Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது

Featured Replies

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது

 

 பிர­தி­ய­மைச்சர் இரான் விக்­ர­ம­ரட்ன

நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்

நாட்டில் ஜன­நா­யகம், பொரு­ளா­தாரம் என சகல துறை­களும் வலு­வ­டைந்து வரு­வதன் மூலம் அர­சாங்கம் ஸ்திர­ம­டைந்­துள்­ளது. எனவே அடிப்­ப­டை­வா­தத்தை மேலெ­ழச்­செய்து அதி­கா­ரத்தைக் கைப்­பெற்ற எதிர்த்­த­ரப்­பினர் முயற்­சிக்­கின்­றனர். எனினும் இந்த அர­சாங்­கத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­போதும் ஆட்சி கவிழ்க்க முடி­யாது என பிர­தி­ய­மைச்சர் இரான் விரக்­ர­ம­ரட்ன தெரி­வித்தார். வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அந்த செவ்­வியின் விபரம் வரு­மாறு,

 

கேள்வி : 2017 ஆம் ஆண்­டுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு–செல­வுத்­திட்டம் பொரு­ளா­தா­ரத்தில் எவ்­வ­கை­யான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும்?

பதில் : அடிப்­படைத் தேவை­களை பிரதானப்­ப­டுத்­தியே கடந்த வருட செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் இவ்­வ­ருட வர­வு­செ­ல­வுத்­திட்டம் கடந்த வருட வரவு செல­வுத்­திட்­டத்தை விட மாறு­பட்­ட­தாகும். ஏனெனில் இம்­முறை தனி­ந­பர்­களின் அபி­வி­ருத்­தியை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு வரவு செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்வி, தொழில் பயிற்சி, உற்­பத்தி, கிரா­மிய அபி­வி­ருத்தி தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. ஏனெனில் குறித்த அம்­சங்­க­ளி­னூ­டாக பொரு­ளா­தா­ரத்தில் நிலையான அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த முடியும். அத்­துடன் நாட்டின் கல்­விக்­கொள்­கை­யினை வலுப்­ப­டுத்தி அத­னூ­டாக எதிர்­கா­லத்தில் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம்.

ஆகவே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் பொரு­ளா­தா­ரத்தில் மாற்றம் கொண்டு வந்து நிலை­யான அபி­வி­ருத்தி அடை­வ­த­னையே இலக்காகக் கொண்­டுள்ளோம்.

கடன் சுமை நிறைந்தே நிலை­யி­லேயே நாம் அர­சாங்­கத்தைப் பொறுப்­பெ­டுத்தோம். எனவே 2019 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையில் நாடு வரு­டாந்தம் 3.2–3.9 பில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே பொரு­ளா­தா­ரத்தை விரை­வாக கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வாய்ப்பு குறை­வாக உள்­ளது. கடந்த ஆட்­சியில் தேசிய உற்­பத்தி 10 சத­வீ­த­ம­ாக இருந்­தது. எனினும் நாம் ஆட்­சியைப் பொறுப்­பெ­டுத்த பின்னர் அதனை 13.5 சத­வீ­த­மாக உயர்த்­தி­யுள்ளோம். அடுத்த வரு­ட­ம­ளவில் 16 சத­வீ­த­மாக உயர்த்­து­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம்.

 

கேள்வி : கல்­வித்­து­றையை வலு­வாக்­கு­வ­தற்கு எவ்­வ­கை­யி­லான திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன?

