Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டுடனான விசாரணையின் அவசியம் - வீரகேசரி ஆசிரியர்

Featured Replies

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ர­ணையின் அவ­சியம் தொடர்ந்தும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்றது.

 ஆனாலும் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் மாற்று நிலைப்­பாட்டை கொண்­டுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. இதனால் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை தொடர்பில் தமிழ் மக்கள் நம்­பிக்கை இழக்கும் நிலை உரு­வா­கி­ வ­ரு­கின்­றது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த யுத்­தத்­தின்­போதும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­காய­ம­டைந்­தனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பேர் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் அநா­த­ர­வா­கினர். இவ்­வாறு பெரும் இழப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய யுத்­தத்­தின்­போது மனித உரிமை மீறல்­களும் யுத்­தக்­குற்­றங்­களும் இடம்­பெற்­றன என்­பதை சகல தரப்­பி­ன­ருமே ஏற்­றுக்­கொள்­கின்­றனர்.

இந்த நிலை­யில்தான் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்­பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் முத­லா­வது பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­ வேண்­டு­மென்று இந்தப் பிரே­ரணை மூலம் வலி­யு­றுத்­தப்­பட்­டது. 2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு என தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை இடம்­பெற்­றது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் புதிய ஆட்­சிக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அந்த வருடம் செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் உள்­ள­க ­வி­சா­ர­ணை­யினை நடத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­தது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்கி இந்த உள்­ளக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­துடன் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது.

இவ்­வாறு சர்­வ­தேச நீதி­ப­தி­களின் ஒத்­து­ழைப்­புடன் உள்­ளக விசா­ர­ணை­யினை மேற்­கொள்ள இலங்கை அர­சாங்கம் இணங்­கிய போதிலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் இன்­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான விட­யத்தில் கால­தா­மதம் காண்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளு­ட­னான உள்­ளக விசா­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணங்­கிய போதிலும் இத்­த­கைய சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ர­ணைக்கு ஒரு­போதும் இட­மில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அமைச்­சர்­களும் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்­றனர். அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியே சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு ஒரு­போதும் சாத்­தி­ய­மில்­லை­யென்று தெரி­வித்­தி­ருக்கும் நிலையில் விசா­ர­ணையின் போக்கு எவ்­வாறு அமையும் என்ற கேள்­விக்­கு­றியே தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

கடந்த ஜூன்­மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரின் போது வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இலங்கை நிலை­வரம் தொடர்பில் கூட்­ட­மொன்றை நடத்­தி­யி­ருந்தார். இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட புலம்­பெ­யர்ந்த தமிழ் அமைப்­பினர் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­பு­க­ளு­ட­னான விசா­ரணை தொடர்பில் கேள்­வி­களை எழுப்­பினர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை என்று கூறி­ வ­ரு­கின்ற நிலையில் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்று இவர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்குப் பதி­ல­ளித்­தி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அது ஜனா­தி­ப­தியின் தனிப்­பட்ட கருத்து என்றும் இவ்­வி­டயம் தொடர்பில் இன்னமும் உறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் கூறி­யி­ருந்தார்.

இவ்­வாறு சர்­வ­தேச தலை­யீட்­டு­ட­னான நீதி­யான விசா­ரணை தொடர்பில் குழப்­ப­மான நிலையே தற்­போதும் காணப்­பட்டு வரு­கின்­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் பிரித்­தா­னிய நாட்டின் பாலியல் வன்­மு­றைகள் தொடர்­பான இரா­ஜாங்க அமைச்சர் பரனஸ் அனவி இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் நடை­முறை விடயம் தொடர்பில் ஆராயும் வகை­யி­லேயே அவ­ரது இந்த விஜயம் அமைந்­தி­ருக்­கின்­றது.

இலங்கை வந்­துள்ள இவர் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான மாகாண அமைச்­சர்கள் குழு­வி­னரை நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்தில் சந்­தித்து பேசி­யுள்ளார். எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்­பி­ன­ரையும் நேற்று இவர் சந்­தித்துப் பேசி­யுள்ளார்.

பிரித்­தா­னிய அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்­பின்­போது சர்­வ­தேச தலை­யீட்­டு­ட­னான விசா­ர­ணையின் அவ­சியம் குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் விளக்கி கூறி­யி­ருக்­கின்றார். இலங்கை அர­சாங்கம் இன்­று­வ­ரைக்கும் போர்க்­குற்ற விசா­ர­ணையில் சர்­வ­தேச நாடு­களின் தலை­யீட்டை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அத்­துடன் அத்­த­கைய சர்­வ­தேச நாடு­களின் தலை­யீட்டை அவர்கள் விரும்­ப­வில்லை. இத­னா­லேயே நாங்கள் கடந்த வருடம் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ருக்கு இந்த விடயம் தொடர்பில் தெரி­வித்­தி­ருந்தோம். போர்க்­குற்றங்­க­ளுக்கு தண்­டனை வழங்­கக்­ கூ­டிய சட்டம் உலகில் பல நாடு­களில் நடை­மு­றையில் உள்­ள­போதும், இலங்கை அர­சாங்கம் அதனை உருவாக்­கு­வ­தற்கு ஒரு நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்று முத­ல­மைச்சர் பிரித்­தா­னிய அமைச்­ச­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சர்­வ­தேச நாடு­களின் தலை­யீட்­டுடன் போர்க்­குற்­ற­வி­சா­ரணை நடத்­தப்­ப­டா­விட்டால் தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கப் ­போ­வ­தில்லை. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய சர்­வ­தேச விசா­ர­ணை­களை அர­சாங்கம் விரும்­ப­வில்லை அதனை அங்­கீ­க­ரிக்­க­வு­மில்லை. எனவே சர்­வ­தேச தலை­யீடு இல்­லையேல் எமக்கு நீதியும் கிடைக்­கப் ­போ­வ­தில்லை என்றும் முத­ல­மைச்சர் இந்த சந்­திப்பில் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதேபோல் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­பின் ­போதும் நீதி­யான விசா­ரணை நடத்­து­வ­தற்கு பிரித்­தா­னி­யாவின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு சர்­வ­தேச பங்­க­ளிப்­பு­ட­னான விசா­ர­ணையை தமிழ் தரப்­பினர் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அந்த விட­யத்தில் அர­சாங்­க­மா­னது அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் சர்­வ­தேச விசா­ர­ணையின் அவ­சியம் பல தட­வைகள் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன. தற்­போது இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து சர்­வ­தேச நீதி­பதி­களின் ஒத்­து­ழைப்­பு­ட­னான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சர்­வ­தேச நாடுகள் சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால் இந்த விசா­ரணைப் பொறி­முறை அமைக்­கப்­ப­டு­மென்று உறுதியளித்த அரசாங்கமானது தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறிவருவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு ஏமாற்றுச் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.

தற்போதைய நிலையில் சர்வதேச நீதிபதிகளுடனான உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டுமானால் அதற்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் என்பது முக்கியமானதாகும். எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கமானது விசாரணைப் பொறிமுறை தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கு முன்னர் விசாரணைப் பொறிமுறையின் நம்பகத் தன்மையை புலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.

எனவே மனித உரிமை பேரவையில் இணங்கிக் கொண்டதற்கு இணங்க சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைப் பொறிமுறையினை முன்கொண்டு செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.