Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப்

Featured Replies

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப்

 

ட்ரம்ப் ஹிலரி இறுதித் தொலைக்காட்சி விவாதம்

 கசப்பான விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே நடந்த, தீப்பொறி பறந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் அவர் இது போன்ற ஒரு உத்தரவாதமளிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

``அது நடக்கும் போது சொல்கிறேன்``, என்று டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி விவாதத்தை நெறிப்படுத்திய கிறிஸ் வாலஸிடம் கூறினார்.

கடந்த பல நாட்களாகவே ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பு தனக்கு எதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவில் ஒரு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பது குறித்து தான் அதிர்ச்சி அடைவதாகக் கூறினார்.

அமெரிக்க ஜனநாயகத்தின் பெருமையையே டொனால்ட் ட்ரம்ப் இழிவுபடுத்துகிறார் என்றார் ஹிலரி.

லாஸ் வேகாஸில் நடந்த இந்த தொலைக்காட்சி விவாதம், இது வரை இந்த தேர்தலில் வெளிப்பட்டுவரும் கசப்பான தொனியிலேயே தொடர்ந்தது.

ஹிலரி கிளிண்டனை , ஒரு ``அசிங்கமான பெண்`` என்று ட்ரம்ப் வர்ணித்தார்.

இந்த தொலைக்காட்சி விவாதம் நடந்த 90 நிமிட நேரத்தின் பெரும்பகுதி இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களால் நிரம்பியிருந்தது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புட்டினின் கைப்பாவை என்று ஹிலரி குற்றம் சாட்டினார்.

தனது தேர்தல் பேரணிகளில் ஹிலரி வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

கைகுலுக்க மறுப்பு

 

ஹிலரி-ட்ரம்ப் தொலைக்காட்சி விவாதத்தில்

 கைகுலுக்க மறுத்த வேட்பாளர்கள்

இந்த தொலைக்காட்சி விவாத்துக்குப் முன்னரும் பின்னும், இரு வேட்பாளர்களும் கைகுலுக்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு பழமைவாத மனோநிலை கொண்ட நீதிபதிகளை நியமிக்க ட்ரம்ப் சூளுரைத்தார். மேலும், கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கிய ஒரு முக்கிய தீர்ப்பை , இந்த பழமை வாத மனோநிலை கொண்ட நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த உச்சநீதிமன்றம் அமெரிக்கர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் குடியேறிகளை நாட்டிலிருந்து வெளியேற்றி , அமெரிக்க எல்லைகளைப் பாதுகாப்பதாக அவர் ஏற்கனவே சொன்ன உறுதி மொழிகளை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

ஹிலரி கிளிண்டன் இதற்கு பதிலடியாக, தான், ஒரு பாலுறவினர் மற்றும் திருநங்கைகள் உரிமைகளுக்காக பாடுபடுவேன் என்றும், கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்கப் போவதாகவும், மத்திய தர வர்க்க மற்றும் பெண்கள் நலனுக்கு பாடுபடப் போவதாகவும் உறுதியாகக் கூறினார்.

``பெண்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதில் அரசு தலையிட முடியாது`` , என்றார் ஹிலரி

http://www.bbc.com/tamil/global-37712358

  • தொடங்கியவர்

அனல் பறந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் இறுதி நேரடி விவாதம்: மக்கள் ஆதரவில் ஹிலாரி முன்னிலை

 

 
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் இறுதி நேரடி விவாத நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன், பின்னால் டிரம்ப் | படம்: ஏ.எஃப்.பி.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் இறுதி நேரடி விவாத நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன், பின்னால் டிரம்ப் | படம்: ஏ.எஃப்.பி.

இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது.

மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இந்தக் கணிப்பில் 4% அளவுக்கு முன்பின் மாறுதல்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மூன்று கட்டங்களாக அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. முதல் விவாதம் செப்டம்பர் 26-ம் ஹாப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அடுத்த விவாதம் அக்டோபர் 9-ம் தேதி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 19-ல் நெவடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேனலின் கிறிஸ் வாலஸ் நெறியாளராக செயல்பட்டார்.

ஊடகங்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் டிரம்ப் இறுதிச்சுற்று விவாதத்திலும் அதைக் குறிப்பிட்டார்.