பதில் : வரவு–செல­வுத்­திட்­டத்தில் கல்­வித்­துறை மீது விசேட கவனம் செலத்­தப்­பட்­டுள்­ளது. நாட்டில் 10 ஆயி­ரத்­து­க்கும் அதி­க­மான பாட­சா­லைகள் உள்­ளன. எனினும் அவற்றில் ஏரா­ள­மான பாட­சா­லை­களில் அடிப்­படை வச­தி­கள்­கூட இல்லை. ஆகவே தெரி­வு­செய்­யப்­பட்ட ஆயிரம் பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு வரவு–செல­வுத்­திட்­டத்தின் மூலம் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் பாட­சா­லை­களில் விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப பாடங்­க­ளுக்­கான வச­திகள் குறைந்­த­ள­வி­லேயே உள்­ளன. எனது ஆச­னத்­திலும் 34 பாட­சா­லைகள் உள்­ளன. அவற்றில் விஞ்­ஞானம் கற்­பிக்கும் பாட­சா­லைகள் குறைந்த எண்­ணிக்­கை­யி­லேயே உள்­ளன. அதேபோல் தொழில்­நுட்ப பாடங்­க­ளுக்கும் அதி­க­ள­வான குறை­பா­டுகள் உள்­ளன. எனவே இவ்­வா­றான குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 3500 பாட­சா­லை­க­ளுக்கு கணனி­கூடம் அமைப்­ப­தற்கும் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயர்­த­ரப்­பி­ரிவில் கல்­வி­கற்கும் ஒரு இலட்­சத்து 75 ஆயிரம் மாண­வர்­க­ளுக்கும் 28 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் டெப் வழங்­கு­வ­தற்கும் நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் தொழில்­நுட்ப ரீதி­யி­லான கல்­வியை ஏற்­ப­டுத்தி நவீன யுகத்­திற்கு ஏற்ப பய­ணிப்­ப­தற்கே நாம் எதிர்­பார்த்­துள்ளோம். மேலும் 5 வயது முதல் 19 வய­துக்­குட்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான காப்­பு­றுதித்திட்டம் ஒன்­றையும் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம். இவ்­வா­றான காப்­பு­றுதி முறை வேறு எந்த நாடு­க­ளிலும் இல்லை.

பல்­க­லைக்­க­ழக கல்வி நட­வ­டிக்­கை­களை எடுத்­துக்­கொண்டால் 2015 ஆம் ஆண்டில் இரண்டு இலட்­சத்து 10 ஆயிரம் மாண­வர்கள் உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றினர். அவர்­களில் 1 இலட்­சத்து 31 ஆயிரம் மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தகைமை பெற்­றனர். எனினும் 26 ஆயிரம் மாண­வர்­க­ளுக்கே பல்­க­லைக்­க­ழக அனு­மதி கிடைத்­தது. 1 இலட்­சத்­திற்கும் அதி­க­மான மா­ண­வர்கள் பல்­க­லைக்­க­ழகம் செல்ல முடி­யாத நிலை­யுள்­ளது.

சமர்ப்­பிக்­கப்ட்­டுள்ள வரவு–செல­வுத்­திட்­டத்தின் மூலம் சகல மாண­வர்­க­ளுக்கும் உயர் கல்வி வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே சகல பிள்­ளை­களும் 13 வருட கட்­டாயக் கல்வி பெறு­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை அடுத்த வருடம் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­று­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அதன் மூலம் க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு முன்­னரும் பரீட்­சையின் பின்­னரும் பாட­சா­லை­யி­லி­ருந்து மாண­வர்­களின் இடை­வி­ல­கலைத் தடுத்து தொழில் கல்வி வழங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் தனியார் உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் உயர்­கல்வி தொட­ர­வுள்­ள­வர்­க­ளுக்கும் சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

 

கேள்வி : பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு டெப் வழங்­கு­வது வர­வேற்­கத்­தக்­கது. இருந்­த­போ­திலும் இணைய வச­திக்­கான வரி அதி­க­ரிப்பின் மூலம் டெப் வழங்­கு­வதன் முழு பயன்­பாட்­டையும் பெற முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­துமே...

பதில் : தங்­களின் கேள்­வி­யைப்­போன்று பலரும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர். அதா­வது ஒரு­வ­ருக்கு வாகனம் ஒன்று வழங்­கப்­ப­டு­கி­றது. போதாக்­கு­றைக்கு எரி­பொருள் நிரப்பித் தரு­மாறு கோரு­வ­தான பிரச்­சி­னைதான் இது. இருந்­த­போ­திலும் இரண்­டையும் இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்கு நாம் விருப்­ப­மாக உள்ளோம். எனினும் இருக்கும் வளங்­க­ளுக்­கேற்ப தற்­போ­தைக்கு டெப் மட்டும் வழங்க முடி­கி­றது.

 

கேள்வி : பத்து இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தாக அர­சாங்கம் வாக்­குறுதிய­ளித்­துள்­ளது. அதனை ஏற்­ப­டுத்­த­ுவ­தற்கு எவ்­வா­றான செயற்­றிட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன?

