Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரில் விளையாடுவதும் சிரமம்...ஒரு கிரிக்கெட் வீரரின் நெகழ்ச்சிக் கதை!

Featured Replies

காஷ்மீரில் விளையாடுவதும் சிரமம்...ஒரு கிரிக்கெட் வீரரின் நெகழ்ச்சிக் கதை! 

 

கிரிக்கெட்

எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும், எந்நேரத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பதால் திகிலாகவே இருப்பர் காஷ்மீர்வாசிகள். மைதானம் உள்பட அடிப்படை வசதி இல்லாத காஷ்மீரில்,  கிரிக்கெட் வீரர் எதிர்கொள்ளும் சவால்கள், தடை உத்தரவால் மனைவியின் டெலிவரி டைமில் அனுபவித்த சிரமம், கிரிக்கெட்டையும் இன்ஜினீயரிங்கையும் பேலன்ஸ் செய்தது, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது என எல்லாவற்றைப் பற்றியும் மனம் திறக்கிறார் சமியுல்லா பீக் (35).

பத்து ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சமியுல்லா, ஸ்ரீநகரின் புறநகரான செளரா பகுதியில் வசித்து வருகிறார். ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களில் 50க்கும் மேற்பட்ட முதல்தர போட்டிகளில் விளையாடிய வீரர்கள் சொற்பம். சமியுல்லா அதில் ஒருவர். தற்போதுள்ள அணியில் சமியுல்லா 58 போட்டியிலும், தேவ் சிங் 63 போட்டியிலும் விளையாடி உள்ளனர். இதில் சமியுல்லா மட்டுமே 2002ல் அறிமுகமாகி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக எல்லா போட்டிகளிலும் சேர்த்து 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், பல கட்டங்களில் அவரது தேசிய அணி கனவு தகர்ந்து கொண்டே இருந்தது. இதற்கு என்ன காரணம்? தன் பயணம் குறித்து அவரே பேசுகிறார்...

ஸ்ரீநகரில் உள்ள ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் (இப்போது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) சிவில் இன்ஜினீயரிங் படித்தேன்.  படிப்புக்கு முக்கியத்தும் கொடுத்ததால் என்னால் தேசிய அணிக்கு தேர்வாக முடியவில்லை.  ஜம்மு - காஷ்மீரில், ரஞ்சி டிராபி நடக்கும் செப்டம்பர், நவம்பரில்தான் தேர்வுகளும் நடக்கும்.  2001க்கு முன்புவரை நான் சீரியஸாக கிரிக்கெட் ஆடியதில்லை. 17 வயதில் கல்லூரிக்கு சென்றேன். அப்போது நான் படிப்பில் படு ஸ்மார்ட். கண்ணாடி எல்லாம் அணிந்திருப்பேன். கல்லூரி சமயத்தில் எங்கள் யுனிவர்சிட்டி கோச், நான் வேகப்பந்து வீசுவேன் என கேள்விப்பட்டு, என்னை பந்து வீசச் சொன்னார். அப்போதுதான் முதன்முதலாக லெதர் பந்தையே தொட்டேன்.

தேர்வு, மேட்ச், தேர்வு, மேட்ச்

MS Dhoni: The Untold Stories படத்தில், தோனி வகுப்புக்கும், பயிற்சிக்கும் ஓட்டமாக ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? என் வாழ்விலும் அப்படித்தான் நடந்தது. என் குடும்பம் நடுத்தர வர்க்கம். படிப்பினால் மட்டுமே முன்னேற முடியும் என என் தந்தை நம்பினார். ஆனால், கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் நான் விளையாட வந்தேன். ஃபாஸ்ட் பவுலர் ஆனேன். அதிர்ஷ்டவசமாக என் கிளப் கேப்டன் இக்பால் அகமது ஷா உபகரணங்கள் வாங்க காசு கொடுத்தார். என் செலவுகளை சமாளித்தார். 

2002ல் காஷ்மீர் பல்கலை அணிக்காக விளையாடினேன். அப்போது சில ரஞ்சி டிராபி வீரர்கள் நன்றாக பந்துவீசுவதைப் பார்த்து மிரண்டேன். இருந்தாலும் நானும் சளைக்காமல் வீசினேன். அதே ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் நேரடியாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.  ரஞ்சியும் விளையாடுமாறு  ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் என்னிடம் கேட்டது. ஆனால், தேர்வு இருந்ததால் அணியில் நீடிக்க முடியவில்லை.

 2003ல் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினேன். அதுதான் என் முதல் போட்டி.  அந்த போட்டி முடிந்ததும் தேர்வுக்கு வந்து விட்டேன்.  நான்கு ஆண்டுகளாக இப்படித்தான் நடந்தது. 2003 முதல் 2006 வரை மொத்தமே ஐந்து போட்டிகளில்தான் விளையாடி இருப்பேன். தேர்வு, மேட்ச், தேர்வு, மேட்ச், தேர்வு மேட்ச்....மைதானத்துக்கு புத்தகங்களையும், வகுப்புக்கு கிரிக்கெட் கிட்டையும் சுமந்தேன். ஆனால், 2005ல் நான் பி.டெக் முடித்து விட்டேன்.  அதுவும் அரியர்ஸ் இல்லாமல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பல்கலையில் இரண்டாவது மாணவனாக தேர்ச்சி. பேசிக்கலி நான் படிப்பில் சமர்த்து.