இறுதி விவாதத்தின் சில முக்கிய அம்சங்கள்:

முதலில் விவாதத்தைத் தொடங்கிய ஹிலாரி கிளிண்டன், "டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை நான் வலுவாக எதிர்க்கிறேன். இந்த ஒப்பந்தத்தால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், வருவாய் உயரும், தேச பாதுகாப்புக்கு நலன் கிடைக்கும் என எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் நான் இந்த ஒப்பந்தத்தை இப்போது எதிர்ப்பது போலவே தேர்தலுக்குப் பின்னரும் எதிர்ப்பேன். ஒருவேளை அமெரிக்க அதிபரானாலும் எதிர்ப்பேன்" என்றார். ஆனால், ஹிலாரி இதே திட்டத்துக்கு முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தால் அவரது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காடி டிரம்ப் விமர்சித்தார்.

முதலைக் கண்ணீர் வடிக்கிறார்..

தொடர்ந்து பேசிய ஹிலாரி, குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டுக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய நிறுவனங்கள் மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் ஆதாயம் பெற்று வருகிறது. மேலும், லாஸ் வெகாஸில் உள்ள அவரது விடுதிக்கு சீன ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதாயம் பெறுவது சீன தொழிற்சாலைகளேத் தவிர அமெரிக்க தொழிற்சாலைகள் அல்ல. இப்படி அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார் டிரம்ப்" என்றார்.

'ஹிலாரியை அனுமதித்திருக்கக் கூடாது'

”அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட ஹிலாரியை அனுமதித்திருக்கக் கூடாது. அவர் போட்டியிடாமல் இருப்பதே நல்லது" என டிரம்ப் கூறினார். அப்போது விவாத நிகழ்ச்சிக்கு நெறியாளராக செயல்பட்ட கிறிஸ் வாலஸ் அவரது கருத்தை விரிவாக எடுத்துரைக்குமாறு பலமுறை வலியுறுத்தினார். ஆனால், "டிரம்ப் தொடர்ந்து நேரம் வரும்வரை அதற்கான விளக்கத்தைத் தெரிவிப்பேன். அதுவரை காத்திருங்கள்" என பூடகமாகக் கூறிச் சென்றார்.

இன்றைய தினம் நடந்த வார்த்தைப் போரில் இந்த உலகுக்கு எதிராக நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். அமெரிக்காவை அமெரிக்கர்களே ஆள்வார்கள் என்பதை மீண்டும் இவ்வுலகுக்கு நிரூபித்திருக்கிறோம். இந்த விவாதங்கள் நிறைவுபெற்றிருக்கலாம் ஆனால் உண்மையான போட்டி இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

கிளிண்டன் கூடாரம் உங்கள் அனைவரையும் பொய்களால் துளைத்தெடுக்கப் போகிறது. அவருடைய ஒவ்வொரு தாக்குதலையும் ஊடகங்கள் ஆதரிக்கும். அவருடைய ஊழல்களை காண மறுத்து பார்வையற்றிருப்பது போல் செயல்படும். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்" என்றார்.

இவ்வாறாக ஹிலாரி, டிரம்ப் விவாதம் வழக்கமான காரசார குற்றச்சாட்டுகளுடன் முற்று பெற்றது. இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தக் கணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டொனால்டு டிரம்ப் மறுத்துவிட்டார்.

http://tamil.thehindu.com/world/அனல்-பறந்த-அமெரிக்க-அதிபர்-வேட்பாளர்களின்-இறுதி-நேரடி-விவாதம்-மக்கள்-ஆதரவில்-ஹிலாரி-முன்னிலை/article9244699.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஹிலாரி - டிரம்ப் இறுதி விவாதம்: கவனம் ஈர்த்த 20 அம்சங்கள்

 

 
இறுதி விவாதத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன். | படம்: ராய்ட்டர்ஸ்
இறுதி விவாதத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன். | படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டிய தொலைக்காட்சி இறுதி விவாத நிகழ்வில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மூன்றாவது மற்றும் இறுதி விவாத நிகழ்வையொட்டிய கவனிக்கத்தக்க 20 அம்சங்கள்:

* தொலைக்காட்சி விவாதம் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் அதிபர் வேட்பாளர்களான ஹிலாரியும், டிரம்ப்பும் மரியாதை நிமித்தமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

* சுமார் 90 நிமிடங்கள் நீடித்த விவாதத்தில் பல இடங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களே பெரிதும் இடம்பெற்றிருந்தன.

