Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள்

Featured Replies

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள்

382-4f5d717a4ba0dabb7944b0877de9fdcc8b8b76f4.jpg

 

தமிழ் மக்­களின் இயல்பு வாழ்க்­கையில், சட்டம் ஒழுங்­கிற்கு அப்பால் இரா­ணுவ ரீதியி­லான நடத்­தைகள் பார­தூ­ர­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்ற ஓர் உண்மை தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. ஆவா குழு பற்­றிய விவா­தங்­க­ளுக்கிடையில் இக் குழுக்­களின் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தா­பாய ராஜ­பக் ஷ இருப்­ப­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ண தெரி­வித்­துள்ளார்.

போருக்குப் பின்­பாக அரச இயந்­திரம் தேசிய பாது­காப்பு என்று கூறிக்­கொண்டு மக்கள் மீது பல்­வே­று­பட்ட நெருக் ­க­டிகளை ஏற்­ப­டுத்­தியே வந்­துள்­ளது என்­பது அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரின் தெரி­விப்­புக்­களிலிருந்து ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. போர் முடி­வ­டைந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட பின்னர் தேசிய பாது­காப்பு என்ற சொல்­லா­டல்­க­ளுக்­குள்­ளாக தனி­ந­பர்­களை பாது­காக்க அரசு தவ­றி­யுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய பத­வியிலிருந்த முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தா­பாய ராஜ­பக் ஷ, சட்­டத்­திற்கும் சமூ­கத்­திற்கும் விரோ­த­மான குழு­வொன்றை ஏற்­ப­டுத்தி அதன் வாயி­லாக தமிழ் மக்­களை அச்­சந்­தரும் சூழ்நிலைக்­குள்­ளேயே வாழ நிர்ப்­பந்­தித்­துள்ளார்.

போருக்குப் பின்­பாக மர்ம மனிதன் என சில­ரைக்­கொண்டு தமிழ் மக்கள் மத்­தியில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. உடலில் கிறீஸ் பூசி­ய­வாறு வீடு­க­ளுக்­குள்ளும் பொது நிறு­வ­னங்­க­ளுக்­குள்ளும் நன்கு பயிற்சி பெற்ற இம் மர்ம நபர்கள் மக்­களைத் தாக்கி வந்­தனர். ஒரு தடவை யாழ்ப்­பாணம் கொழும்­புத்­து­றைப்­ப­கு­திக்குள் மர்ம மனிதன் நுழைந்­த­போது அவர்­களை மடக்­கிப்­பி­டிக்க மக்கள் முயற்சி செய்­த­போது அம் மனிதன் இரா­ணுவ முகா­முக்குள் தப்பிச் சென்­றி­ருந்தார். இச்­சம்­ப­வங்­களைத் தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட தமிழ் அர­சியல் தலை­மை­களும் அவ­தா­னி­களும் மர்ம மனி­தனின் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­பாக நன்கு பயிற்­றப்­பட்ட இரா­ணுவ புல­னாய்­வுத்­து­றை­யி­னரே இருப்­ப­தாக உறு­தி­ப­டக்­கூ­றினார். இப் பிரச்­சினை நீதி­மன்றம் வரையில் சென்­றது. எனினும் ராஜ­பக்­ஷவின் ஆட்­சியில் அதி­க­மான உண்­மைகள் வெளி­வ­ர­வில்லை.

