Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிந்த நிலையில்பயங்கரவாதம் என அரசு கூறக்கூடாது-மாவை

Featured Replies

யுத்தம் முடிந்த நிலையில்பயங்கரவாதம் என அரசு கூறக்கூடாது-மாவை
 
 
யுத்தம் முடிந்த நிலையில்பயங்கரவாதம் என அரசு கூறக்கூடாது-மாவை
நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மீண்டும் பயங்கரவாதம் என்ற சொல்லை உச்சரிக்காமல் இருப்பது நல்லது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்தக் கோரிக்கையை விடுத்த மாவை யுத்தத்தில் தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், தோல்வியடைந்தவர்கள் என்றும் அரச தரப்பினர் உச்சரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதே சத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதி பதி தலைமையில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.
 
மீள்குடியேற்ற அமைச்சின் நிதிப் பங்களிப்பில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 110 வீட்டுத் திட்டம் நல்லிணக்கபுரம் என்ற பெயரில் மக்களிடம்  கையளிக்கப்பட்டன.
 
இந்தநிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் உரையாற்றிய மாவை சோனாதிராஜா, ஜனாதி பதி மைதிரிபால சிறிசேன இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும், தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து மக்களை மீள்குடியேற்றுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
 
தமிழ்மக்களால் மாவிட்டபுரம் புனித பூமியாக கருதப்படுவதனால் அங்கு மதங்களை சீர்குலை க்கும் செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் மாவை சோனாதிராஜா கேட்டுக்கொண்டார்.
 
இதேவேளை யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் இராணு வத்தினரின் புகைப்படங்கள் தொங்கவிடப்படுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதன்போது  தமக்கு கையளிக்கப்பட்ட  வீடுகளை  பார்வையிடுவதற்காக  மக்கள் சென்ற போது   கையளிக்கப்பட்ட  அனைத்து வீடுகளின் சுவர்களிலும், ஒவ்வொரு வீட்டையும் கட்டி ய இராணுவத்தினரது புகைப்படத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்ப டமும் தொங்கவிடப்படுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு இராணுவ த்தினரின் பெயர்களும்  புகைப்படத்தில் பொறிக்கப்பட்டுள்ளன

http://onlineuthayan.com/news/19638

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
இதேவேளை யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் இராணு வத்தினரின் புகைப்படங்கள் தொங்கவிடப்படுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதன்போது  தமக்கு கையளிக்கப்பட்ட  வீடுகளை  பார்வையிடுவதற்காக  மக்கள் சென்ற போது   கையளிக்கப்பட்ட  அனைத்து வீடுகளின் சுவர்களிலும், ஒவ்வொரு வீட்டையும் கட்டி ய இராணுவத்தினரது புகைப்படத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்ப டமும் தொங்கவிடப்படுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு இராணுவ த்தினரின் பெயர்களும்  புகைப்படத்தில் பொறிக்கப்பட்டுள்ளன

http://onlineuthayan.com/news/19638

இருந்தாலும்.... ஆகிலும் கிரந்தம் விடக்கூடாது.

கைக்காசைப் போட்டுக் கட்டினால், மேசனின் படம் போடமாட்டோம்.

இங்கே நிலத்தையும் விடுவித்து, இலவசமாக வீட்டையும் கட்டித் தரேக்க, கட்டியவர் படம் இருந்தால் பெரிய குற்றமோ?

அட, நாலு நாளைக்குப் பொறகு தூக்கி கடாச வேண்டியது தானே..

இத செய்தியாக்கி....

தர்மஸ்தாபனங்கள் கூட தமது பெயர் குறித்தபெட்டிகளில் தான் இலவச நிவாரணங்களை போட்டுக் குடுக்கின்றன.

Image result for cow teeth

சும்மா வரும் மாட்டினை.... பல்லை பிடித்து பதம் பார்த்த கதை தான்....

Image result for cow teeth

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.