Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதைகளை முற்றாக தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Featured Replies

சித்­தி­ர­வ­தை­களை முற்­றாக தடுப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும்

 

இலங்­கையில் இர­க­சிய முகாம்கள் இருந்­த­னவா என்றும் வெள்­ளை வேன் கடத்தல் சம்­ப­வங்கள் தொடர்­கின்­ற­னவா எனவும் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கி­ய­நா­டுகள் குழுவின் உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் ஆரம்­ப­மா­னது. இந்த அமர்வில் இலங்கை விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போதே இவ்­வா­றான கேள்­வி­களை அந்­தக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் எழுப்­பி­யுள்­ளனர்.

இலங்­கையின் யுத்­த­கா­லத்தில் இர­க­சிய முகாம்கள் பேணப்­பட்­டதா? பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் நிலைமை எந்த மட்­டத்தில் உள்­ளது. பல்­வேறு சித்­தி­ர­வதை குற்­றச்­சாட்­டுக்கள் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது­ தொ­டர்பில் அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் என்ன? இர­க­சிய முகாம்கள் யுத்­த­கா­லத்தில் இலங்­கையில் இருந்­த­தாக எமக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இர­க­சிய முகாம்கள் இலங்­கையில் இருந்­தி­ருப்பின் அது எவ்­வாறு நடை­பெற்­றது என்று விளக்க முடி­யுமா? பயங்­க­ர­வாத தடைச் ­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உரிய வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­னவா? அவர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றதா? பயங்­க­ர­வாத தடைச் ­சட்­டத்தை நீக்­கு­மாறு நாம் அர­சாங்­கத்தை கோரி வரு­கின்றோம். எனினும் அது தொடர்பில் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்றும் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ.நா.வின் குழு கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­களில் வெள்­ளைவேன் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இலங்கை தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட ஐ.நா. மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்­கை­யா­னது யுத்­தத்தில் அரச படை­யினர் பாலியல் வல்­லு­றவு செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன? பொலிஸ் தடுப்பின் போது சந்­தேக நபர்கள் உயி­ரி­ழந்த சம்­ப­வங்கள் குறித்து குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­னவா? இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கடந்த வருடம் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அந்தப் பிரே­ர­ணையின் பிர­காரம் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தயா­ரிக்­கப்­ப­ட ­வேண்­டி­யுள்­ளது. அந்தப் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் முன்­னேற்றம் எவ்­வாறு உள்­ளது. உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், காணாமல் போனோர் தொடர்பில் ஆராய நிரந்­தர அலு­வ­லகம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது. அதன் தற்­போ­தைய நிலைமை என்ன என்றும் ஐ.நா. குழு கேள்­விக்கணை­களை தொடுத்­தி­ருக்­கின்­றது.

இத­னை­ விட திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பிலும் மூதூரில் 17 அக்­ஸன்பாம் தொண்­டு ­நி­று­வன ஊழி­யர்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் கால­தா­ம­தப்­ப­டுத்­த­ப்ப­டு­வதன் நோக்கம் குறித்தும் இந்தக் குழு­வினர் விசனம் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வில் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, குற்­றப்­ பு­ல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் கலந்­து­கொண்­டுள்­ளனர். இந்தக் கூட்டத் தொடரில் குற்­றப்­ பு­லனாய்வுப் பிரிவின் பிர­திப் ­பொ­லிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் பங்­கேற்­றமை குறித்தும் சர்­வ­தேச நீதி மற்றும் உண்­மைக்­கான அமைப்பின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஜஸ்மின் சூக்கா கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் மிக மோச­மான சித்­தி­ர­வதை முகா­முக்கு பொறுப்­பாக இருந்த அதி­கா­ரியை இலங்கை அர­சாங்கம் ஐக்­கி­ய­நா­டுகள் அமர்­வுக்கு அனுப்­பி­யுள்­ளது. இலங்­கையின் உள்­நாட்டு யுத்­தத்தின் இறுதித் தரு­ணங்­களில் பணி­யாற்­றி­யவர் சிசிர மெண்டிஸ். அவ்­வேளை அவர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பாகக் காணப்­பட்டார். நான்காம் மாடி சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு அவரே பொறுப்­பாக காணப்­பட்டார். அவ்­வா­றான ஒரு­வரை ஐ.நா. அமர்­விற்கு அனுப்­பி­யுள்­ளதன் மூலம் இலங்கை அரசு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் அவ­ம­தித்­துள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்­கையின் பாது­காப்புப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வெள்­ளைவேன் வாக­ன ­க­டத்­தல்கள், சித்­தி­ர­வதை மற்றும் பாலியல் வல்­லு­ற­வுகள் தொடர்­பான சுயா­தீன விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ.நா. குழு இலங்­கைக்கு செல்ல வேண்­டு­மென்றும் ஜஸ்மின் சூக்கா அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ.நா. குழுவின் 59 ஆவது அமர்வு நடை­பெறும் நிலை­யி­லேயே அவர் இந்தக் கோரிக்­கை­யினை விடுத்­தி­ருக்­கின்றார். 2015 ஆம் ஆண்டு தை மாதம் அர­சாங்கம் மாறி­ய­போ­திலும் புல­னாய்வு மற்றும் பாது­காப்புப் பிரிவை சார்ந்­த­வர்கள் தமி­ழர்­களை குறி­வைத்து சட்­டத்­திற்கு புறம்­பான ரீதியில் இர­க­சியத் தளங்­களில் தடுத்து வைப்­பதும் பாலியல் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­துடன் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பு­விக்­கப்­ப­டு­வதும் தொடர்­கின்­றது என்றும் ஜஸ்மின் சூக்கா குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார்.

