Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா'

Featured Replies

இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா'

Hambatotal-port-4d9e65bb959a469ad1c27a5fa112b106f2125c23.jpg

 

அம்­பாந்­தோட்டை துறை­முகம், சீனாவின் கைக்குச் செல்லப் போகி­றது. இந்த மாத நடுப்­ப­கு­தியில், சீன நிறு­வ­னங்­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் செய்து கொள்­ள­வுள்ள உடன்­பாட்­டுக்கு அமைய, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் 80 வீத பங்கு உரிமை சீனா நிறு­வ­னத்­துக்கு விற்­கப்­ப­ட­வுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் மாத்­தி­ர­மன்றி, மத்­தள விமான நிலை­யமும் கூட அவ்­வாறு தான் சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­றப்­ப­ட­வுள்­ளது.

அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தின் உரி­மையை சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­று­வதன் மூலம், கிடைக்கும் 1 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான நிதியைக் கொண்டு, ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் சீனா­விடம் பெறப்­பட்ட கடனை அடைப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

சீனா­விடம் பெறப்­பட்­டுள்ள இத்­த­கைய கடன்­களை அடைப்­ப­தற்கு அம்­பாந்­தோட்டைத் துறை­முகம் போன்று எட்டு பாரிய திட்­டங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் சீனா­விடம் பெற்­றுள்ள மொத்தக் கடன் தொகை 8 பில்­லியன் டொலர்­க­ளாகும்.

அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தையும், மத்­தல விமான நிலை­யத்­தையும் கையில் வைத்­தி­ருப்­பதால் எந்த இலா­பமும் கிடைக்­காது, கட­னையும் செலுத்த முடி­யாது என்­பதை உணர்ந்தே அர­சாங்கம் சீனா­வுடன் இத்­த­கைய இணக்­கப்­பாடு ஒன்­றுக்கு சென்­றுள்­ளது. இந்த இரண்டு திட்­டங்­க­ளையும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்­சியில் இருந்த போது வெள்ளை யானை திட்­டங்கள் என்றே கூறி­வந்தார்.

பொரு­ளா­தார ரீதி­யாக பய­னற்ற திட்­டங்­க­ளா­கவே இவை­யி­ரண்டும் இருக்கும் என்ற கடந்த காலக் கணிப்­பீ­டுகள் சரி­யா­னவை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில்தான், எப்­ப­டி­யா­வது இதனைச் சீனாவின் தலையில் கட்­டி­விட்டுத் தப்­பித்துக் கொள்­ளலாம் என்று முடிவு செய்து, அதற்­கான காய்­ந­கர்த்­தல்­களில் இறங்­கி­யி­ருந்தார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த ஏப்ரல் மாதம், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு மேற்­கொண்ட அதி­கா­ர­பூர்வ பய­ணத்தின் அடிப்­படை நோக்­கமே, இந்த திட்­டங்­களை வைத்து, சீனாவின் கடன்­களில் ஒரு­ப­கு­தியை அடைப்­பது குறித்துப் பேச்சு நடத்­து­வதுதான்.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­த­வு­ட­னேயே, சீனாவின் கடனை அடைப்­பதே பிர­தான பிரச்­சி­னை­யாக இருந்­தது. அதனால், அம்­பாந்­தோட்டைத் துறை­முகம், விமான நிலையம் போன்ற திட்­டங்­களில் முத­லீடு செய்­யப்­பட்ட நிதிக்­காக அற­விடும் வட்­டியைக் குறைக்­கு­மாறு சீனா­விடம் கேட்­டி­ருந்தார் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இது தொடர்­பாக சீனா­வுடன் நடத்­திய பேச்­சுக்கள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இரண்டு நாடு­க­ளுக்கும் நன்­மை­ய­ளிக்கக் கூடிய வகையில் நியா­ய­மான வட்­டி­யுடன் தான் கடன் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறி அந்தக் கோரிக்­கையை சீனா தட்டிக் கழித்து விட்­டது.

அதற்குப் பின்னர் தான், கடந்த ஏப்ரல் மாதம், கடன்­களை அடைப்­ப­தற்குப் பதி­லாக சீனாவின் திட்­டங்­களை அத­னி­டமே ஒப்­ப­டைத்துவிடும் திட்­டத்­துடன் பீஜிங் சென்­றி­ருந்தார் ரணில்.

உட­ன­டி­யாக சீனா அந்த திட்­டத்­தையும் ஏற்றுக் கொள்­ள­வில்லை. ஆராய்ந்து பார்க்­கிறோம் என்று கூறி அனுப்பிவிட்டு, அது­பற்றி ஆராய குழுக்­களை அனுப்­பி­யது. பேச்­சுக்­களை நடத்­தி­யது.

இந்தப் பேச்­சுக்­களின் தொடர்ச்­சி­யா­கவே, இரண்டு பிர­தான திட்­டங்­களின் உரி­மையின் 80 வீதத்தை சீனா­வுக்கு வழங்கும் உடன்­பாடு செய்து கொள்­ளப்­படும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த மாத நடுப்­ப­கு­தியில் இது­பற்­றிய உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள போதிலும், இந்த இரண்டு திட்­டங்­களின் உரி­மை­யையும் பெற்றுக் கொள்­ளப்­போகும் நிறு­வ­னத்தின் பெயரை வெளி­யி­ட­வில்லை.

