Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குவின் இனவாத செயற்பாடுகளைக் கண்டித்து ஆலயகுருக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை (22) அமைதி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் இனவாத செயற்பாடகளைக் கண்டித்தே குறித்த பேரணி நடைபெற்றுள்ளது.

ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிஜதிகள் பொதுமக்கள் இணைந்து அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த பேரணியில் தமிழ்த் தேசியகச் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/125469?ref=home

செங்கலடியில் ஆர்ப்பாட்டப் பேரணி
 
22-11-2016 11:11 AM
Comments - 0       Views - 5

article_1479793573-1.jpg

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செங்கலடிப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.  

செங்கலடி இலங்கை வங்கிக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி செங்கலடி -பதுளை வீதிச் சந்திவரை சென்றதுடன், அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், இந்துக்குருமார்கள், இந்துமத அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அண்மையில் பன்குடாவெளிப் பிரதேசத்திலுள்ள இந்துக்குரு ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு புத்தர் சிலைiயை குறித்த தேரர் வைக்க முனைந்ததுடன், இந்துக்குருவையும் தகாத வார்த்தைகளினால் ஏசியுள்ளார்.
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்குமாறு கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரனிடம்  ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் கையளித்துள்ளனர்.

இந்த ஊர்வலத்தில் இந்துமத குருக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

article_1479793610-2.jpg

article_1479793626-3.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/186640/ச-ங-கலட-ய-ல-ஆர-ப-ப-ட-டப-ப-ரண-#sthash.oLMqD0R4.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.