Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுராவில் உலகின் மிக உயரமான இந்துக்கோயில்

Featured Replies

மதுராவில் உலகின் மிக உயரமான இந்துக்கோயில்

 

புதுடில்லி : உலகமே வியக்கும் வண்ணம் மதுராவில் கிருஷ்ணனுக்கு 700 அடி உயரமுள்ள (213 மீட்டர்) ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சதுரடியில் 70 மாடிகள் கொண்ட, பிரமாண்டமான, உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. ( இதன் உயரத்தை ஒப்பிடும்போது தஞ்சை பெரிய கோவில் மற்றும் டில்லி குதுப்பினார் போல மூன்று மடங்கு உயரமாக கட்டப்பட்டு வருகிறது.(தஞ்சை பெரியகோவில் உயரம் 66 மீட்டர்)

 

மிகப் பெரிய கோயில் :


 

 

 

இஸ்கான் (The International Society for Krishna Consciousness) என்ற அமைப்பு, கிருஷ்ணன் அவதரித்த மதுராவில், உலகிலேயே பெரிய கோவிலாக பிரமாண்டமான கோவிலைக் கட்ட முடிவு செய்து பணிகள் துவங்கியுள்ளன. 62 ஏக்கரில் அமையவுள்ள இந்தக் கோவிலுக்கு 'விருந்தாவன் சந்த்ரோதயா மந்திர்' எனப் பெயர் சூட்டி உள்ளார்கள். இந்தக் கோவிலானது இந்திய கலாச்சாரக் கட்டிட அமைப்பில் இருக்கும். இந்த கோவில் 30 ஏக்கர் வனப்பகுதியில், 12 ஆகம விதிகளின்படி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். கிருஷ்ணன் பிறந்த இடம் எப்படி இருந்ததோ அப்படியே தபோவனத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். நுழைவு வாயிலில் இருந்து கிருஷ்ணனை தரிசிக்க பக்தர்கள் 1.2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும்.

gallerye_083342127_1637537.jpg
next.png

 

gallerye_083348117_1637537.jpg

கோயிலின் அமைப்பு:


 

 

 

62 ஏக்கரில் 12 ஏக்கர் பார்க்கிங் வசதி, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் மீதிருக்கும் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் மதுராவின் மொத்த அழகையும் ஆக்ரா மற்றும் யமுனையில் ஓடி வரும் தண்ணீரின் அழகையும் காண முடியும். இது உலகத்தினரை வசீகரிக்கும் சுற்றுலாத் தலமாகவும், வழிபாட்டு இடமாகவும் அமையும். இக்கோயிலுக்கான நிலமானது பெங்களூரு கிருஷ்ண பக்தர்களால் வாங்கப்பட்டது. இந்த வழிபாட்டுத் தலத்தில் வருடம் முழுவதும் விழாக்கள் நடத்தப்படும். கிருஷ்ணாவின் ரத யாத்திரை, படகுத் திருவிழா, தபோவனத் திருவிழா என எல்லா திருவிழாக்களும் விருந்தாவனில் நடத்தப்படும். கானகத்தில் கிருஷ்ணன் செய்த சாகசங்கள் பகவத் கீதையில் சொன்னது போல அமையும்.மரங்கள் சூழ்ந்த பகுதியாக தபோவனம் அமையும். இங்கு 12 தபோவனக் காடுகளை உருவாக்கி உள்ளது இஸ்கான் அமைப்பு. விருந்தாவனத்தில் பக்தர்கள் சில நாட்கள் தங்கி வேதம், வேத மந்திரங்கள் கற்கலாம். தெய்வீகச் சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பஜனைப் பாடல்களையும் கேட்டு மகிழலாம். அத்துடன் திருவிழா காலங்களில் அங்கேயே தங்கி கிருஷ்ணன் அருளைப் பெறலாம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

 

கோயில் திறப்பு :


 

 

 

ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோயிலுக்கு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் உ.பி., முதல்வர் அகிலேஷ் அடிக்கல் நாட்டினார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த பூமி பூஜையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். 2015ம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. 2022 ம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, கோயில் திறக்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பேர் கொண்ட நிபுணர் குழுவினரின் யோசனைகளின்படி இக்கோயில் கட்டப்பட்டு வருகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1637537

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.