அண்­மைய ஆண்­டு­க­ளாக வடக்கில் குறிப்­பாக, யாழ்ப்­பா­ணத்தில் தமி­ழர்­களின் பண்­பாடு, கலா­சாரம், அடை­யாளம் போன்­ற­வற்­றினை சீர்­கு­லைக்கும் வகையில் சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­றன. போதைப்­பொருள் பாவனை மற்றும் கடத்தல் சம்­ப­வங்கள், வாள் வெட்டுக் கலா­சாரம், கொலை, கொள்ளை மற்றும் இதர குற்றச் செயல்­களும் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வா­றான ஒழுக்­கத்­திற்கும் மனி­தா­பி­மா­னத்­திற்கும் அப்­பாற்­பட்ட செயல்கள் மக்­களின் பாரம்­ப­ரி­யத்தில் இருந்­தி­ருக்­க­வில்லை. போரின் காலப்­ப­கு­தி­யிலும் இருந்­தி­ருக்­க­வில்லை. அப்­ப­டி­யி­ருந்தும் போருக்குப் பின்­பாக இவ்­வா­றான சம்­ப­வங்கள் அதி­க­ரித்­த­மைக்கு, தமிழ் மக்­களின் இனம் சார்ந்த கட்­ட­மைப்­புக்­களை சிதைப்­ப­தற்கும் மக்­க­ளி­டத்தில் ஓர் அச்ச உணர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­மான இரா­ணுவ உபா­ய­மா­கவே தாக்­கு­தல்கள் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற விமர்­ச­னங்கள் பர­வ­லாகக் காணப்­ப­டு­கின்­றன.

ஆவா குழு இன்று தமிழ் மக்­க­ளுக்கு பெரும் தலை­யி­டி­யா­க­வுள்­ளது. அவ்­வா­றான ஓர் குழு இரா­ணு­வப்­ பின்­ன­ணி­யு­டை­யது என ஏற்­க­னவே தமிழ்த் தரப்­புக்­களால் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விட்ட ஓர் சூழ்நிலை­யி­லேயே கோத்­தா­பா­ய­வுக்கும் அக்குழு­விற்­கு­மான தொடர்­பினை அர­சாங்கம் வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வா­ரத்தில் கூட முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் நடை­பெற்ற கலா­சார நிகழ்­வொன்றில் கருத்­து­ரைத்த வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், ஆவா குழு, சனா குழு போன்­ற­வற்றின் தக­வல்கள் இரா­ணு­வத்­திடம் உண்டு எனவும் நமது கலா­சாரம் சீர­ழிக்­கப்­ப­டு­கின்ற பின்­ன­ணியில் யார் உள்­ளனர் எனத் தெரிந்தும் தம்மால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாத நிலை­யுள்­ள­தாக உரை­யாற்­றி­யி­ருந்தார்.

தமிழ் மக்கள் இலங்­கையில் ஓர் தேசிய இன­மாக இருக்­கின்­றனர். இவ்­வாறு தேசிய இனம் ஒன்­றுக்கு வலு­வான அகக் கட்­ட­மைப்­புக்கள் இருக்­கின்­றன.

அவ் அகக் கட்­ட­மைப்­புக்­களில் புற்­று­நோய்­போன்று பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வது தமிழ்த் தேசியம் என்ற தளத்தை தூர்­வ­டையச் செய்­வ­தற்­கான உத்­தி­யா­க­வுள்­ளது. அந்த வகையில் பாது­காப்புத் தரப்­புக்­களில் அங்கம் வகிக்கும் சிலர் ஊடாக உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவோ உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற வகை­யிலோ பல்­வே­று­பட்ட சமூ­க­வி­ரோதச் செயல்கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­துடன் வழி­ந­டத்­தவும் படு­கின்­றன என்­பதை மறுக்­க­மு­டி­யாது. இதற்­காக தமிழ் இளை­ஞர்­களில் குற்­றச்­செ­யல்­க­ளிலும் சினி­மாப்­பா­ணி­யிலும் செயற்­பட உந்­துதல் உள்ள சிலர் உள்­வாங்­கப்­பட்டு செய­லூக்­க­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றனர்.

 ஆயு­தப்­ப­டை­க­ளுடன் தொடர்­பினைக் கொண்டு சட்­ட­வி­ரோத செயல்­களில் இயங்­கு­ப­வர்கள் சட்­டத்தின் விசா­ர­ணை­களில் இருந்து விடு­பாடு பெற்­ற­வர்­க­ளா­கவே பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பது பல சந்­தர்ப்­பங்­களில் வெளிப்­ப­டுத்­தவும் பட்­டுள்­ளது.

