Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையைக் கிளறிய சீனத்தூதுவர்

Featured Replies

சர்ச்­சையைக் கிள­றிய சீனத்­தூ­துவர்

W0205-39b4f2ae187e1d6317355938317c89e9814119f0.jpg

 

இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வுகள் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்ற நிலையில், இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வு­களில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்­றுடன் நடத்­திய சந்­திப்பில் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான கார­ண­மாகும்.

செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு சீனத் தூதுவர் அளித்­தி­ருந்த பதில்கள், சீனாவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விமர்­சிக்கும் தொனி­யையும், கேள்வி எழுப்பும் பாங்­கையும் கொண்­டி­ருந்­தது தான் சர்ச்­சை­க­ளுக்கு முக்­கி­ய­மான காரணம்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இலங்­கைக்கு அதிக வட்­டியில் சீனா கடன் வழங்­கி­யி­ருந்­த­தாக கடந்த ஆண்டு ஆட்­சிக்கு வந்த புதிய அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வந்­தது.

அதிக வட்­டி­யுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்­டி­யுள்­ளதால் தான், இலங்கை பொரு­ளா­தார நெருக்­க­டி­களை அதி­க­ளவில் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்து வந்தார்.

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும், சீனா­விடம் இந்தக் கட­னுக்­கான வட்­டியைக் குறைக்­கும்­படி இலங்கை அர­சாங்கம் கோரி­யி­ருந்­தது.

முதலில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் சீனா சென்று இந்தக் கோரிக்­கை­களை விடுத்­தி­ருந்­தனர்.

ஆனால், இர­த­ரப்­புக்கும் நன்­மை­ய­ளிக்கக் கூடிய வகையில் தான் வட்டி வீதங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் எந்த மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்த முடி­யாது என்றும் சீனா கூறி­விட்­டது.

அதற்குப் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சீனா­வுக்கு மேற்­கொண்ட பய­ணங்­களின் போதும், இது­பற்­றிய கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன. ஆனாலும் சீனா அசைந்து கொடுக்­க­வே­யில்லை.

ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாட்­டுக்கு அமை­யவே வட்­டியைச் செலுத்த வேண்டும் என்றும் அதில் எந்த மாற்­றமும் செய்ய முடி­யாது என்றும் திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­டது.

சீனாவின் இந்த இறுக்­க­மான நிலைப்­பாட்­டினால் தான், சீனாவின் கடன் முத­லீட்டில், அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும், மத்­தள விமான நிலை­யத்­தையும் சீன நிறு­வ­னங்­க­ளுக்கே கைமாற்றும் திட்­டத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­தி­ருந்தார்.

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையும், மத்­தள விமான நிலை­யத்­தையும் சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்றம் செய்­வதன் மூலம் பெறும் 1 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான நிதியைக் கொண்டு, சீனா­விடம் அதிக வட்­டிக்கு பெறப்­பட்ட கடனில் ஒரு பகு­தியை அடைக்க அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான உடன்­பாடு இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் கையெ­ழுத்­தி­டப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருந்த நிலையில் தான் திடீ­ரென சீனத் தூது­வரால் புதிய பிரச்­சினை எழுப்­பப்­பட்­டுள்­ளது.

ஹம்­பாந்­தோட்­டையில் 50 சதுர கி.மீ பரப்­ப­ளவில் கைத்­தொழில் வல­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நிலத்தை வழங்­கவும் அர­சாங்கம் தயா­ராகி வந்­தது.

