Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு

Featured Replies

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு

img_8889
 
இன்று  14-11-2016  திங்கள்  கிளிநொச்சியில்  சிறப்பாக  நடைபெற்ற அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு  பிற்பகல்  மூன்றுமணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  விருந்தினர்களாக  யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
 
வள்ளுவர் புரம்  புரட்சி தலைமையில் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் முதற் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வழங்க வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் பெற்றுக்கொண்டார்  மற்றும் சிறப்புப் பிரதியினை வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்  வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பெற்றுக்கொண்டார்.
img_8901
 
 சிறப்புரைகளின்  வரிசையில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி, வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன்,  மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்  நூலின் விமர்சன உரையினை  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் சத்தியானந்தம்  நிகழ்த்தினார்
 
மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை  வடக்குமாகாண சபையிலே கொண்டுவந்து வைக்கப்பட்டது .அங்கு இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கல்வியலாளர்கள் , நடந்தது என்ன  ,  ஒன்றும் செய்யவில்லை  வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள்  எதிர்க்கட்சி என  வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம்  செய்த போது வடமாகாண சபை உறுப்பினர்     ப.அரியரட்னம்  உரையினை நிறுத்துமாறு கோரி குழப்ப  நிலையில்  மேடையினை விட்டு வெளியேற  முயன்ற போது ஏற்பாட்டளர்களினால்  சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு  மீண்டும்  நடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 
இன் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் கல்வியலாளர்கள் , அரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின், கவிஞர்கள் ,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
img_8903img_8908img_8913
img_8919img_8933img_8937img_8942img_8953
 
 
 

http://globaltamilnews.net/archives/7013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.