பதில் : அர­சாங்கம் வாக்­க­ளித்­துள்­ள­தைப்­போன்று ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள 10 இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களும் நாட்டின் தேசிய உற்­பத்­தியில் பெரும் பங்­க­ளிப்பு செய்­ய­வுள்­ளது. அதற்­காக புதிய சுதந்­திர வர்த்­தக வல­யங்கள் மற்றும் பொரு­ளா­தார வல­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

எனவே அம்­பாந்­தோட்டையில் விசா­லமா­ன வர்த்­தக வலயம் ஒன்றை உரு­வாக்­க­வுள்ளோம். அங்கு விசா­ல­மான வர்த்­தக வலயம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முக்­கிய காரணம் உள்­ளது. துறை­முகம் மற்றும் விமான நிலையம் என்­பன உள்­ளன. ஆகவே அங்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்­பைக்­கொண்ட வர்த்­தக வலயம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் தற்­போது கட்­டு­நா­யக்க, பிய­கம, சீதா­வக்க, கொக்­கல போன்ற பிர­தே­சங்­களில் வர்த்­தக வல­யங்கள் உள்­ளன. எனினும் அவை 450 ஏக்கர் பரப்­பி­லேயே அமைந்­துள்­ளன. அத்­துடன் இன்னும் நான்கு புதிய வர்த்­தக வல­யங்­களும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. பண்­டா­ர­கம, எம்­பி­லி­பிட்­டிய, இரத்­தி­ன­புரி, வவு­னியா போன்ற பிர­தே­சங்­க­ளி­லேயே அவை அமை­ய­வுள்­ளன. எனவே குறித்த வர்த்­தக வலயங்­களின் உற்­பத்­தி­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு 10 இலட்சம் தொழில்­வாய்ப்பு இலக்கை அடை­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம்.

 

கேள்வி : சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு–செல­வுத்­திட்டம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­த­லையும் தனியார் துறைப்­ப­டுத்­த­லையும் ஊக்­கு­விப்­ப­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி குற்­றம்­சாட்­டி­யுள்­ளதே...

பதில் : அவ்­வாறு கூற முடி­யாது. ஏனெனில் தனியார் மயப்­ப­டுத்தல் என்­பதை கோரியி­ருப்­பது அங்கு மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யினை வழங்­கு­வதை அடிப்­ப­டை­யா­கக்­கொண்­டாகும். நாம் மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் சிறந்த சேவை­யினை வழங்­கு­வதை மைய­மா­கக்­கொண்­டுதான் வரவு–செல­வுத்­திட்­டத்தை தயா­ரித்­துள்ளோம்.

 

கேள்வி : தேசிய பிரச்­சி­னைக்கு அர­சாங்கம் எவ்­வ­கை­யிலான தீர்­வுத்­திட்டம் தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது?

பதில் : தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் முயற்­சி­யின்­போது சமஷ்டி எனும் சொற்­பி­ர­யோ­கத்தைப் பாவிக்­கும்­போது தெற்­கி­லுள்ள மக்கள் அஞ்­சு­கின்­றனர். ஒற்­றை­யாட்சி எனும்­போது வடக்­கி­லுள்ள மக்கள் அஞ்­சு­கின்­றனர். எனவே சொற்­பி­ர­யோ­கத்தை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. ஆகவே அர­சாங்கம் விடய­தா­னத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே தீர்வு முன்­வைப்­ப­தற்கே முனை­கி­றது.

இந்­நாட்டில் பிறந்த சக­லரும் சட்­டத்தின் முன் சமம் என்ற அடிப்­ப­டையில் பிர­தா­னப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். ஆகவே நாட்­டி­லுள்ள சக­லரும் பிர­ஜை­க­ளாக மதிக்­கப்­ப­டுவர். எவரும் இரண்­டாம்­தர பிர­ஜை­க­ளாக கணிக்­கப்­பட மாட்­டார்கள். எனவே குறித்த விட­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்த சுயா­தீன நீதி­மன்றக் கட்­ட­மைப்­பை ஏற்­ப­டுத்த வேண்டும். மேலும் நாட்டில் சகல சம­யங்­க­ளையும் மதிக்­கத்­தக்க கலா­சாரம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத்­துடன் மக்­களின் பிரச்­சி­­னைகள் தொடர்பில் ஒரே நாட்­டுக்குள் தமக்கு அரு­கி­லுள்ள ஸ்தாப­னங்கள் மூலம் தீர்வு பெறும் வகையில் அதி­கா­ரத்தை பொறுப்­பாக்­கு­வ­தற்கும் நாம் தயா­ராக உள்ளோம்.