இரா­ணு­வத்­தினை வெளி­யேற தமிழ்த் தலை­மைகள் வலி­யு­றுத்­து­கின்­றன. இரா­ணு­வத்­தினை வெளி­யேற்­று­வது ஜன­நா­ய­க ரீ­தி­யான மறு­சீ­ர­மைப்­பிற்கு போருக்குப் பின்னர் தேவை­யா­க­வுள்­ளது. இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்டால் தமிழ் மக்­க­ளுக்­கான ஜன­நாயக இடை­வெளி அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. இவ் அதி­க­ரித்த ஜன­நா­யக இடை­வெ­ளியில், தமிழ் மக்­க­ளது நியா­ய­பூர்­வ­மான அர­சியல் உரி­மை­க­ளுக்­கான கோரிக்­கை­களும் செயற்­பா­டு­களும் வலுப்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்­க­ளுள்­ளன.

எனவே இரா­ணுவ வெளி­யேற்றம் தமிழ் மக்­க­ளுக்­கான நியா­யத்­தினை ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு சகிக்­க­மு­டி­யாத ஒன்­றா­க­வுள்­ளது. இவ்வகையில் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் மக்­களை வைத்­தி­ருப்­ப­தற்கு மஹிந்த அர­சாங்கம் முழு­மை­யாக செயற்­பட்­டது. தற்­போ­தைய அர­சாங்கம் விரும்­பியோ விரும்­பா­மலோ ஜன­நா­ய­கத்­தினை வலுப்­ப­டுத்த விரும்­பி­னாலும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரிய தடைகள் உள்­ளன.

ஜன­நா­ய­கத்­திற்­கான நட­வ­டிக்­கை­களை இரா­ணு­வத்­திரை அவ­ம­திப்­ப­தற்­கான விட­யங்­க­ளாக சிங்­கள மக்­க­ளி­டத்தில் திரி­வு­ப­டுத்­து­வ­தற்கு சிங்­கள மக்­க­ளி­டத்தில் பல கட்­ட­மைப்­புக்கள் இன்றும் காணப்­ப­டு­கின்­றன. இது துர்ப்­பாக்­கி­ய­மான சு10ழ்நிலை­யே­யாகும். 

மறு­பு­றத்தில் தற்­போ­தைய அர­சாங்கம் கூட ஆவாக்­குழு போன்­ற­வற்றின் செயற்­பா­டு­களை தமது தப்­பிப்­பி­ழைப்­பிற்­காக சாத­க­மான நிலையில் பயன்­ப­டுத்த முடி­யு­மானால் அதற்கும் பின்­னிற்­காது என்­பது அண்­மைய போக்­கு­களில் இருந்து வெளி­யா­கின்­றது. அண்­மையில் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­தனைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்­கிற்கு பொறுப்­பான அமைச்சர் சாகல ரட்­ணா­யக்கா ஆவாக்­குழு என்று நினைத்தே பொலிசார் மாண­வர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர் எனத் தெரி­வித்தார். மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட உடன் பொலிசார் விபத்து எனத் தெரி­வித்­தனர். சட­லங்­களை சட்ட வைத்­திய அதி­கா­ரியின் பரி­சோ­த­னை­யிட்­டதன் பிர­காரம் துப்­பாக்கிப் பிர­யோகம் எனத் தெரி­ய­வந்­தது. இவ்­வா­றாக சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­ப­வர்கள் உண்­மைக்குப் புறம்­பாக மக்­களின் நம்­பிக்­கை­யினை இழந்து நடந்து கொள்­கையில் அது பற்றி அதிகம் அலட்­டிக்­கொள்­ளாத அர­சாங்கம், “ஆவாக் குழு என நினைத்தே மாண­வர்கள் சுடப் பட்­டனா”; என்­றது. இதி­லி­ருந்து ஆவாக்­கு­ழுவின் அவ­சியம் ஏற்­பட்டால் அத­னையும் அர­சாங்கம் பயன்­ப­டுத்தும் என்­பது புல­னா­கின்­றது. மேலும் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இரண்டு வரு­டங்கள் அண்­மிக்­கப்­போ­கின்­றன. இப்­ப­டி­யா­னதோர் சூழ்நிலையில் கோத்­த­பா­யவின் இரா­ணுவ தேவைக்­காக ஆவாக்­குழு போன்ற சட்­ட­வி­ரோத அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்தால் அதனை ஏன் கலைக்க அழக்க முடி­யாமல் போனது என்ற கேள்­வியும் உள்­ளது.