ஆனாலும், சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னமே இதனை வாங்­க­வுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. எனினும் எதற்­காக இதனை அர­சாங்கம் மறைக்­கி­றது – மறைக்கப் பார்க்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இந்த இரண்டு திட்­டங்­க­ளையும் சீனாவின் உத­வி­யுடன் முன்­னெ­டுத்தபோது, அம்­பாந்­தோட்­டையில் சீனா காலூன்றப் போவ­தாக துள்ளிக் குதித்த எவ­ருமே, இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன- ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்டு அர­சாங்கம் இந்தத் திட்­டங்­களை சீனா­வுக்கு விற்கும் நட­வ­டிக்­கையைப் பகி­ரங்­க­மாகச் செய்யும் போது வாய் திறக்­காமல் இருப்­பது தான் ஆச்­ச­ரியம்.

முன்னர் அம்­பாந்­தோட்­டையில் சீனத் திட்­டங்­களை எதிர்த்த இந்­தி­யாவும், அமெ­ரிக்­காவும் இப்­போது எது­வுமே பேசாமல் இருக்­கின்­றன.

இந்­தி­யாவின் எதிர்ப்பைப் பொருட்­ப­டுத்­தாமல் மஹிந்த ராஜபக் ஷ அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் உத­வி­யுடன் திட்­டங்­களை முன்­னெ­டுத்தபோது, அங்கு ஒரு துணைத் தூத­ர­கத்தை நிறுவி கண்­கா­ணிப்­பதில் திருப்­திப்­பட்டுக் கொண்­டது இந்­தியா. அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனாவின் கட்­டுப்­பாட்டில் வரப்­போகும் விட­யத்தை இந்­தியா அவ்­வ­ளவு இல­கு­வான விட­ய­மாக எடுத்துக் கொள்­ளாது. ஏனென்றால், இந்த திட்டம், சீனா பற்­றிய சந்­தே­கங்­க­ளையும் அச்­சங்­க­ளையும் இந்­தி­யா­வுக்கு அதி­க­ரிக்கச் செய்யும்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினால் வணிக ரீதி­யாக வெற்­றி­பெற முடி­யாது என்­பதை இந்­தியா ஏற்­க­னவே அறியும். ஏனென்றால் மஹிந்த ராஜபக் ஷ இந்தத் திட்­டத்தை முதலில் இந்­தி­யா­விடம் தான் முன்­வைத்­தி­ருந்தார்.

இது­பற்­றிய இர­க­சி­ய­மான சாத்­திய ஆய்வை மேற்­கொண்ட இந்­தியா, வர்த்­தக ரீதி­யான அனு­கூ­லங்­களைப் பெற முடி­யாது என்­பதால், அதில் முத­லீடு செய்­வ­தற்கு முன்­வ­ர­வில்லை. அதற்குப் பின்னர் தான் சீனாவின் கைக்கு இந்தத் திட்டம் சென்­றது. இந்த திட்­டத்தில் மில்­லியன் கணக்­கான டொலர்­களை முத­லீடு செய்யும்போதே, இதனால் பயன் கிடைக்­காது என்று சீனா­வுக்கும், தெரியும்.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், அப்­போதே ஒரே கல்லில் பல காய்­களை விழுத்தத் திட்டம் போட்டுவிட்­டது. அதனால்தான், மில்­லியன் கணக்­கான டொலர்­களை கொடுத்து, அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்­தையும் விமான நிலை­யத்­தையும் அமைப்­ப­தற்கு ஊக்­கு­வித்­தது.

எந்தக் கேள்­வியும் கேட்­காமல் கடன் கொடுக்­கி­றது சீனா என்று மஹிந்த ராஜபக் ஷ பல சம­யங்­களில் பெரு­மை­யோடு குறிப்­பிட்­டி­ருந்தார். எதற்­காக சீனா அவ்­வாறு கடன் கொடுத்­தது என்றால், அந்தக் கடன் எப்­ப­டி­யா­வது திரும்பித் தனது கைக்கு வரும் என்ற நம்­பிக்கை அதற்கு இருந்­தது.

நிதியை முத­லீடு செய்த சீனா, தனது நிறு­வ­னங்­க­ளுக்கும் தொழில் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது. இதன் மூலம் சீனா­வுக்கு இரண்டு வாய்ப்­புகள் கிடைத்­தன. ஒன்று வழங்­கப்­பட்ட கடன் வட்­டி­யுடன் சேர்த்து திரும்பி வரும். அதே­வேளை, சீன நிறு­வ­னங்­க­ளுக்கும் தொழி­லா­ளர்­க­ளுக்கும் தொழில் வாய்ப்பும் கிடைத்­தது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம், விமான நிலையம் போன்ற திட்­டங்­க­ளினால் இலங்­கைக்கு ஆதாயம் கிடைக்­காது என்று தெரிந்து கொண்டே, அதில் முத­லீடு செய்­வ­தற்கு முன்­வந்­தது சீனா.