 

கேள்வி : நல்­லாட்­சி­யிலும் ஆங்­காங்கே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான சதி முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. அவற்றைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றது?

பதில் : சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை தடுத்து அம்­மக்­களைப் பாது­காப்­ப­தாக அர­சாங்கம் தேர்தல் காலத்தில் வாக்­க­ளித்­தது. அர­சாங்­கத்தின் அந்த நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­றமும் இல்லை. எவ­ரா­வது சட்­டத்­திற்கு முரணாக செயற்­ப­டு­வார்­க­ளாயின் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அங்கு இன மத பேதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.

எனினும் சில அடிப்­ப­டை­­வாதக் குழுக்கள் உள்­ளன. அவ்­வா­றான குழுக்கள் சகல இனத்­திலும் உள்­ளன. எனினும் அவ்­வ­டிப்­ப­டை­வாதக் குழுக்­களின் நட­வ­டிக்­­கைகளும் சிந்­த­னை­களும் குறித்த முழு இனத்­தையும் சார்ந்­தது என்று கூற­மு­டி­யாது. நாட்­டி­லுள்ள ஏரா­ள­மான மக்கள் நல்­லி­ணக்­க­மாக வாழ்­வ­த­னையே விரும்­பு­கின்­றனர்.

 

கேள்வி : நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான கல­வரம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஆயத்­தங்கள் அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சிலர் குற்றம் சாட்­டு­கின்­றனரே...

பதில் : அர­சாங்கம் தற்­போது நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டி­யுள்­ளது. அத்­துடன் பொரு­ளா­தாரக் கொள்கை தூர நோக்­குடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. சட்ட ஆட்­சியும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே அர­சாங்கம் சகல வழி­க­ளிலும் ஸ்திர­ம­டைந்­துள்­ளது. இவ்­வாறு சென்றால் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. அர­சாங்கம் 20 வரு­டங்­க­ளுக்கு ஆட்சி நடத்தும் என எதிர்த்­த­ரப்­பினர் எதிர்­பார்க்­கின்­றனர். ஆகவே அடிப்­ப­டை­வா­தத்தை மேலெழச் செய்து அர­சாங்­கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் இந்த அரசாங்கத்தை எவராலும் ஆட்சி கவிழ்க்க முடியாது. நாம் ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை நடத்துவோம்.

 

கேள்வி : வடக்கிலுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அது சாத்தியமான விடயமாகுமா?

பதில் : வடக்கு முதலமைச்சர் அவ்வாறு கூறியிருப்பாராயின் அது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவ்வாறு சகல மாகாண முதலமைச்சர்களும் குறிப்பிடுவார்களாயின் அரசாங்கத்தின் பொறுப்பினை நிறைவேற்ற முடியாமல்போகும். நாட்டின் பாதுகாப்பு மத்திய அரசின் பொறுப்பாகும்.

மேலும் யுத்த காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியது. தற்போது அக்காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

கேள்வி : 2002 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 2 வருடங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைப்போன்று இம்முறையும் நடைபெறலாம் என சிலர் குறிப்பிடுகின்றனரே...

பதில் : இல்லை. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்குத் தொடரும். எனினும் அரசாங்கம் முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தின் யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆகவே "புதிய நாடு முன்னோக்கிச் செல்வதனை விரும்புவோம் எம்முடன் இணையுங்கள்" என்பதே எமது கருப்பொருளாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-26#page-7

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது

 பிர­தி­ய­மைச்சர் இரான் விக்­ர­ம­ரட்ன

 

உப்புடித்தான் மகிந்த அரசாங்கத்தில் முந்தி இருந்தவையும் சொன்னவை. இப்ப மந்திபோலத் தாவித் திரியினம். :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.