Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள்

[29 - January - 2007] [Font Size - A - A - A]

* கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்

அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் இயக்கம் அன்றைய தினம் தலைநகரில் ஒழுங்கு செய்த சமாதானப் பேரணியை சட்டவிரோத கும்பல் ஒன்று குழப்பியதுடன் ஊடகம் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டது.

லங்கா ஈநியூஸ் ஊடகத்தை சேர்ந்த அஜித் செனவிரத்னவும் ஹரயா மாதாந்த சஞ்சிகையிலும் பி.பி.சி. சிங்கள சேவையிலும் பணியாற்றும் ஞானசிறி கொட்டிகொடவும் தாக்கப்பட்டதுடன் மற்றுமொரு பகுதிநேர படப்பிடிப்பாளரின் புகைப்பட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மூவரும் பின்னர் ஊடகவியலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உள்ளூர் அமைப்பான சுதந்திர ஊடக இயக்கத்திடம் தகவல் தெரிவிக்கையில் தம்மீதான தாக்குதலின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் ஒருவர் இருந்ததாக தாம் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

ஊடகவியலாளர் அமைப்பு விடுத்த அறிக்கையில், பேரணியின் போது தாக்குதல் இடம்பெறலாம் என்று பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்த போதிலும் இத்தாக்குதல்கள் இடம்பெற்றபோது போதிய பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படாதமை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை அவதானித்த சுதந்திர ஊடக இயக்கம் இலங்கையில் பிற கருத்தை சகிக்காததும் யுத்த எதிர்ப்பு உணர்வை பலவந்தமாக ஒடுக்குவதுமான அபாயகரமான போக்கு ஒன்று உருவாகிவருவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் விடுத்த அறிக்கையில், பதவியிலிருக்கும் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் தலைமையிலான சட்டவிரோத கும்பலே இத்தாக்குதலுக்கு பொறுப்பு என்று வெளியான செய்திகள் நிரூபிக்கப்பட்டால், இலங்கையின் ஜனநாயகத்திற்கு அது பெரும் அடியாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயக நடைமுறைகள் சட்டவிரோத கும்பல்களால் சீர்குலைக்கப்படும் சாத்தியங்கள் ஆழ்ந்த கவலையை தருவதாக உள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களினதும் சிவில் சமூக ஆர்வலர்களினதும் பாதுகாப்பு, பந்தோபஸ்து ஆகியன கேள்விக்கிடமாகி உள்ளன என்றும் சுதந்திர ஊடக இயக்கம் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையான யுத்தமாக உருவெடுப்பதற்கு முன்னரே ஊடகவியலாளர்களுக்கு அச்ச உணர்வு தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள துறைமுக நகரான திருகோணமலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஐந்து தமிழ் இளைஞர்கள் நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதை படம் பிடித்த புகைப்படப் பிடிப்பாளர் பின்னர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இராணுவம், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு யுத்தத்தை விஸ்தரிக்கவே முக்கிய பிரச்சினைகள், சம்பவங்கள் பற்றி எழுதுவது குறித்து உத்தியோகப் பற்றற்ற முறையில், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால

கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள்

[29 - January - 2007] [Font Size - A - A - A]

கறுபீ வெட்டி ஒட்டுறீங்க சரி மேலே சிகப்பால் கூறிக்கப்பட்டதை நீக்கிக்கிப் போட்டு ஒட்டலாம் தானே

இப்படியே ஓடினால் எங்கு போய் முடியுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.