மாண­வர்கள் படு­கொ­லையைத் தொடர்ந்து சுண்­ணா­கத்தில் இரு பொலிசார் மீது வாள் வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ் வாள் வெட்­டினைத் தொடர்ந்து தெற்கில் பல்­வே­று­பட்ட வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன. அவற்றில் தெற்கில் இருக்கக் கூடிய இன­வாத அமைப்­புக்கள் ஆவாக் குழு­விற்கும் புலி­க­ளுக்கும் முடிச்­சுப்­போட்­டன. ரவணா பலய போன்ற அமைப்­புக்கள் ஆவாக் குழுவில் இருந்து புலி­களைப் பாது­காப்­ப­தற்கு புதிய குழு­வொன்றை அமைக்­க­வுள்­ள­தாகக் கூட தெரி­வித்­தன. அர­சாங்கம் படை­யி­ன­ரையும் பொலி­சா­ரையும் பாது­காக்கத் தவறி வரு­வ­தாகக் அவை குற்­றஞ்­சாட்­டின. சிங்­க­ளப்­பத்­தி­ரிகை ஒன்று படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர்கள் விட­யத்தில் கடும் பொய்­யினை உரைத்­தது. 100 சீ.சீ மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த படு­கொலை செய்­யப்­பட்ட இளை­ஞர்­களை 1000 சீ.சீ மேட்டார் சைக்­கிளில் பய­ணித்­தனர் என்­றது. இவ்­வாறு சிங்­கள தரப்­புக்­க­ளி­டத்தில் நல்­லி­ணக்­கத்­திற்கும் உண்­மைக்கும் புறம்­பாக எழுந்த கருத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. நல்­லி­ணக்கம் பற்றி பேசப்­ப­டு­கின்ற மறு­பு­றத்தில் தமிழ் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான பிரச்­சி­னைகள் மீ சேறு பூசப்­ப­டு­கின்­றன. இப் போக்­கு­க­ளுக்கு எதி­ராக சகோ­தர இன­மான சிங்­கள மக்­க­ளி­டத்தில் இருந்து எதிர்ப்­ப­தற்கு பஞ்­சமே நில­வு­கின்­றது. இவைகள், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்­கான காத்­தி­ர­மற்ற போக்­கு­களைக் படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றது.

தற்­போது அரசாங்கம் ஆவாக்குழு போன்ற சமூக விரோத அமைப்புக்களை கோத்தபாய ஏற்படுத்தினார் என ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய தமிழ் மக்களைக் கையாள்வதற்கு இவ்வாறான ஓர் சட்டவிரோத குழுக்களை ஏற்படுத்தினார் எனில், அவர் அதற்காக இராணுவத்தினரையே பயன்படுத்தியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.மகிந்தவின் ஆட்சியில் இராணுவம் கோட்டபாயவின் வசம் இருந்திருந்தபோதும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவம் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே செயற்படுகின்றது.

எனவே இவ்வாறான சமூகவிரோத சக்திகளை பதவியில் உள்ள அரசாங்கம் களைவதற்கு அதிகம் பாடுபடவேண்டியதில்லை.

 அதேயிடத்தில் தமிழ் மக்களின் இருப்பினைக் கோள்விக்குள்ளாக்கிய இவ்வாறான குழுக்களை உருவாக்கிய கோத்தபாய, மற்றும் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கோள்வியும் உள்ளது.

அல்லது கோத்தபாய ஆவாக்குழுவை உருவாக்கினார் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தாலும் இவ்வாறு தெரிவித்ததையும் அரசியல் விட்டுக்கொடுப்புக்களுடன் தான் நல்லாட்சி அணுகப்போகின்றதா என்பதுவும் கேள்வியே?

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.