Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

Featured Replies

 

போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

 

இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

டாலர்கள்

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் டாலர்கள் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரை இந்தியாவில் நடந்த மோசடிகளில் மிகப்பெரிய மோசடி இதுவென்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தானே நகர போலிசார் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை( Federal Bureau of Investigation) அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர்.

http://www.bbc.com/tamil/india-37562777

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா...

பேச்சிலயே பிடிச்சிருக்கலாமே..... இது வடக்கர்களின் வீர விளையாட்டு என்று.

750 பேரும் சொன்ன வேலையை செய்தவர்கள். அன்றாடம் காய்ச்சி, அப்பாவிகள்.

மாட்டுப்படாமல் தப்பியிருக்கக் கூடிய பெரிய சுறா, அரசியல் வாதியாக இருப்பார்.

இன்னுமோர் வேலை இவர்கள் செய்வது. கம்பூட்டர் வைரசை அனுப்பி விட்டு... கம்பூட்டர்ல பே பூந்துவிட்டது. துரத்தாவிடில் கம்பூயூட்டர் காலி என்று அது இது குய்யோ, முறையோ கத்தி, தம்மை அழைக்க வைத்து பணம் பறிப்பது.

அவ்வாறான நிலை வந்தால் தெரிந்தவர் உதவி நாடவேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை அழைக்கக் கூடாது.

£200 கம்பூட்டருக்கு, £500 பறிகொடுத்தவர்களும் உண்டு. :rolleyes:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

அமெரிக்கர்களிடம் இந்திய கால் சென்டர் கொள்ளையடித்தது இப்படித்தான்!

online_fraud1.jpg

இந்தியாவுக்கு கேட்வே என்று சொல்லப்படும் மும்பையில்தான் இப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பையில் உள்ள சில கால்சென்டர்கள் அமெரிக்க மக்களிடம் அமெரிக்க வரி ஆணைய அலுவலகத்திலிருந்து பேசுவது போல் பேசி ஒவ்வொருவரிடமும் பல ஆயிரம் டாலர்களை வசூலித்துள்ளன. இந்த மோசடி தொடர்பாக கால் சென்டர்களில் பணிபுரிந்த 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவும் பயிற்சியும்!

இந்தியாவில் இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு, வரிக் கணக்கு போன்ற தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் மும்பை கால் சென்டர்கள், அந்த விவரங்களை வைத்து அந்நாட்டின் மக்களை ஏமாற்றி இருக்கிறது. இரவு நேரத்தில் பொதுவாக இது போன்ற நிறுவனங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இது அவர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது.

மேலும் கால் சென்டர்கள் தங்கள் ஊழியர்களுக்கு அமெரிக்க ஆங்கிலம் பேசப் பயிற்சி கொடுத்து, அச்சு அசலாக அமெரிக்காவின் இன்டர்னல் ரெவின்யூ சர்வீசஸ் அலுவலகத்திலிருந்து பேசுபவர்கள் போலவே பேசும்படி தயார் செய்துள்ளனர். கிட்டதட்ட 700 பேரும் பக்காவாக அமெரிக்க ஆங்கிலம் பேசுமளவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி நடந்தது இப்படித்தான்!

கால் சென்டர் ஊழியர்கள், இங்கிருந்தபடி அமெரிக்க மக்களிடம் அவர்களுடைய வரி குறித்தத் தகவல்களைக் கேட்டுள்ளனர். அவர்கள் சொல்லும் விவரங்களையும் இவர்களிடம் உள்ள விவரங்களையும் வைத்து வரி கட்டாதவர்கள் யாரென்று தெரிய வருகிறது. அவர்களிடம், உடனடியாகக் கட்ட வேண்டிய வரிப் பணத்தை கட்டாவிட்டால் உங்கள் வீட்டுக்கு அரை மணி நேரத்தில் போலீஸ் வரும் என்று மிரட்டி உள்ளனர். அவர்கள் பயந்து போய் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, முதலில் அவர்களுடைய பொருட்கள் வாங்கும் பர்சேஸ் பிரீபெய்ட் கார்டில் பக்கத்தில் உள்ள கடையில் போய் டாப் செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் டாப் அப் செய்த தொகையை இவர்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்குக்கு ட்ரான்ஸ்பர் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி கடந்த ஒன்றரை வருடங்களாக பல மில்லியன் டாலர்களை கால் சென்டர்கள் நடத்தியவர்கள் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட கில்லாடிகள் இப்போது போலீஸாரிடம் சிக்கி உள்ளனர்.

