Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி

Featured Replies

இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி

535443-modi-lanka-pm-817f70bc8f674222b9b6e4a2484e57908700dabd.jpg

 

இலங்கை மீதான கவ­னத்தை ஒரு­போதும் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்லை என்­பதை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தின் போது, மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது இந்­தியா.

இதற்கு முன்னர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, புது­டில்­லியில் அது பர­ப­ரப்­பாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால், இம்­முறை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பயணம் அந்­த­ள­வுக்கு பர­ப­ரப்பு மிக்க ஒன்­றாக எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை.

ஒரு­வேளை, இந்­தி­யா­வுடன் இணைந்து சார்க் மாநாட்டை இப்­போது நடத்­து­வது உகந்­த­தல்ல என்று வெளி­வி­வ­கார அமைச்சு அறி­விக்­காமல் போயி­ருந்தால், பாகிஸ்­தானும், தமது நாட்டில், நடக்­க­வி­ருந்த சார்க் மாநாட்டை ஒத்­தி­வைப்­ப­தாக அறி­விக்­காமல் இருந்­தி­ருந்தால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்தப் பய­ணத்­துக்கு இந்­தி­யாவில் கூடுதல் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருக்கும்.

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் அண்­மைக்­கா­லங்­களில் சில விட­யங்­களில் இணக்­க­மற்ற சூழல்கள் நில­விய போதிலும், இலங்­கை­யு­ட­னான உற­வு­களை நிதா­ன­மா­கவே கையாள்­வதில் இந்­தியா கூடுதல் அக்­கறை செலுத்தி வந்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக, புது­டில்­லி­யுடன் கலந்­தா­லோ­சனை நடத்­தா­ம­லேயே, சம்­பூரில் இந்­தி­யா­வுடன் இணைந்து அமைக்­க­வி­ருந்த அனல் மின் திட்­டத்தை கைவிட்டு விட்­ட­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­தது.

அது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சியைக் கொடுத்த செய்­தி­யாக இருந்­தாலும், பகி­ரங்­க­மாக எந்தக் கருத்­தையும் கூற­வில்லை.

அதற்குப் பின்னர், கொழும்பு வந்த இந்­திய வர்த்­தக அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சம்பூர் அனல் மின் திட்­டத்தை இலங்கை அர­சாங்கம் கைவிட்­டதால், இரு­த­ரப்பு பொரு­ளா­தார உற­வு­களில் எந்த தாக்­கமும் ஏற்­ப­டாது என்று அறி­வித்­தி­ருந்தார்.

ஆனாலும், அவர் கருத்து வெளி­யிட்ட தொனி­யா­னது, சம்பூர் அனல் மின் திட்டம் கைவி­டப்­பட்­டது இந்­தி­யா­வுக்கு ஏமாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பதை உணர்த்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

அதற்குப் பின்னர், இப்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புது­டில்­லிக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக, இந்தப் பய­ணத்­தின்­போது இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் விரி­வாகப் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

என்­றாலும் குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்க வகை­யி­லான எந்த விட­யமும் தனிப்­பட்ட கவ­னத்தை பெற்­றி­ருக்­க­வில்லை. இந்தச் சந்­திப்பின் போது இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஒரு கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் இரா­ஜ­தந்­திர எல்­லை­க­ளுக்கும் அப்­பாற்­பட்­டது என்­பதே அவ­ரது அந்தக் கருத்து.

அதா­வது, இரா­ஜ­தந்­திர வரை­ய­றை­க­ளுக்குள் இந்த உறவைச் சுருக்­கி­விட முடி­யாது என்­பதே அதன் உட்­பொருள். இந்த உற­வுகள் இரா­ஜ­தந்­திர உற­வு­களைக் கடந்து நிலைத்­தி­ருக்கும் என்­ப­தா­னது, இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தி­யா­வுக்­குள்ள சில உரி­மை­க­ளையும் எடுத்துக் கூறு­வ­தாக உள்­ளது.

புது­டில்­லியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்­தாலும் அவற்றில் இரண்டு முக்­கி­ய­மா­னவை. ஒன்று, இந்­தி­யாவின் நெடுஞ்­சா­லைகள் மற்றும் துறை­மு­கங்கள் அமைச்சர் நிதின் கட்­க­ரி­யு­ட­னா­னது.