சீனா வழங்­கிய கட­னுக்­கான வட்டி தொடர்­பாக, சீனத் தூதுவர் வெளி­யிட்ட கருத்தையடுத்து, இந்த இணக்­கப்­பா­டு­களின் எதிர்­காலம் என்ன ? இதில் இழு­ப­றிகள் ஏற்­ப­டுமோ என்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

செய்­தி­யாளர் சந்­திப்பில், 2 சத வீத வட்­டியில் தான் கடன் வழங்­கப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்த சீனத் தூதுவர், இந்த விடயம் குறித்து அடிக்­கடி கருத்­துக்­களை வெளி­யிடும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் தாம் பேசி­யி­ருப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

அண்­மையில் ஐரோப்­பிய நாடு­க­ளிடம் 5.6 வீத வட்­டிக்கு கடன் வாங்­கி­யுள்ள இலங்கை அர­சாங்கம் சீனாவின் 2 வீத­க­டனை அதிகம் என்று கூறு­வது எப்­படி என்றும் அவர் வின­வி­யி­ருந்தார்.

அதிக வட்­டிக்கு சீனா கடன் வழங்­கு­கி­றது என்றால், எதற்­காக மீண்டும் சீனா­விடம் அவர்கள் கடன் கேட்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அதா­வது 2 வீத வட்­டிக்கே சீனா கடன்­வழங்­கி­யது என்­பதை திரும்பத் திரும்ப வலி­யு­றுத்­தி­யி­ருந்தார் சீனத் தூதுவர்.

இந்த சீனாவின் கட­னுக்­கான வட்டி விவ­காரம், ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் அண்­மைக்­கா­லத்தில் பெரி­தாக எழுப்­ப­ட­வில்லை.

ஆனாலும், சீனத் தூதுவர் இந்த விவ­கா­ரத்தை இப்­போது கிள­றி­யி­ருப்­பது சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

சீனத் தூது­வரின் கருத்­தினால் ஆத்­தி­ர­ம­டைந்த நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க 2 வீத வட்­டிக்கே கடன் வழங்­கப்­பட்­டது என்றால் மகிழ்ச்சி தான். அந்­த­ள­வுக்கு வட்­டியை திரும்பச் செலுத்­தினால் போதும் என்று பதி­லடி கொடுத்­தி­ருக்­கிறார்.

இரண்டு நாட்டு அர­சாங்­கங்­க­ளுக்கு இடையில் செய்து கொள்­ளப்­பட்ட இந்த உடன்­ப­டிக்­கையில், வட்டி வீதம் தொடர்­பான ஏன் வெளிப்­ப­டைத்­தன்மை கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது.

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை பெயர் குறிப்­பிட்டு சீனத் தூதுவர் விமர்­சித்­தமைக்கு எதிராக அர­சாங்­கம் கடு­மை­யான அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த விவ­காரம் குறித்து வெளி­வி­வ­கார அமைச்சு விசா­ர­ணை­களை நடத்­தி­யி­ருக்­கி­றது. சம்­பந்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­களின் வீடியோ காட்­சி­களை பார்த்து வெளி­வி­வ­கார அமைச்சு சீனத் தூது­வ­ருக்குப் பதில் கொடுக்­கவும் தயா­ரா­கி­யது.

சீனத் தூதுவர் இரா­ஜ­தந்­திர வரன்­மு­றை­களைத் தாண்டிச் சென்று கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருப்­பது அர­சாங்­கத்­துக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும், முடிந்­த­ள­வுக்கு ஆத்­தி­ரத்தை அடக்கிக் கொள்ள முனை­கி­றது.

காரணம், பொரு­ளா­தார ரீதி­யாக சீனாவின் தயவை நாட வேண்­டி­யுள்ள நிலையில், வீணான பகையை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் விரும்­ப­வில்லை.

சீனா­வுடன் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நீடிக்கும் ஒரு இடை­வெளி இந்தச் சர்ச்­சையால் மேலும் ஆழ­மா­வதை அர­சாங்கம் ஆபத்­தா­ன­தாக பார்க்­கி­றது.

அத்­த­கைய இடை­வெளி அதி­க­ரிப்­பது. அர­சியல் ரீதி­யாக மஹிந்த ராஜபக் ஷவைப் பலப்­ப­டுத்­தவே உதவும்.

