Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஊரடங்கு வேளையில் நடமாடுவோரை கைதுசெய்யுமாறு பிரதம நீதியரசர் பணிப்பு

Featured Replies

யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்

அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குடாநாட்டில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் படி யாழ். அரச அதிபருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

விழிப்புக்குழுவுக்கு பொலிஸாரும் படையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பணித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து யாழ். நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகளும், அரச அதிபரும் கலந்துகொண்டனர்.

விழிப்புக் குழுக்களைக் கிராம சேவையாளர்கள் ஊடாக அமைப்பது குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டது. (ஐ)

http://www.sudaroli.com/pages/news/today/10.htm

இஞ்ச பாருங்கடா சிறீ லங்காவின்ற பிரதம நீதியமைச்சர் சவுன்டு விடுறாரு! யாழ்பாணத்தில கட்டாக்க்காலி நாய்களாகத் திரிகின்ற நாற்பதுனாயிரம் ஆமிக்காரரும், கங்காருக்குட்டிகள் மாதிரி ஆமிக்காரறின்ற மடியுக்க இருந்து பால் குடிச்சுக் கொண்டு இருக்கின்ற ஒட்டுப்படைகளும் இரவு நேரங்களில தங்கட காம்புகளிக்க அடங்கி இருப்பீனமா இருந்தா யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் ஒன்றும் நடைபெறாது.

இந்தக் கிலியுககாலத்தில ஒரு நாட்டின் பிரதம நீதியமைச்சரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கு சரத் என். சில்வா ஒரு நல்ல எடுத்துக்காட்டு! இவங்கள் எல்லாம் நீதியமைச்சரா இருந்து சிறீ லங்கா எப்படி திருந்துவது?

இவர்களது கதைகள் எலிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு பூனைகளை காவலிற்கு விட்டது மாதிரி இருக்கின்றது.

சரியாகத்தான் சொன்னீர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.