Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள்

Featured Replies

‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள்

மக்கள் நலக் கூட்டணி

க்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று  அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள  நால்வரைத்தான்  நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்,  மக்கள் நலக் கூட்டணியின் இப்போதைய நிலைகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரிடம்தான் கேட்கவேண்டும்" என்றார். "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அந்த அணியில் உள்ளாரே" என மீண்டும் கேள்வி எழுப்பியபோது  "மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகளில் தொடக்கத்தில் இருந்தே நான் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டணி உள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது" என  பதிலளித்தார் தா.பாண்டியன்.

தா .பாண்டியனின் சொந்த கருத்து  !

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி .ராமகிருஷ்ணன், "புதுச்சேரியில் டிசம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மக்கள் நலக் கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்தக் கருத்து"  என்று கூறியுள்ளார்.

சரியாகத்தான் சொல்கிறார் " தா பா" திருமாவளவன்  !

THIRUMA_19150.jpgஇது குறித்து முத்தரசனிடம் பேசுவதற்காக அவரை தொடர்பு கொண்டபோது, அவருடைய தொலைபேசி சுவிட்ச்  ஆப் ஆகியிருந்தது.இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல்.திருமாவளனிடம் பேசினோம். "அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் தலைவர் யாரோ அவர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருப்பது சரியானதுதான். மக்கள் நலக்கூட்டணியில் இயங்கக்கூடிய தலைவர்களின் விஷயங்களில் நாம் தலையிடக் கூடாது என்ற அவருடைய கருத்து  ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது.மக்கள் நலக்கூட்டணி குறித்து கருத்துச் சொல்வதற்கு அந்தக் கூட்டணியின் தலைவர்களுக்குதான் அதிகாரம் உள்ளது.அது தொடர்பாக நாம் கருத்துச்சொல்வது என்பது அவர்களுடைய  அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாகும் என்று எண்ணியிருப்பார் .

மக்கள் நலக்கூட்டணி நல்லநிலையில் உயிர்ப்போடுதான் உள்ளது.வரும் டிசம்பர் ஆறாம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் அனைத்து தலைவர்களும் பங்கேற்றுப் பேச உள்ளார்கள். தா.பாண்டியன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என்று எடுத்துக்கொள்ளகூடாது. இது தொடர்பாகத் தேவைப்பட்டால்  நான்கு தலைவர்களும் கலந்து ஆலோசிப்போம்" என்றார்

கடைவிரித்தேன் கொள்வாரில்லை !

 இது குறித்து அரசியல் விமர்சகர் மணியிடம் கேட்டோம். "தா.பாண்டியன்  அ.தி.மு.க-வின் ஆதரவாளர் .அவருடைய பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவே நேரில் போய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவே யாரையாவது நேரில் போய் சந்தித்துப் பேசியுள்ளாரா ?அந்த அளவுக்கு தா.பா அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக உள்ளதே காரணம்.இந்தப் பின்புலத்தில் இருந்து பார்த்தோமானால் மக்கள் நலக்கூட்டணியின்  செல்லவாக்கு எடுபடாது என்ற நிலை தா. பாண்டியனுக்கு தெரிந்துள்ளது. திருமாவளவனும் அந்தப் பக்கம் போக ஆரம்பித்துவிட்டார் .எனவே அந்த அர்த்ததில்தான் அவர் இதனைச் சொல்லி இருக்க வேண்டும். அ.தி.மு.க  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதால்தான் மக்கள் நலக்கூட்டணியே உதயமானது.எனவே "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்ற நிலை ஆகிவிட்டது. மக்கள் நலக்கூட்டணியின் ஆயுள் முடிந்து விட்டது என்பதைத்தான் தா பாண்டியனின் பேச்சு உணர்த்துகிறது " என்றார்

http://www.vikatan.com/news/coverstory/73388-people-welfare-alliance-has-been-expired--says-political-observers.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.