Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்

தமிழருக்கு மட்டுமல்ல...!

'கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக பாரிய மனித அவலத்தைச் சந்தித்து வருகின்றபோதும் சிறிலங்கா அரசோ, சர்வதேச சமூகமோ எதுவித உயரிய நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன" என்ற யாழ். மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையவையே.

ஆனால் இது குறித்துச் சிறிலங்கா அரசிடம் முறையிடுவதாலோ அன்றிக் குற்றம் சுமத்துவதினாலோ பயன் ஏதும் இல்லை. ஏனெனில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இம் மனித அவலத்திற்குச் சிறிலங்கா அரசே காரணமாகும். ஒருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசால் இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூடக்; கூறலாம்.

ஆகையினால் சிறிலங்கா அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை அற்றிருப்பதாகவோ, தட்டிக்கழிப்பதாகவோ அதனிடமே முறையிடுவதால் என்ன பயன் கிட்டிவிட முடியும்? ஆனால் சர்வதேச சமூகம் இவ்வாறு இருப்பது தான் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமும், அதிருப்தியும் அளிப்பதாக உள்ளது.

ஏனெனில், யாழ். குடாநாட்டில் பெரும் மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது சர்வதேச சமூகத்திற்கு நன்கே தெரிந்த விடயம் எடுத்துக்காட்டாக, ஏ-9 பாதை மூடப்பட்டதினால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுப் பொருட்களுக்கு அலைய வேண்டிய அவலம் காணப்படுகின்றது.

அதேசமயம் உற்பத்தி நடவடிக்கைகள் தொழில் நடவடிக்கைகள் என்பன முடக்கப்பட்டதினால் மக்கள் தொழில் வாய்ப்பை இழந்து வருமானமற்றவர்கள் ஆகியுள்ளனர். மீன்பிடித்தடை, கட்டுப்பாடு என்பனவற்றால் அவர்கள்; வருமானத்தை இழந்துபோயுள்ளனர்.

அதாவது, ஒருபுறத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் இதனால் பெரும் விலையேற்றமும் இன்னொரு புறத்தில் தொழிலின்மை காரணமாக வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதன்; காரணமாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அவலமும் இதனால் மக்கள் பட்டினியில் வாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதே சமயம் சிறிலங்கா இராணுவத்தினரதும், ஒட்டுக்குழுவினரும் ஆட்கடத்தல், படுகொலைகள், கைதுகள் என மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலை மக்கள் எவ்வேளையிலும் மரண பயத்துடனேயே வாழவேண்டியதான பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமது உயிர் பாதுகாப்பிற்காக மக்கள் சிறைச்சாலை செல்வதற்கும் தயாரான விசித்திரமான நிலையே ஏற்பட்டுள்ளது.

ஆனால் இவை அனைத்தும் சர்வதேச சமூகத்திற்குத் தெரியாதவையல்ல. தமது அவலநிலை குறித்து யாழ். மக்கள் பல்வேறு வழிகளில் சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுள்ளனர். அத்தோடு யாழ். ஆயர் உட்பட பல தரப்பினரும் இது குறித்து முறையீடுகளையும் கோரிக்கைகளையும் செய்தும் உள்ளனர். இதற்கு அப்பால் யாழ். குடாநாட்டில் பணியாற்றும் ஐ.நா. அமைப்புக்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனிதநேய அமைப்புக்கள் என்பனவும் அறிவிப்புக்களையும் முறையீடுகளையும் மேற்கொண்டும் உள்ளன. இதற்கு அப்பால் கொழும்பிலுள்ள பல நாட்டுத்தூதுவர்கள் குறிப்பாக மேற்கு நாட்டுத்தூதுவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் அவதானித்தும் இருந்தனர்.

இத்தகையதொரு நிலையில் யாழ். குடாநாட்டு மக்களின் அவலத்தை சர்வதேச சமூகம் கண்டு கொள்ளவில்லை எனவும் தட்டிக்கழிப்பதாகவும் யாழ். பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளமை எந்தவகையில் தவறாகும்.? இது சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யாது என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

யாழ். குடாநாட்டு மக்களின் அவலமோ, இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்து வரும் துயரமோ சிறிலங்கா அரசாங்கத்தின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்ட விடயம். இதில் தமது நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டவை, அதாவது எல்லையிடப்பட்டவை எனச் சர்வதேச நாடுகள் குறிப்பாக மேற்குலகம் கூறுமேயானால் இன்று உலகில் நடைபெறுபவை எவற்றையும் தமிழ் மக்கள் அறிந்திராதவர்களாக இருந்தால் மட்டுமே அவை ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இருக்கும்.

நன்றி: ஈழநாதம

http://www.tamilnaatham.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.