Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்...

Featured Replies

கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்...

jayasign28_vc2_18177.jpg

 

கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட  சின்னங்கள் வழங்கப்படும்.

jayablacksign_18361.jpg

 


இந்த அத்தாட்சிக் கடிதம், FORM-B எனப்படும்.இந்த FORM-B தேர்தல் நடத்தும் தொகுதியின் அதிகாரிக்கு வேட்பாளரால் வழங்கப்பட வேண்டும்.இந்த FORM-Bல் தொகுதியின் பெயர்,தொகுதியின் எண்,போட்டியிடும் வேட்பாளர் பெயர், வேட்பாளரின் தந்தையின் பெயர்,அவருடைய முகவரி ஆகியவை எழுதப்பட்டு கட்சித் தலைவரின் கையெழுத்துப்போட்டு அனுப்பப்படும். 
1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார்.tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின்  பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.


ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது
FORM-Bல் இன்னார் தான் கையெழுத்துப் போடுவார் என்பதை முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.அந்த அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதாக இருந்தால், செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ கூடி முடிவெடுத்து அந்தத் தகவலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும்.அதன் பிறகு தான் வேறு  ஒருவருக்கு FORM-Bல்  கையெழுத்துப் போடும் அதிகாரம் மாற்றித் தரப்படும்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு மாற்றித் தரும் சூழ்நிலை தற்போது இல்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/70838-jayalalithaa-has-only-placed-thumb-impression.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் கைவிரல் ரேகைக்கு ஒப்புதல்: தேர்தல் கமிஷன் தகவல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனி சின்னம் வழங்குவதற்கு அத்தாட்சி கடிதமான FORM B-யை வேட்புமனுவுடன் அளிக்க வேண்டும். இப்படி அளிக்கப்பட்ட FORM B-யில் கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இடது கை விரல் ரேகை பதித்துFORM B அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் தற்போது எழுந்திருக்கும் சூழலில், டெல்லியில் இருக்கும் தலைமை தேர்தல் கமிஷனின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டிருக்கிறார். 

jaya_22256.jpg

மருத்துவமனையில் அ.தி.மு.கவின் பொது செயலாளர் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய இடது கை கட்டை விரல் ரேகை பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது. அரசு டாக்டரின் அத்தாட்சியோடு FORM B-யை ஏற்றுக்கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/70879-election-commission-admits-thumb-impression-of-jayalalitha.art

  • தொடங்கியவர்

முதல்வர் சுயநினைவோடு ரேகையை பதிவு செய்தார்: டாக்டர் பாலாஜி தகவல்

 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கைகளில் வலி இருப்பதால் பேனா பிடித்து கையெழுத்து போட முடியவில்லை. அதனால் அவர் பெருவிரல் ரேகையை பதிவு செய் தார். அவர் என்னிடம் நன்றாக பேசினார் என்று டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவம்-ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வின் கையெழுத்து இல்லை. அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந் தது. முதல்வர் கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையை வாங்கிய சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது:

முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது. எழுந்து உட் காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத் தப்படுவதால் கைகளில் வலி இருக்கிறது. அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்துப் போட முடியவில்லை. அதனால்தான் அவர் பெருவிரல் ரேகையை வைத்தார். அவர் நன்றாக இருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். அவரும் என்னிடம் நன்றாக பேசினார். விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வர்-சுயநினைவோடு-ரேகையை-பதிவு-செய்தார்-டாக்டர்-பாலாஜி-தகவல்/article9287850.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.