அப்­போது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் விழுந்த பொறியில் இருந்து தப்பிக் கொள்ள முடி­யாமல் இப்­போ­தைய அர­சாங்கம் தவிக்­கி­றது. இந்த நிலைமை இலங்­கைக்கு வரும் என்­பது சீனா­வுக்கு முன்­னரே தெரியும்.

இந்த இரண்டு திட்­டங்­க­ளையும் செயற்­ப­டுத்த முடி­யாத நிலை இலங்­கைக்கு ஏற்­படும் போது தன்னைத் தேடி வரு­வதை விட வேறு வழி கிடை­யாது என்­பதை சீனா அறிந்­தே­யி­ருந்­தது, ஏனென்றால், இந்த திட்­டங்­களில் வேறு நாடுகள் ஒரு­போதும் முத­லீடு செய்ய முன்­வரப் போவ­தில்லை.

சீனா எதிர்­பார்த்த மாதி­ரியே, இலங்கை அர­சாங்கம் அம்­பாந்­தோட்டை, துறை­முகம் விமான நிலை­யங்­களை வைத்துக் கொண்டு கடனை அடைக்­கு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரி­யி­ருந்தார்.

இப்­போது அதற்­கான உடன்­பாடு தான் கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

இப்­போது பய­ன­ளிக்­காத அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும் விமான நிலை­யத்­தையும் வைத்து சீனா என்ன செய்யப் போகி­றது? என்ற கேள்வி எழு­கி­றது.

நிச்­ச­ய­மாக சீனா இவற்றை இரா­ணுவத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்த முடி­யாது. அத்­த­கைய நோக்கில் பயன்­ப­டுத்­து­வதை தடுக்கும் வகையில் தான், சீனா­வு­ட­னான உடன்­பாடு அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை இரா­ணுவப் பயன்­பாட்­டுக்கு அனு­ம­திக்கும் உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டப்­பட்டால், அல்­லது இரா­ணுவத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தக் கூடாது என்ற விடயம் உடன்­பாட்டில் சேர்க்­கப்­ப­டாது போனால், இந்­தி­யாவும், அமெ­ரிக்­காவும் அதற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும்.

சீனா­வுக்கு இப்­போது, அம்­பாந்­தோட்­டையில் தேவைப்­ப­டு­வது ஒரு இரா­ணுவத் தளம் அல்ல. அத்­த­கைய தளத்தை அமைப்­ப­தற்­காக அது இன்னும் பல ஆண்­டுகள் காத்­தி­ருக்­கவும் தயார். அதற்கு முன்­ன­தாக, அம்­பாந்­தோட்­டையில் ஏதோ ஒரு வழியில் கால் வைக்க வேண்டும். அது தான் சீனாவின் தேவை.

இலங்­கையின் பொரு­ளா­தார நிலை கார­ண­மாக வேறு வழி­யின்றி சீனா­விடம் சர­ண­டைந்­தி­ருக்­கின்ற அர­சாங்­கத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, எப்­ப­டி­யா­வது அம்­பாந்­தோட்டை ஒரு குட்டி சீனா­வாக மாற்­றப்­படப் போகி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம், விமான நிலையம் என்­பன மாத்­தி­ர­மன்றி, இதனைச் சுற்­றி­யுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் சீனா­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இங்கு பாரிய கைத்­தொழில் முத­லீட்டு வலயம் அமை­ய­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று இரண்டு ஆண்­டுகள் நிறை­வ­டையும், அடுத்த ஜன­வரி 8ஆம் திகதி இதற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வு­களை நடத்த அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை கைத்­தொழில் வல­யத்தில் சீனா பெரி­ய­ளவில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு உற்­பத்­தி­களை தொடங்­கினால், துறைமுகமும், விமான நிலையமும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். இல்லாவிட்டால் சீன நிறுவனமும், இதேபோன்று தான் காகம் கலைக்க வேண்டியிருக்கும்.

ஆனாலும், சீனா அதையிட்டுக் கவலைப்படப் போவதில்லை.

ஏனென்றால், இலங்கையில் தளம் அமைக்கவே சீனா ஆசைப்பட்டது. அதற்கான ஒரு வாய்ப்பைப் இதன் மூலம் பெற்று விடும். இராணுவத் தளமாக இல்லாவிட்டாலும், இந்தியப் பெருங்கடலில் ஒரு துறைமுகம் தனது கட்டுப்பாட்டில் இருப்பது சீனாவுக்குப் பெரிய பலத்தைக் கொடுக்கும்.

இன்னொரு பக்கத்தில் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை தொடர்வதற்கும் இது உதவும்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பட்டுப்பாதைத் திட்டத்தை தொடர்வதில் சிக்கல்களை எதிர்கொண்ட சீனாவுக்கு இது புதிய நம்பிக்கையையும் கொடுக்கும்.

ஆக, மகிந்தவின் காலத்தில் சீனா வீசிய கல்லுக்கு இப்போதும் காய்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. சரியான இலக்கை நோக்கித் தான், சீனா கல்லை வீசியிருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.