மும்பையில் உள்ள கால் சென்டர்களுக்கு அமெரிக்கர்களின் விவரங்கள் எப்படி கிடைத்தது? போன்றவற்றை சென்னையில் உள்ள பிரபல பி.பி.ஓ- சர்வீஸில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம்.

"வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு விவரங்கள், அவர்கள் செலுத்தும் வரி விவரங்கள் இவர்களுக்குக் கிடைத்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் வெளிநாட்டினரின் பெரும்பாலான வங்கிகளின் பேக் என்ட் ஆப்ரேஷன்கள் இந்தியாவுக்குத்தான் அவுட்சோர்ஸிங் செய்யப்படுகின்றன. அப்படி அவட் சோர்ஸ் செய்யப்படும் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து கசிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்தந்தத் துறையில் இருப்பவர்களால் மட்டுமே இதனைக் கண்டுபிடிக்க முடியும். இதுபோன்ற மோசடிகளைச் செய்யவும் முடியும். பெரிய நம்பகமான பி.பி.ஓ நிறுவனங்களில், இந்தத் தகவல்களைக் கையாளும் அதிகாரம் உள்ள பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், வேறொருவர் பெயரில் வெளியே ஒரு கால் சென்டரை நடத்துவது என்பது இந்தியாவில் மிக சாதாரணமாக நடக்கக் கூடியது. இவர்களிடம் பகிரப்படும் தகவல்களால் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன.

இதனால், அமெரிக்கர்கள் மட்டுமல்ல இந்தியர்களும் நாளுக்குநாள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நம்மை யாரென்றே தெரியாத நபர் கூட, போனில் அழைத்து நம்முடைய பெயர், விலாசம், மொபைல் எண், வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை புட்டுப் புட்டு வைக்கும் அளவுக்குப் பிரச்னை தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது" என்றார்.

BN-QD542_INDIAj_P_20161006153853.jpg

மோசடியில் ஈடுபட்ட கால் சென்டரின் ஊழியர்கள் மட்டுமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடந்து வருகிறது. கால் சென்டரின் உரிமையாளர் யார் என்பதும், இன்னும் எத்தனை கால் சென்டர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் விசாரணையில் தெரிய வரலாம்.

உஷார் மக்களே! அடிச்சு கேட்டாலும் முக்கிய விவரங்களைப் பகிர்ந்து விடாதீர்கள்.

http://www.vikatan.com/news/crime/69343-how-indian-call-centre-made-million-dollars-out-of-americans.art

  • தொடங்கியவர்

கால் சென்டர் மோசடியை விசாரிக்க எஃப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியா வருகை

 

ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை சட்டவிரோதமாக ஏமாற்றி அதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சுருட்டிய மிகப்பெரிய கால் சென்டர் மோசடி ஒன்றை விசாரிப்பதற்காக மேற்கு இந்திய நகரமான தானேவுக்கு எஃப்.பி.ஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

 
 

கடந்த வாரம், இந்த மோசடி குறித்து போலிசார் நடத்திய தொடர் சோதனைகளில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இதனை போலிசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் தாங்கள் பணியாற்றுவதாக மக்களை ஏமாற்றியதாகவும், முறையாக வரி செலுத்தவில்லை அதனால் சிறைக்குத் தள்ளப்படுவீர்கள் என மிரட்டி அவர்களுடைய வங்கிக் கணக்குகளை பெற்றதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் என கருதப்படும் 24 வயதான நபர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india-37657219?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.