Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்

Featured Replies

கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்

house-clash-c2799b7df0790f503dae019e905308447348f259.jpg

 

அர­சியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களும், முட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

ஐ.தே.க.வின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம். சுவா­மி­நாதன், அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடு­களை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்­வைத்தார்.

இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும், அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கும் இடையில் மோதல் உரு­வா­னது. இந்­திய வம்­சா­வளி வர்த்­த­க­ரான லக்ஸ்மி மிட்­டலின், ஆர்­சிலர் மிட்டல் நிறு­வ­னத்­துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக வீடு­களை பொருத்தும், திட்­டத்தை அமைச்சர் சுவா­மி­நாதன் முன்­வைத்த போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ, வடக்கு மாகா­ண­ச­பையோ அதனை ஆத­ரிக்­க­வில்லை.

இந்த திட்டம் வட­ப­கு­திக்குப் பொருத்­த­மற்­றது என்றும், செலவு அதி­க­மா­னது என்றும் கூட்­ட­மைப்பு அதனை நிரா­க­ரித்­தது.

வடக்கில் பெரும்­பா­லான காலம் வெப்பம் கூடிய கால­நி­லையைக் கொண்­டது. அங்கு உருக்­கினால் அமைக்­கப்­பட்ட இரும்­புக்­கூண்­டுக்குள் மக்கள் வசிப்­பது கடினம். அது சுகா­தார ரீதியில் பாதிப்­பு­களையும் ஏற்­ப­டுத்தும். பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழத்­தக்க வசதியான வீடு­களை கட்டி வாழ்ந்து பழக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு, உலோகத் தக­டு­களில் வீடு­களை அமைத்துக் கொடுத்தால் அது எந்­த­ளவு காலத்­துக்கு தாக்குப் பிடிக்கும் என்று கூட்­ட­மைப்பு கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தது.

அதை­விட, உலோக வீடு மற்றும் அதற்­கு­ரிய தள­பா­டங்­களை அமைத்துக் கொடுக்கும் இந்த திட்­டத்­துக்­காக செல­வி­டப்­படும் 21 இலட்சம் ரூபா அதி­க­மா­னது என்றும் கூட்­ட­மைப்பு கூறி­யி­ருந்­தது,

வடக்கில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான வீடுகள் தேவைப்­ப­டு­கின்ற நிலையில், ஒரு வீட்­டுக்கு அதுவும் நீண்­ட­காலம் தாக்­குப்­பி­டிக்­காத நிரந்­த­ர­மற்ற வீட்­டுக்கு 21 இலட்சம் ரூபா செல­வி­டு­வதை விட, 10 இலட்சம் ரூபா செலவில் இரண்டு மடங்கு மக்­க­ளுக்கு நிரந்­த­ர­மான வீடு­களை பாரம்­ப­ரிய முறைப்­படி கட்டிக் கொடுக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

ஒரு சில உலோக வீடுகள் யாழ்ப்­பா­ணத்தில் வலி­காமம் பகு­தியில் மாதி­ரி­யாக அமைக்­கப்­பட்டு கோலா­க­ல­மாக திறந்தும் வைக்­கப்­பட்­டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்ப்­பு­களை அடுத்து இந்த திட்­டத்தை அர­சாங்கம் கைவிட்­ட­தாக கூறி­யி­ருந்­தது.

65 ஆயிரம் உலோக வீடு­களை அமைக்கும் திட்­டத்தில், அமைச்சர் சுவா­மி­நாதன் நிதி ஆதாயம் பெற முனை­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­த­போது அவர் அதனை நிரா­க­ரித்­தி­ருந்தார்.

தமது மூதா­தை­யர்கள் போதிய சொத்­துக்­களை சேக­ரித்து வைத்­துள்­ளார்கள் என்றும், தானும் சட்­டத்­த­ர­ணி­யாக போதிய பணத்தை சம்­பா­தித்­துள்­ள­தா­கவும் அவர் பதி­ல­ளித்­தி­ருந்தார். ஆனாலும் இந்த உலோகத்தாலான- பொருத்து வீட்டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இருந்து அமைச்சர் சுவா­மி­நாதன் பின்­வாங்­க­வில்லை.

