Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu.jpg

வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். 

maruthamalai.jpg

வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்குமான வித்தியாசமான உடல்மொழியையும் முகபாவனைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதிலும் மெனக்கெட்டவர்.  ‘நவராத்திரி’ படமே அதற்குச் சாட்சி. வடிவேலுதான் நகைச்சுவை நடிகர்களில் ஏராளமான விதவிதமான கெட்டப்களில் நடித்தவர். மேலும் அவர் எந்த கெட்டப் போட்டாலும் அது அச்சு அசல் அவருக்குப் பொருந்துகிறது. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும் ’டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ’கைப்புள்ள’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ’பாட்டாளி’ படத்தில் பெண்வேடமிட்டு அதகளப்படுத்தியிருப்பார்.

மேலும், சிவாஜியோடு வடிவேலுவை ஒப்பிட முக்கியமான காரணம், தமிழ் சினிமாவில் சிவாஜியின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு நடிகரைச் சொல்ல முடியாது. ‘டெலக்ஸ் பாண்டியன்’,  மும்தாஜுடன் போலீஸ் வேடத்தில் நடித்த படம் ஆகியவற்றில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்திருப்பார். ஆனால் வேறு பல படங்களிலும் சிவாஜியின் உடல்மொழியையும் முகபாவனையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருப்பார். சிவாஜி சீரியஸாக வெளிப்படுத்திய உடல்மொழியை காமெடியாக்கியிருப்பார். ஒருவகையில் சிவாஜியைத் தலைகீழாக்கம் செய்தவர் வடிவேலு என்று சொல்லலாம்.

deluxe%20pandi.jpg

தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகர்களுக்கு இணையான மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் நகைச்சுவை நடிகர்களுக்கும் உண்டு. என்.எஸ்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து வடிவேலுவின் காலம் வரை அது தொடர்கிறது என்றாலும் தன் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் இருந்து வடிவேலு வேறுபட்டு, நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம்.

தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்டகாலம் என்றால் அது பிந்துகோஷ், ஓமக்குச்சி நரசிம்மன், உசிலை மணி, குண்டு கல்யாணம் போன்றவர்கள் தங்கள் உடலமைப்பைக் கொச்சைப்படுத்தி நடித்த காலகட்டம்தான். அதேபோல் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த காலகட்டத்தையும் தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்ட காலகட்டம் என்று சொல்லலாம். ரஜினியின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காகவே பல படங்களில் தோன்றி தமிழர்களைப் படாதபாடு படுத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். இத்தகைய கொடூரமான நகைச்சுவைகளில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றியவர் கவுண்டமணி. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கலாய்ப்பது, கூர்மையான சமூக விமர்சனம் என்று ஒருவகையில் கவுண்டமணியை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால் கவுண்டமணி காமெடியின் பிரச்னையே அவர் சகட்டுமேனிக்கு எல்லோரையும் இழிவுபடுத்தியதுதான். குறிப்பாக கருப்பானவர்களையும் வழுக்கை உடையவர்களையும் கொச்சைப்படுத்துவதே கவுண்டமணி காமெடியின் மையமாக இருந்தது. (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான். அவருக்கும் வழுக்கைத்தலைதான்)

ஆனால் வடிவேலுவின் காமெடியோ முற்றிலுமாக கவுண்டமணியிடம் இருந்து வேறுபட்டது. அது தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் - சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் மிகையான வாக்குறுதிகள், போலி ஆவேசமும் வாய்ச்சவடால்களும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.

giri.jpg

வடிவேலு எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் அதற்கேற்ப நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக்கொண்டார். ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், அர்ஜூன், பிரசாந்த் தொடங்கி விஜய், சூர்யா வரை எல்லா நாயகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் வகையில் நகைச்சுவை நடிப்பைப் பிரதிபலித்துக் காட்டினார். அர்ஜூன், பிரசாந்த் போன்றவர்கள் நடித்த ‘வின்னர்’, ‘மருதமலை’, ‘கிரி’ போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே நினைவுகூறப்படுகின்றன. வடிவேலுவை எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படங்களில் எதுவுமே இல்லை.