* டிரம்ப் விவாதத்தின்போது ஹிலாரியை 'ஓர் அசிங்கமான பெண்' என்று குறிப்பிட்டது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியது.

* 'ரஷ்ய அதிபர் புதினின் கைப்பாவை' என்று டிரம்ப்பை கடுமையாக சாடினார் ஹிலாரி. தனது தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதாக, ஹிலாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார் டிரம்ப்.

* ஊடகங்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் டிரம்ப் இறுதிச்சுற்று விவாதத்திலும் அதைக் குறிப்பிட்டார்.

* வேலை வாய்ப்புகள், வருவாய் உயர்வு, தேச பாதுகாப்பு நலன் என எந்த நலனும் தராத டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை வலுவாக எதிர்ப்பதாக ஹிலாரி கூறினார்.

* டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை ஹிலாரி முன்பு ஆதரித்து தற்போது எதிர்க்கிறார் என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

* குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகளை வெளிநாட்டுக்குத் தாரை வார்த்துவிட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என ஹிலாரி குற்றம்சாட்டினார்.

* சிரியாவில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் போரை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது மட்டும்தான் ஹிலாரியின் சாதனையாக இருக்கும். வேறு எதையும் ஹிலாரி செய்யவில்லை என டிரம்ப் கூறினார்.

* சிக்காகோவில் நடந்த இனவெறித் தாக்குதலை கண்டும் காணமல் இருந்தது ஜனநாயக் கட்சியின் ஆட்சிதான் என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.

* விவாதத்தில் டிரம்ப் மீது பெண்கள் அளித்துள்ள பாலியல் புகார் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். இதனை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

*ஹிலாரி ஒருவேளை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படடல், ''கிளிண்டன் கூடாரம் உங்கள் அனைவரையும் பொய்களால் துளைத்தெடுக்கப் போகிறது. அவருடைய ஒவ்வொரு தாக்குதலையும் ஊடகங்கள் ஆதரிக்கும். அவருடைய ஊழல்களை காண மறுத்து பார்வையற்றிருப்பது போல் செயல்படும். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்" என்று டிரம்ப் ஹிலாரியை தாக்கிப் பேசினார்.

வாக்குறுதிகள்

* அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு பழமைவாதப் பற்றுடைய நீதிபதிகளை நியமிக்கப்போவதாக வாக்குறுதியளித்த டிரம்ப், கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கிய தீர்ப்பை தாம் நியமிக்கும் நீதிபதிகள் தள்ளுபடி செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

* துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுதல், அமெரிக்க எல்லைகளைப் பாதுகாத்தல் முதலான தனது வாக்குறுதிகளை மீண்டும் பதிவு செய்தார் டிரம்ப்.

* தன்பாலுறவினர்கள், திருநங்கைகள் உரிமைகளைக் காத்தல், கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாத்தல், மத்திய வர்க்க மற்றும் பெண்கள் நலன் மேம்பாடு, பெண்களின் உரிமையைக் காத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹிலாரி வாக்குறுதி அளித்தார்.

* இறுதி விவாதத்தில் நடந்த வார்த்தைப் போரில் இந்த உலகுக்கு எதிராக நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். அமெரிக்காவை அமெரிக்கர்களே ஆள்வார்கள் என்பதை மீண்டும் இவ்வுலகுக்கு நிரூபித்திருக்கிறோம் என்று டிரம்ப் கூறினார்.

கருத்துக்கணிப்புகள்

* மூன்று சுற்றுகளிலுமே ஹிலாரியே மக்கள் மத்தியில் முன்னிலை பெற்றிருப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.

* இறுதி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு, சிஎன்என் செய்தி நிறுவனமும் ஓஆர்சி கருத்துக்கணிப்பு நிறுவனமும் மேற்கொண்ட கணிப்பின்படி ஹிலாரி கிளிண்டனுக்கு 52% ஆதரவும், டிரம்ப்புக்கு 39% ஆதரவும் கிடைத்துள்ளது.

* தொலைக்காட்சி நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துகணிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.

http://tamil.thehindu.com/world/ஹிலாரி-டிரம்ப்-இறுதி-விவாதம்-கவனம்-ஈர்த்த-20-அம்சங்கள்/article9245633.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.