இரண்­டா­வது, இந்­தி­யாவின் பெற்­றோ­லிய மற்றும் இயற்கை எரி­வாயு அமைச்சர் தர்­மேந்­திர பிர­தா­னு­ட­னா­னது.

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில், இரா­மேஸ்­வ­ரத்­தையும் தலை­மன்­னா­ரையும் இணைக்கும் பாலத்தை அமைப்­பது தொடர்­பாக, இந்­திய பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் அடிக்­கடி தக­வல்­களை வெளி­யிட்டு வரு­ப­வர்தான் இந்­திய மத்­திய அமைச்சர் நிதின் கட்­கரி.

இரு­நா­டு­க­ளையும் இணைக்கும் பாலத்தை அமைப்­பது குறித்து இலங்­கை­யுடன் பேச்சு நடத்­தப்­பட்டு வரு­வ­தாக, அவர் ஏற்­க­னவே தகவல் வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்தில் மறுத்­தி­ருந்தார். அத்­த­கைய பேச்­சுக்கள் ஏதும் இந்­தி­யா­வுடன் நடத்­தப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, அத்­த­கைய திட்டம் ஏதும் இல்லை என்றும், அவ்­வா­றான தேசத்­து­ரோ­கத்தை இழைப்­ப­தற்கு தாம் அனு­ம­திக்­க­மாட்டேன் என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த சந்­தர்ப்­பத்தில், நிதின் கட்­க­ரியை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்­தி­ருக்­கிறார். இந்த சந்­திப்பின் போது இரு ­நா­டு­க­ளுக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் குறித்துப் பேசப்­பட்­டி­ருக்­குமா என்­பது இந்தப் பத்தி எழு­தப்­படும் வரையில் தெரி­ய­வில்லை.

இலங்கை அர­சாங்கம் இந்த விடயம் குறித்து அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்த தயங்­கலாம். ஆனாலும், இந்­திய அமைச்சர் நிதின் கட்­கரி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் இது­பற்றி கேள்வி எழுப்­பு­வதைத் தவிர்த்­தி­ருப்பார் என்று கரு­து­வ­தற்கு இட­மில்லை. அதே­வேளை, பெற்றோ­லிய மற்றும் இயற்கை எரி­வாயு அமைச்சர் தர்­மேந்­திர பிர­தா­னு­ட­னான சந்­திப்பு இன்னும் முக்­கி­யத்­து­வ­மா­னது.

இந்த சந்­திப்­பின்­போது, இந்­தியா தரப்பில் சில திட்ட முன்­மொ­ழி­வுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­திய அர­சாங்கத் தக­வல்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

இந்த திட்ட முன்­மொ­ழி­வுகள் இலங்­கையின் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துடன் இணைந்தும் தனி­யா­கவும், எரி­சக்தி துறையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை.

சபு­கஸ்­கந்­தையில் உள்ள எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலையைப் புன­ர­மைப்­பது, மற்றும் புதிய எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைப்­பது.

இந்­தியன் எண்ணெய் நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான லங்கா ஐ.ஓ.சி. நிறு­வ­னத்தின் சில்­லறை விற்­பனை நிலை­யங்­களின் (எரி­பொருள் நிரப்பு நிலை­யங்கள்) எண்­ணிக்­கையை அதி­க­ரித்தல், எண்ணெய் களஞ்­சி­யப்­ப­டுத்தும் வச­தி­களை அதி­க­ரித்தல், விமான எரி­பொருள் விநி­யோ­கத்­திலும், இயற்கை எரி­வாயு விற்­ப­னையில் ஈடு­ப­டு­வ­தற்கும் அனு­மதி அளித்தல்.

திரு­கோ­ண­மலை சீனக்குடாவில் உள்ள மேல்­நிலை எண்ணெய்க் குதங்­களை புன­ர­மைத்து, பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துடன் இணைந்து ஐ.ஓ.சி. நிறு­வனம் அவற்றைப் பயன்­ப­டுத்­துதல்.

கர­வ­லப்­பிட்­டி­யவில் இயற்கை எரி­வாயு முனையம் ஒன்றை ஆரம்­பித்தல்.

நகர எரி­வாயு வலை­ய­மைப்பு ஒன்றை உரு­வாக்­குதல்.

