Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்'

Featured Replies

யாழ். மாணவர்கள் மரணம் ;  5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

 

 

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CvWJX_DUIAA_0kK.jpg

குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில்  கடந்த 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13136

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்'
 
 

article_1477025306-aa.jpg-சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கு விசாரணை, இன்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களாக அடையாளம்; காணப்பட்ட ஐந்து பொலிஸாரும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, தனது மரண விசாரணையின் அறிக்கையில், நீதவான் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.

'மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்ஸன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் நிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றைய மாணவன் கஜன் உயிரிழந்தார்' என நீதவான் கூறினார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருட்களான இரத்த மாதிரி, மாணவர்களது உடைகள், உடமைகள், மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி குண்டின் வெற்றுக்கோது என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டன. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வு பொலிஸார், மன்றில் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தம்மிடமுள்ள பெறுமதி வாய்ந்த தகவல்களை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு வழங்குவதற்கு நீதவான் அனுமதிப் பெற்றுத்தரவேண்டும் என மாணவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரினர். சட்டத்தரணிகளிடமுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் பணித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

முதலில் விபத்தால் இரண்டு மாணவர்களும் உயிரிழந்ததாக கூறிய பொலிஸார், அதன் பின்னர் அவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இந்த ஐந்து பேரும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட போது, தாங்கள் நின்று சுட்ட இடமான குளப்பிட்டிச் சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரையிலும் சரியாக அடையாளம் காட்டியிருந்தனர்.

இதன்போது, அவர்கள் நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், சொஹோ பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், துப்பாக்கி சன்னத்தின் கோது ஒன்றும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/185362/-ச-லக-ஸன-ச-டப-பட-ட-ர-கஜன-வ-பத-த-ல-உய-ர-ழந-த-ர-#sthash.iJr14hBK.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விளக்கமறியலில்...

 

 

விளக்கமறியலில்...

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிடப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்ப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐந்து பேரும், கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை அடுத்து அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே சந்தேகநபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2289&mode=head

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.