலரி ''நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும்'' என்றதோடு ''சிரியாவில் இருந்தும் படைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்''  என்றார்.

hillary_vc2.jpg

 

   3.  இனவெறித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரம்

அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கறுப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஹிலரி பேசியபோது, “மக்கள் மற்றும் போலீஸ் இடையேயான உறவு பலப்படும் வகையில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தவறானவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கி பறிக்கப்படும்'' என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், ''தற்போது நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு அநீதி  இழைக்கப்படுகிறது'' என்றார்.

  4.   வேலைவாய்ப்பு

''சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை பறித்துச் செல்வதை தடுத்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்'' என்று டிரம்ப் தெரிவித்தார். அடுத்துப் பேசிய ஹிலரி, ''வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாய்ப்பும், ஊழியர்களுக்கு உரிய விடுமுறையும் வழங்கப்படுவதுடன், புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


5. ஒபாமா பிறப்பு பற்றிய சர்ச்சை

ஒபாமாவின் பிறந்த இடம் பற்றிய சர்ச்சையை கிளப்பிய பின்னரே டிரம்ப் தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக்கொண்டதாக கூறிய ஹிலரி, இதன் மூலம் நமது நாட்டின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவை டிரம்ப் அவமதித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த டிரம்ப் 2008-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் போட்டியின்போது ஒபாமாவின் மீது ஹிலரி வைத்த தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டார். மேலும் அப்போதே ஒபாமாவின் பிறப்பிடம் பற்றியத் தகவலை பெறுவதற்கு ஹிலரி தவறிவிட்டதாகவும் கூறினார்.   

http://www.vikatan.com/news/world/68834-donald-trump---hillary-clinton-first-presidential-debate.art

  • தொடங்கியவர்

நிலை தடுமாறிய டிரம்ப்; அமைதி காத்த ஹிலாரி- அனல் பறந்த முதல் நேரடி விவாதம்

 

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன் விவாதத்தில் பங்கேற்பதற்கு முன் கை குலுக்கிய குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். | படம்:ஏஎஃப்பி
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன் விவாதத்தில் பங்கேற்பதற்கு முன் கை குலுக்கிய குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். | படம்:ஏஎஃப்பி

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி - டிரம்ப் கலந்து கொண்ட முதல் நேரடி விவாதத்தில் அனல் பறந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹிலாரி - டிரம்ப் பங்கேற்ற நேரடி விவாதம் நியூயார்க் நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைகழகத்தில் திங்கட்கிழமை நடந்தது.

90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. இவ்விவாதத்தில், நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பு, அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம், ஐ.எஸ். எதிர்ப்பு நடவடிக்கை,அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம்:

அமெரிக்க பொருளாதாரக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்கா வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியே செல்லாமல் இருக்கும். இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன் எல்லா தரப்பு மக்களுக்கான ஒரு பொதுவான பொருளாதாரக் கொள்கையே அவசியம் என்றார்.

பொறுமை இழந்து பேசிய டிரம்ப்:

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி பேசுகையில் அடிக்கடி இடைமறித்து பேசிய டிரம்ப், ஹிலாரி அரசு பதவியில் இருக்கும்போது நாட்டின் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். மேலும் அமெரிக்காவின் அதிபராவதற்கு போதிய திறமை அவரிடம் இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி, "டிரம்ப் என்னை குற்றஞ் சாட்டுவதற்காகவே இந்த விவாத நிகழ்ச்சிக்கு தயாராகி உள்ளார்" என்றார்.

ஓர் அதிபர் வேட்பாளரின் பேச்சுக்களே போதும், அவர் அதிபர் ஆன பின்பு என்ன செய்யப் போகிறார் என்பதை தீர்மானிக்கும்.அதுமட்டுமில்லாது டிரம்ப் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.

tru-hi_3024935a.jpg

டிரம்ப்பின் திட்டங்கள் தெளிவாக இல்லை:

டிரம்ப்பின் பெரும்பாலான யோசனைகள் இனரீதியாக உள்ளன. அகதிகள் வருவதை தடுப்பதற்கு அமெரிக்கா-மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் திட்டத்தைதான் டிரம்ப் வைத்துள்ளார். அதுதவிர அவரிடம் வேறு யோசனைகள் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிவாத அமைப்புகளை எப்படி எதிர் கொள்வது போன்ற திட்டங்கள் டிரம்ப்பிடம் இல்லை என ஹிலாரி குற்றம் சுமத்தினார்.

வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் மறைத்து வருகிறார்:

டொனால்டு டிரம்ப தனது வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் தொடர்ந்து மறைத்து வருவது ஏன் என ஹிலாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ஹிலாரி வெளியுறவுச் செயலராக இருந்த போது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீஸின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்கு ஹிலாரி நீக்கிய தகவலை வெளியிட்டால்,எனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன் என்றார்.

இவ்வாறாக ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைக்க 90 நிமிடங்களில் முதல் விவாதம் முடிந்தது.

இதனையடுத்து அடுத்த விவாத நிகழ்ச்சி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/நிலை-தடுமாறிய-டிரம்ப்-அமைதி-காத்த-ஹிலாரி-அனல்-பறந்த-முதல்-நேரடி-விவாதம்/article9153475.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

முதல்முறையாக நேருக்கு நேர்
ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக பங்கேற்ற நேருக்கு நேர் விவாதம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையள் இரண்டு பேருக்கும் இடையிலை நடந்த வாக்குவாதங்களை நாங்கள் வெற்றியாய் எடுக்கக்கூடாது கண்டியளோ.......சும்மா ஒரு பொழுது போக்காய் பார்த்திட்டு போகலாம்.

இன்னும் இரண்டு ரவுண்டு இருக்கெல்லே.....tw_blush:
தற்சமயம் சனாதிபதியாய் ரம்ப் வந்தாலுமெண்டுட்டு ரஷ்யன்காரன் சிரியாவை சாம்பலாக்கிறதிலையே கண்ணும்கருத்துமாய் இருக்கிறானாம்..tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.