இந்த நிலை­யில்தான் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ.நா. குழு இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்­விக்­க­ணை­களை தொடுத்­தி­ருக்­கின்­றது. இந்த அமர்வில் கலந்து கொண்ட சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய தடுத்து வைத்­தி­ருக்­கும்­போது சித்­தி­ர­வ­தைக்கு உட்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளிப்­ப­டை­யான மற்றும் சுயா­தீ­ன­மான விசா­ரணைப் பொறி­மு­றையை இலங்கை அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்­ளது. சித்­தி­ர­வ­தைகள் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் பூச்­சியப் பொறுமைக் கொள்­கை­யையே கடைப்­பி­டிக்­கின்­றது. கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக மனித உரிமை சாச­னங்­க­ளுடன் இலங்கை அர­சாங்­க­மா­னது பய­னுள்ள ஈடு­பாட்டை கடைப்­பி­டித்து வரு­கின்­றது. இலங்­கையின் அனைத்து மக்­க­ளி­னதும் மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்பில் நாம் வாக்­கு­றுதி அளித்­துள்ளோம். சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக தேசிய மனித உரிமை வேலைத்­திட்­டத்தை இலங்கை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தற்­போ­தைய நிலையில் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழு­வா­னது இலங்­கையில் தொடர்ந்தும் சித்­தி­ர­வ­தைகள் மனித உரிமை மீறல்கள் நடை­பெற்று வரு­கின்­றன என்ற கருத்­தையே வெளி­யிட்­டுள்­ளது. இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் அவர்கள் தொடுத்த கேள்­விக்­க­ணைகள் இதனை நன்கு புலப்­ப­டுத்­து­கின்­றது.

இறுதி யுத்­தத்தின் போது மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக குற்­றம் ­சாட்­டப்­ப­டு­கின்­றது. முன்­னைய அர­சாங்க காலத்தில் தமிழ் இளைஞர், யுவ­திகள் வகை தொகை­யின்றி கைது­செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். வெள்­ளை­வேன்­க ளில் கடத்­தப்­பட்­ட­வர்கள் காணாமல் போயினர். இவ்­வா­றான நிலைமை தற்­போ­தைய புதிய அர­சாங்க காலத்தில் இல்­லாத போதிலும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­மையை மறுக்க முடி­யாது.

பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கு, கிழக்கில் மலையகம், தென்பகுதியிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை மறுக்க முடியாது. எனவே இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் சித்திரவதைகள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பது அரசாங்கத்தினதும், பாதுகாப்புத் தரப்பினரதும் கடமையாக உள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழுவும் சர்வதேச அமைப்புக்களும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதையோ அல்லது கடத்தல்கள், சித்திரவதைகள், தொடர்வதையோ இடமளிக்கக்கூடாது. இவற்றை முற்றாக தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.       

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.