winner.jpg

வடிவேலு நிகழ்த்திய முக்கியமான சாதனை, மொழியமைப்பையே தன் வசப்படுத்திக்கொண்டது. சொலவடைகளும் பழமொழிகளுமே நமது தமிழர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் 2003ல் ‘வின்னர்’ படம் வெளியானதில் இருந்தே வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் பழமொழி, சொலவடைகளின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வடிவேலுவின் டயலாக்குகளுடன் பொருத்திப் பார்க்கப் பழகிவிட்டனர் தமிழர்கள். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் வடிவேலுவின் வசனங்கள் வழியாக விளக்கி, கலாய்க்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். சென்ற ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் தொய்வு ஏற்பட்டாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்-அப் செய்திகள், மீம்ஸ் என எல்லாவற்றிலும் தவறாமல் வடிவேலுவும் அவரது வசனங்களும் இடம்பெற்றன. இத்தனைக்கும் சமயங்களில் ‘ஏன்?’, ‘வேணாம் வேணாம்’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளையே தனது தனித்துவமான உச்சரிப்பின் மூலம் சிறப்பான வார்த்தைகளாக மாற்றிக்காட்டியவர் வடிவேலு. வடிவேலு அளவுக்கு எந்த நகைச்சுவை நடிகர்களின் வசனங்களும் இந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் புழங்கியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகளைவிட அதிக செல்வாக்கு கொண்டவை வடிவேலுவின் வசனங்கள்.

porkaalam.jpg

இறுதியாக மீண்டும் ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி ஒரு விஷயம். சிவாஜி அவரது மிகை நடிப்புக்காக கிண்டலடிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் ஒரு நல்ல இயல்பான நடிகர். குறிப்பாக ‘பலே பாண்டியா’, ’சபாஷ் மீனா’ போன்ற நகைச்சுவைப் படங்களில் இயல்பான, அட்டகாசமான நடிகர் சிவாஜியைக் காண முடியும். ஒரு நடிகனால் மக்களை நெகிழ்ந்து அழவும் வைக்க முடியும், வெடித்துச் சிரிக்கவும் வைக்க முடியும் என்றால் அவரே மகத்தான கலைஞன். அந்த வகையில் சிவாஜிகணேசனைப் போலவே வடிவேலுவும் மகத்தான கலைஞன். அவரால் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக்கட்ட முடியும். கவுண்டமணி, சந்தானம் போன்றவர்களிடம் இருந்து வடிவேலு வித்தியாசப்படும் முக்கியமான இடம் இது. வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு ஆச்சி மனோரமா, நாகேஷ் போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்கது. தேவர் மகனில் கையை இழந்தபிறகு பேசும் காட்சி, ‘’ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடினியே; நான் கறுப்பா இருக்கேன்னுதானே என்கிட்ட கேட்கலை?” என்று ‘பொற்காலம்’ படத்தில் முரளியிடம் கேட்கும் காட்சி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

imsai.jpg

நகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம் என்றால் அதுதான் வடிவேலுவின் வெற்றி.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

- ரீ.சிவக்குமார்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/69274-vaivelu-birthday-special-hbdvadivelu.art

மருந்தெல்லாம் தேவை யில்லை இவர் நடிப்பை பார்த்தாலே நோய் குணமாகிவிடும்.....வாழ்க பல்லாண்டு... பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் தமிழ் சினிமாக்களில் கதாநாயகர்களை விட நகைச்சுவை நடிகர்களின் பங்கு அளப்பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்

62fByz.gif  tumblr_nrkq4befty1upolueo1_400.gif  my lord vadiveluCSXc53.gif  VBrq0K.gif  200.gif#1   tumblr_nqera93y9A1upolueo2_r1_400.gif

தமிழ்த் திரை உலகத்தில்... இது வரை நடித்த நகைச்சுவை நடிகர்களில்... 
எனது மனதில்... முதலிடத்தில் இருப்பவர், வைகைப் புயல் வடிவேலு தான்.
அருமையான நடிகரை.... தி.மு.க. தமது அரசியலுக்குள் இழுத்து.... அவரது சினிமா வாழ்க்கையை, வீணடித்து விட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.