வாக­னங்­க­ளுக்கு அழுத்­தப்­பட்ட எரி­வாயு விநி­யோ­கத்தை அறி­முகம் செய்தல்.

இவையே இந்­திய அமைச்சர் தர்­மேந்­திர பிரதான் முன்­வைத்­தி­ருந்த திட்­டங்கள்.

மின்­சாரம் மற்றும் எரி­சக்தித் துறைகள் என்­பன இன்­றைய நவீன உலகின் பிர­தான ஆயு­தங்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன. இந்த இரண்­டுமே கிடைக்­காமல் போகும் சந்­தர்ப்­பத்தில் எந்த ஒரு நாட்­டி­னாலும் இயங்க முடி­யாத நிலை ஏற்­படும்.

சம்பூர் அனல் மின் திட்­டத்தை இந்­தி­யாவே இழுத்­த­டித்து வரு­வ­தாக முன்னர் சிங்­கள அர­சி­யல்­வா­திகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் ஒரு கருத்து நில­வி­யது. அதன் மூலம், இலங்­கையில் மின்­சார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்த இந்­தியா திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது. இப்­போது இலங்கை அர­சாங்­கமே இந்த திட்­டத்தைக் கைவிட்­டி­ருக்­கி­றது. ஆனால் மாற்றுத் திட்டம் இன்­னமும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இதனால், 2018ஆம் ஆண்டு பாரிய மின் பற்­றாக்­குறை ஒன்றை இலங்கை எதிர்­கொள்ளும் ஆபத்து ஏற்­படும் என்று நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இதனைச் சமா­ளிக்க அர­சாங்­கத்­தினால் குறு­கி­ய­காலத் திட்டம் எதையும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்றே தெரி­கி­றது.

இலங்­கையின் எரி­பொருள் சுத்­தி­க­ரிப்பு மற்றும் விநி­யோகம் சார்ந்த துறை­களின் மீது இந்­தியா தனது கட்­டுப்­பாட்டை பேண முனை­கி­றது.

இலங்­கையில் எரி­பொருள் விநி­யோ­கத்தை கட்­டுப்­ப­டுத்தும் ஆற்­றலை இந்­தியா பெற்றுக் கொள்­ளு­மானால், தேவைப்­படும் போதெல்லாம், அந்தக் குடு­மியை வைத்தே ஆட்டிப் படைக்கும்.

இலங்­கையில் சீனாவின் முத­லீ­டுகள் இந்­தி­யாவை எரிச்­ச­லுக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன. ஆனாலும், இலங்­கையின் பொரு­ளா­தார சூழலைக் கருத்தில் கொண்டு சீனா­விடம் இருந்து இலங்­கையை நீண்­ட­கா­லத்­துக்கு விலக்கி வைத்­தி­ருக்க இந்­தி­யா­வினால் முடி­ய­வில்லை.

இதனால், இலங்­கையின் குடு­மியை எப்­போதும் தனது கையில் வைத்­தி­ருப்­ப­தற்­கான வழி­மு­றை­களை இந்­தியா தேடத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அதற்­கான முதற்­ப­டிதான், எரி­சக்தி சார்ந்த முக்­கி­ய­மான துறை­களின் தனது கட்­டுப்­பாட்டை உறு­திப்­ப­டுத்திக் கொள்வதற்கான முயற்சியாகும்.

ஏற்கனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்திருந்தபோது, திருகோணமலையை பிராந்தியத்தின் எரிபொருள் கேந்திரமாக மாற்ற இந்தியா உதவும் என்று கூறியிருந்தார்.

அதற்கு இந்தியா எந்த வகையில் உதவ முன்வந்தாலும், அது இலங்கையின் நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்காது. இந்தியாவின் நலனும் அங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கும்.

இலங்கை மீதான கட்டுப்பாட்டை, குறிப்பாக திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை பேணுவதில் எப்போதும் இந்தியா குறியாகவே இருந்து வந்திருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்தி யப் பயணத்தின்போது, இந்தியா மிக நாசூக்காகவே அதனை வெளிப்படுத்தியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணம் வெளிப்பார்வைக்கு இராஜதந்திர முக்கியத்துவம் இல்லாத ஒன்று போலவே தென்பட்டாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில், தனது மிக முக்கியமான தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாகவே பார்த்திருக்கும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.