65 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்டம் கைவி­டப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட நிலையில், மீண்டும் அந்த திட்­டத்­துக்கு அவர் தூசி தட்டித் துவங்கப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார். 65 ஆயிரம் வீட்டுத் திட்­டத்தை இப்­போது, 22 ஆயிரம் வீட்டுத் திட்­ட­மாக மாற்­றி­யுள்­ள­தா­கவும், அதே பொருத்து வீடு­களை 16 இலட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப் போவ­தா­கவும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கிறார் அமைச்சர் சுவா­மி­நாதன். வீடு­களின் தொகையும், குறைந்­தி­ருக்­கி­றது, அதற்­கான செலவுத் தொகையும் குறைந்­தி­ருக்­கி­றது, ஆனால், இந்தத் திட்டம் எதற்­காக எதிர்க்­கப்­பட்­டதோ, அதன் அடிப்­படை அம்­சத்தில் மாற்றம் ஏதும் செய்­யப்­ப­ட­வில்லை. அதா­வது உருக்­கினால், செய்­யப்­பட்ட பொருத்து வீட்டுத் திட்டம் என்­பதில் எந்த மாற்­றமும் இல்லை.

வடக்கில் ஒரு இலட்­சத்து 30 ஆயிரம் வீடுகள் தேவைப்­ப­டு­வ­தா­கவும், தமக்கு பொருத்து வீடுகள் தேவை என்று, 97 ஆயிரம் பேர் தம்­மிடம் விண்­ணப்­பித்­தி­ருப்­ப­தா­கவும், அமைச்சர் சுவா­மி­நாதன் இப்­போது நியா­யப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்ளார்.

ஆனால், 97 ஆயிரம் பேர் வடக்கில் வீடுகள் தேவை என்று விண்­ணப்­பித்­தது உண்­மையே என்­றாலும், அவர்கள் தமக்குப் பொருத்து வீடுகள் தான் தேவை என்று விண்­ணப்­பித்­த­வர்கள் அல்ல. வீட்டுத் திட்டம் ஒன்­றுக்­கான விண்­ணப்­பங்­க­ளா­கவே அவை சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அதனை அமைச்சர் சுவா­மி­நாதன் தமக்குச் சார்­பாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள முற்­பட்­டி­ருக்­கிறார்.

மீண்டும் பொருத்து வீடு­களை அமைப்­ப­தென்று முடிவு செய்தால். எதற்­காக, 65 ஆயி­ரத்தில் இருந்து 22 ஆயி­ர­மாக வீடு­களின் எண்­ணிக்­கையைக் குறைக்க வேண்டும்? அதை­விட, பொருத்து வீட்டுத் திட்­டத்­துக்கு 21 இலட்சம் செல­வாகும் என்று முன்னர் கூறப்­பட்­டது, திடீ­ரென இப்­போது 16 இலட்சம் ரூபா செலவில் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சுவா­மி­நாதன் கூறி­யி­ருக்­கிறார். அவ்­வா­றாயின், செலவுத் தொகை எவ்­வாறு குறைந்­தது என்ற கேள்வி எழு­கி­றது. வீடு­க­ளுக்­கான வச­தி­களைக் குறைத்­ததால், செலவு குறைந்­ததா அல்­லது இலா­பத்தைக் குறைத்­ததால், ஏற்­பட்­டதா இல்லை வேறேதும் வழியில் இது குறைந்­ததா என்று தெரி­ய­வில்லை.

தமது இந்த திட்­டத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முற்­பட்ட அமைச்சர் சுவா­மி­நாதன், அந்த முயற்சி வெற்­றி­ய­ளிக்­காத நிலையில் தான், கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­களைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே 65 ஆயிரம், பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பை வெளி­யிட்ட நிலையில், 22 ஆயிரம் பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்­கான திட்­டத்­துக்கு, ஆத­ர­வ­ளிக்­கு­மாறு அவர், கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தனிப்­பட்ட முறையில், தொலை­பேசி மூலம் கோரி­யி­ருந்தார். 

ஒரு கட்­டத்தில், கூட்­ட­மைப்பின் வன்னி, கிளி­நொச்சி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பொருத்து வீட்டுத் திட்­டத்தை ஆத­ரிப்­ப­தா­கவும், சிலர் மட்­டுமே அதனை எதிர்ப்­ப­தா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் கூட அமைச்சர் சுவா­மி­நாதன் கூறி­யி­ருந்தார்.

தனது திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக, கூட்­ட­மைப்­புக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி, இரண்­டாக உடைப்­ப­தற்கு மேற்­கொண்ட முயற்­சி­யா­கவே இதனைக் கரு­தலாம்.

அமைச்சர் சுவா­மி­நாதன் பாரா­ளு­மன்­றத்தில் இதனை அறி­வித்­த­போது, கூட்­ட­மைப்பு உறுப்­பினர் சிறி­தரன், தாம் இதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என்றும், இந்த விட­யத்தில் எல்லா உறுப்­பி­னர்­களும் ஒரே நிலைப்­பாட்டில் இருப்­ப­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார்.

