Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய!?

Featured Replies

2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என அவர் கூறியுள்ளார்.

சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, கோத்தபாய ராஜபக்ச மீது பயம் உள்ளது. அதனால் தான் குற்றம் குற்றம் செய்யாத போதும் அவரை சிறையில் அடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/120060?ref=morenews

  • தொடங்கியவர்

நிழல் ஜனாதிபதியாக செயற்பட்டவரின் இன்றைய பரிதாப நிலை! மாற்றங்கள் ஏற்பட வழியுண்டா?

2005 - 2014ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஜனநாயகத்துக்கு அப்பால் ஒருவித இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன்காரணமாக அதிருப்தியடைந்த மக்கள் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தனர்.

இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டபோதும், நிழல் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷவே செயற்பட்டார்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய, சாதாரண அரசாங்க அதிகாரியே. ஆனாலும் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்குரிய இராணுவ பாதுகாப்புடனே கோத்தபாய காணப்பட்டார்.

குண்டு துளைக்காத வாகனங்களில் கோத்தபாய பயணங்களை மேற்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் உள்ள அச்சமே இதற்கான காரணமாக இருந்தது.

கோத்தபாய என்ற பெயரை கேட்டாலே முப்படையினரும் நடுக்கும் அளவுக்கு அவரின் அதிகாரம் மேலோங்கியிருந்தது.

முப்படைகளின் தளபதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்ட போதும், அதற்கான முழுப்பொறுப்பும் கோத்தபாய என்ற ஒரு தனிநபரினாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இராணுவ அதிகாரத்தை கையில் வைத்திருந்த கோத்தபாய பல்வேறு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதற்காக இராணுவத்தை பயன்படுதியிருந்தார் என்பது இன்று அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

ராஜபக்ஷ ரெஜிமென்டை விமர்ச்சிக்கும் எவராக இருந்தாலும் அவர்களை கொலை செய்ய ஒரு குழுவினரும், தமது வீட்டு வேலைகளை கண்காணிக்க இன்னொரு குழுவினரும், தமது வீட்டு பெண்களின் எடுபிடிகளுக்கு இன்னொரு குழுவும் என்று இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

அதற்கு அப்பால் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, தரகு பணம் என பல்வேறு அடக்கு முறைகளில் கோத்தபாய ஈடுபட்டிருந்தார். இதற்கான பிரதான காரணமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ராஜபக்ஷ ரெஜிமென்டின் கைவசமிருந்தமேயாகும்.

இது இவ்வாறு இருந்தாலும் ராஜபக்ஷர்கள் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அடக்கு முறைகள் ஏராளம். சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்படும் அனைத்து தமிழர்களும் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டதை ஏவி சிறைகளில் அடைக்கப்பட்டனர். இன்றும் பலர் சிறைக்குள் முடக்கி கிடக்கும் அவலம் தொடர்க்கிறது.

இவ்வாறான கடந்த வாரம் சிறைக்கம்பிகளுக்குள் சிக்கியிருந்த கோத்தபாயவின் புகைப்படம் இணையங்களில் வெளியாகிருந்தது. இது ஒட்டுமொத்த தமிழனத்திற்கும் ஒரு சந்தோசமான விடயமாக பார்க்கப்பட்டது. தமிழர் தாயகம் மீது மிலேச்சத்தமான போரை முன்னெடுத்து இனவழிப்பில் ஈடுபட்டவர்கள். தாம் போர் வெற்றி வீரர்கள் என்ற இறுமாப்போடு வலம் வந்தனர். எனினும் ராஜபக்ஷர்கள் விதைத்த சாபத்தின் அறுவடை அன்று சிறைக்கம்பிகளாக காட்சியளித்தமையே தமிழர்களின் சந்தோஷத்திற்கான காரணமாகும்.

தமிழர்களுக்கு சொல்லெண்ணா துயங்களை கொடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்டின் பிரதான நபராக கோத்தபாய ஆவார்.

இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்த கோத்தபாய விரைவில் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் தனது சிறைவாழ்கையிலிருந்து தப்பித்துக்கொள்ள கோத்தபாய அரசியல் எனும் அஸ்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதற்கிணவாக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து கோத்தபாயவின் காய்நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமகால ஜனாதிபதி அடுத்த வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார். இவ்வாறான உறுதிமொழியினை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் முன்னிலையில் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க கோத்தபாய திட்டமிட்டுள்ளார்.

எனினும் இதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவு கிட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

சமகால அரசியல் நிலவரப்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபட்டு இரு பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர். எனினும் கோத்தபாய இருதரப்பினருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையான போக்கினையே கடைப்பிடித்து வருகிறார். இதற்கான பிரதான காரணமாக தனது அரசியல் பிரவேசமே ஆகும்.

மறுபக்கத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மாற்று சக்தியொன்றை உருவாக்கும் முயற்சியில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கட்சியின் மூலம் கோத்தபாயவை பலப்படுத்த மஹிந்த திட்டமிட்டு வருகிறார். எனினும் புதிய கட்சியின் செயற்பாடு நடவடிக்கைகளில் இருந்து கோத்தபாய நீக்குமாறும் அவரை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியை நிறுத்துமாறும் வாசுதேவ நாணயக்கார உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் மஹிந்த ராஜபக்சவிடம் அறிவித்துள்ளனர்.

அவர்களின் சில கோரிக்கைகளுக்கு மஹிந்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தபாயவினால் அவருக்கு இல்லாத மக்கள் ஆதரவு உள்ளதாக காட்டுவதற்கு முயற்சித்த போதிலும், மஹிந்தவின் தோல்விக்கு கோத்தபாயவே பொறுப்பு கூற வேண்டும் என அங்கு சிரேஷ்ட உறுப்பினர்களினால் மஹிந்த ராஜபக்சவிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினரை ஈடுபடுத்தி அவரினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் மற்றும் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் தற்போது வரையில் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமையின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக முன் நிற்பதாக கூறி கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கட்சிக்கு கோத்தபாய போன்ற கொடூரமான இராணுவ ஆட்சியாளளை வெற்றி பெற செய்வதென்பது முறையான விடயமாக இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்த மஹிந்த தீவிர கலந்துரையாடல்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அரசியலில் கால் பதிக்க ஆயத்தமாக இருந்த கோத்தபாயவுக்கு இரு வழிகளிலும் தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரின் அடுத்த கட்ட நிலை என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டத்தில் பேசப்படும் விடயமாக உள்ளது.

பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள கோத்தபாய விரைவில் சிறைக்கம்பிகளின் பின்னால் தன் வாழ் நாளை கழிக்க வேண்டிய நிலையே சாத்தியமாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/120022?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.