ஏற்­க­னவே மீண்டும் மஹிந்­தவை ஆட்­சிக்கு கொண்டு வர சீனா முயற்­சிப்­ப­தாக சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

இந்த நிலையில், சீனா­வுடன் முரண்­பா­டு­களை வளர்த்துக் கொண்டால், அது மஹிந்த ராஜபக் ஷவுக்கே இன்னும் சாத­க­மாக அமையும்.

சர்ச்­சையைக்...

(04ஆம் பக்கத் தொடர்ச்சி)

அடுத்து பொரு­ளா­தார ரீதி­யா­கவும் இந்த முரண்­பா­டுகள் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். பொரு­ளா­தார பின்­ன­டைவில் இருந்து தப்­பிக்க வேண்­டு­மாயின், சீனா­வுடன் உற­வு­களை வலுப்­ப­டுத்தி அந்த நாட்டின் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க வேண்டும்.

இப்­போ­தைய இக்­கட்­டான நிலையில் இருந்து மீள்­வ­தற்கு சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டுகள் இலங்­கைக்கு அவ­சியம்.

இந்த நிலையில். சீனா­வுடன் இப்­போது பகை­மையை வளர்த்துக் கொள்­வதை அர­சாங்கம் கூடு­மா­ன­ள­வுக்கு தவிர்க்­கவே பார்க்­கி­றது.

இல்லா விட்டால் சீனத் தூதுவர், வெளி­வி­வ­கார அமைச்சின் கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­களை எதிர்­கொள்ள நேரிட்­டி­ருக்கும்.

சீனத் தூது­வரின் கருத்­துக்கு அர­சியல் ரீதி­யாக அர­சாங்கம் எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை. அதி­கா­ரிகள் மட்­டத்தில் வெளி­வி­வ­காரச் செய­லரைக் கொண்டே பதி­ல­ளித்­தி­ருக்­கி­றது வெளி­வி­வ­கார அமைச்சு.

இது­போன்ற விட­யங்கள் குறித்து ஊட­கங்கள் மூலம் பேச வேண்டாம் என்றும், கரி­ச­னைக்­கு­ரிய எந்த விடயம் குறித்தும் திறந்த மன­துடன் விவா­திக்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும், வெளி­வி­வ­காரச் செயலர் எசல வீரக்கோன் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

சீனா­வுடன் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதை தவிர்க்­கவே இந்த பவ்­வி­ய­மான நகர்வு.

ஆனாலும், கட­னுக்­கான வட்டி விவ­காரம் கிட்­டத்­தட்ட காலம் கடந்து போய் விட்ட நிலை­யிலும், சீனத் தூதுவர் அதனை மீளக் கிளறி விட்­டி­ருப்­பது, உள்­நோக்கம் கொண்ட செய­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

சீனத் தூது­வர்கள் பொது­வா­கவே, உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் கருத்­துக்­களை அதிகம் வெளி­யி­டு­வ­தில்லை. அத­னையும் மீறி அவர்கள் கருத்­துக்­களை வெளி­யி­டு­கி­றார்கள் என்றால் அது பீஜிங்கின் உத்­த­ரவின் படியே நடந்திருக்கும் என்பது பரவலான நம்பிக்கையாக இருக்கிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங், தமது நாட்டுத் தூதுவரின் கருத்தை நியாயப்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் விருப்புடன் தான் சீனா இதனைச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எது எவ்வாறாயினும், சீனத் தூதுவரால் ஏற்படுத்தப்பட்ட சலசலப்பு அரசியல் மட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பினும், இலங்கை அரசாங்கம் முடிந்தளவுக்கு இந்தப் பிரச்சினையை அமுக்கவே முனையும்.

ஏனென்றால், இந்தப் பிரச்சினை வளர்ந்தால் அல்லது வளர்க்கப்பட்டால் அதன் ஆபத்தை அனுபவிக்கப் போவது இலங்கை அரசாங்கம் தான்.

எனவே, கத்தி மீது நடக்கும் இந்தப் பயணத்தில், அரசாங்கம் இன்னும் கூர்மையான கவனத்தை செலுத்தவே முனையும்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-13#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.