அமைச்சர் சுவா­மி­நாதன், கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களை உடைக்க முனை­கிறார் என்று அறிந்­த­வுடன், கடந்த 11ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூடி ஆராய்ந்­தனர்.

அதற்குப் பின்னர், அமைச்சர் சுவா­மி­நா­தனின் செயற்­பாடு குறித்து அதி­ருப்­தியை வெளி­யிட்டும், பொருத்து வீட்டுத் திட்­டத்­துக்கு எதிர்ப்பைத் தெரி­வித்தும், 12ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், கூட்­ட­மைப்பின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கையெ­ழுத்­திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இதற்குப் பின்னர் சுவா­மி­நா­தனை கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் வைத்து தாக்­கு­வதும், அவர் யாழ்ப்­பா­ணத்தில் போய் கூட்­ட­மைப்பை தாக்­கு­வ­து­மான நிலைமை மாறி­யி­ருக்­கி­றது.

வரவு - செலவுத் திட்ட விவா­தத்தில் உரை­யாற்­றிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா, அமைச்சர் சுவா­மி­நாதன், பொருத்து வீட்டுத் திட்­டத்தை திணிக்க முனை­வ­தாக குற்­றம்­சாட்­டினார்.

அதனால், அவ­ரது அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பது குறித்து கூட்­ட­மைப்பு ஆராய்­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

அர­சாங்­கத்தின் வரவு - செலவுத் திட்டம் குறித்து கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தாலும், இரண்­டா­வது வாசிப்பின் மீது நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில், அதற்கு ஆத­ர­வா­கவே கூட்­ட­மைப்பு வாக்­க­ளித்­தி­ருந்­தது.

இந்த நிலையில் சுவ­மி­நா­தனின் அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டைக் கூட கூட்­ட­மைப்பு எதிர்க்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அவ்­வாறு செய்­யப்­போனால், அதனை அவர் இன்னும் கூடு­த­லாகச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் நிலையே ஏற்­படும்.

ஏற்­க­னவே அவர் யாழ்ப்­பா­ணத்தில் சென்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வைக்கோல் பட்­டரை நாய்­க­ளுக்கு இணை­யாக விமர்­சித்து வரு­கிறார்.

வடக்கில் எல்லாத் திட்­டங்­க­ளையும் கூட்­ட­மைப்பே குழப்­பு­வ­தாக அவர் பட்­டியல் போட்டுக் கொண்­டி­ருக்­கிறார். இர­ணை­மடு குடிநீர் திட்டம், வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலையத் திட்டம், பொருத்­து­வீட்டுத் திட்டம் என்று எல்­லா­வற்­றையும் கூட்­ட­மைப்பே குழப்­பு­வ­தாக அவர் கூறும் குற்­றச்­சாட்­டுகள், தமிழ் மக்­களின் கவ­னத்தை ஈர்க்கக் கூடும்.

இந்த நிலையில், தமிழ் மக்­க­ளுடன் தொடர்­பு­டைய புனர்­வாழ்வு அமைச்சு மற்றும் இந்து கலா­சார அமைச்சு ஆகி­ய­வற்­றுக்­கான நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு எதி­ராக கூட்­ட­மைப்பு வாக்­க­ளித்தால் அத­னையும், சுவா­மி­நாதன் தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் நிலையே ஏற்­படும்.

தமது திட்டங்களின் மீதுள்ள குறைபாடுகளை மறைத்து விட்டு, அந்த திட்டங்களை செயற்படுத்த முடியாமைக்கான பழியை கூட்டமைப்பு மீது போடுவது மாத்திரமே அமைச்சர் சுவாமிநாதனின் திட்டமாகத் தெரியவில்லை.

இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இழுபறியும் தெரிகிறது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க.வைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், இது பார்க்கப்படுகிறது. அத்துடன் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் தனது பலத்தைக் கட்டியெழுப்ப முனைகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கில் பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களில் கூட்டமைப்பையும், மாகாணசபையையும் ஒதுக்கி விட்டு, தன்னிச்சையாக அவற்றை நிறைவேற்ற முனைவதில் அவர் காட்டும் ஈடுபாடு அதனையே வெளிப்படுத்துகிறது.

எனவே கூட்டமைப்பை பிளவுபடுத்தல், பலவீனப்படுத்தல் ஆகியவற்றுக்கு அப்பால், தம்மைப்பலப்படுத்தும் திட்டத்தையும் அமைச்சர் சுவாமிநாதன் கொண்டிருக்கக் கூடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.