இன்ஜினீயரிங் முடித்த பின், மேல் படிப்புக்கு செல்வதா, வேலைக்கு செல்வதா என்ற குழப்பம். ஆசிரியர்கள் என்னை ஐ.ஏ.எஸ். படிக்க வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு நான் கிரிக்கெட் விளையாடுவது தெரியாது. அதை ரகசியமாக வைத்திருந்தேன். ஏனெனில் கிரிக்கெட் படிப்பை பாழாக்கி விடும் என்பது அவர்கள் கருத்து. ஒருவேளை கிரிக்கெட் விளையாடுவது தெரிந்தால், எனக்கு மதிப்பெண்கள் கிடைக்காமல் போயிருக்கலாம்.

செதுக்கிய சென்னை

இந்த சூழலில்தான் சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனில் வேகப்பந்துக்கு பயிற்சி பெறுவதற்கான அழைப்பு வந்தது.  சென்னை வந்தேன். கிரிக்கெட்டையும், படிப்பையும் பேலன்ஸ் செய்வது சிரமமாக இருந்தது. எம்.ஆர்.எஃப்.பில் இருந்தபோது, பகலில் பயிற்சி, இரவில் படிப்பு. என்னைப் பார்த்து சில வீரர்களும் படிக்கத் தொடங்கினர். தவல் குல்கர்னி 12-ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவருக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தேன். வருண் ஆரோனும் எங்களுடன் படித்தார். எல்லோரும் குரூப் ஸ்டடி செய்வோம். நான்தான் டியூஷன் டீச்சர். 

எம்.ஆர்.எஃப்.பில் பயிற்சி பெற்றபோது, இந்திய அணியில் சேர எனக்கு தகுதி இருப்பதாக டென்னிஸ் லில்லி தெரிவித்தார். எங்கள் பேட்ஜில் மொத்தம் 40 பேர் பயிற்சி பெற்றோம். அதில் வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட எட்டு பேரை டி.ஏ.சேகர் இறுதி செய்தார். என்னைத் தவிர எல்லோரும் இந்திய அணியில் விளையாடி விட்டனர். ஃபிட்னஸ், வேகம் என இரண்டும் இருந்தும் என்னால் தேர்வாக முடியவில்லை. அதற்கு காரணம், 2006ல் எனக்கு 26 வயது. கிரிக்கெட்டில் இந்த வயது உச்சம். படிப்பில் கவனம் செலுத்தியதால் பந்துவீச்சில் சொதப்பி விட்டேன். இருபது வயதில் வேகமாக பந்து வீசினால் உடனடியாக அணியில் தேர்வு செய்வர். ஆனால், 26 வயதில் எனில் சந்தேகமே...

இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் 2016 - 17 ரஞ்சி டிராபி சீசனுக்காக கிரவுண்டில் நெட் பிராக்டிஸ், ஜிம் என தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால், கலவரம், அரசியல் நிலையற்ற தன்மை நிலவியதால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  45 நாட்களாக வீட்டில் முடங்கியிருந்தேன். 

காலையில் ரன்னிங், மதியத்துக்குப் பின் ஜிம், மாலையில் கிரிக்கெட் என்பது என் அன்றாட பயிற்சி. ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், என்னால் எங்கும் நகரமுடியவில்லை. இத்தனைக்கும் ரோட்டைத் தாண்டினால் வொர்க் அவுட் செய்யும் ஜிம்முக்கு சென்று விடலாம். தடை உத்தரவு என்னை எங்கும் நகரவிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை இது முக்கியமான சீசன். திருமணம் மற்றும் தேர்வாளர்களுடன் நிலவிய தகவல் தொடர்பின்மையால், கடந்த ஆண்டு என்னால் அணியில் இடம்பெற முடியவில்லை. இந்த சீசனில் வேற விதமான பிரச்னை. 

ஊரடங்கு செய்த தொந்தரவு

ஊரடங்கு உத்தரவு சில நாட்களில் சீரடைந்து விடும் என நினைத்தேன். ஆனால், பிரச்னை இப்போது தீராது என பின்னர்தான் புரிந்தது. அதனால், வெயிட்டாக என்ன பொருள் இருக்கிறதோ அதைத் தூக்கிப் பழகுவது, வீட்டுக்குள்ளேயே ஓடுவது, டென்னிஸ் பால் மூலம் சுவரில் பந்துவீசுவது என வீட்டில்தான் ட்ரெய்னிங் எடுத்தேன். இது கொஞ்சம் கடுப்பான விஷயம்தான். நண்பர்களும், உறவினர்களும் இவனுக்கு என்ன ஆச்சு என வியந்தனர். எனக்கு வேறு வழி இல்லை. உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமானால், பயிற்சி செய்தாக வேண்டும். ஒரு வழியாக இறுதி கட்டப் பயிற்சி ஜம்முவுக்கு மாறிய பின், ஓர் அணியாக நாங்கள் பயிற்சி செய்தோம். ஆனால், தனி ஆளாக, அதுவும் வீட்டில் பயிற்சி என்பதெல்லாம் கொடூரம்.

ஸ்ரீநகரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் ஷெர்-இ- காஷ்மீர் என்ற ஸ்டேடியம்தான் நாங்கள் பயிற்சி பெறும் மைதானம். அங்கு சர்வதேச தரத்தில் வசதி இருக்காது என்றாலும், அங்கு சில கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவர். நானும் அங்கு பயிற்சி செய்தேன். சில நேரங்களில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சமயத்தில் திருட்டுத்தனமாக பைக்கில் ஸ்டேடியத்துக்கு செல்வேன். ஸ்ரீநகரைக் கடந்துதான் அந்த ஸ்டேடியத்துக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இது சவாலான விஷயம். சில நேரங்களில் என் முயற்சி வெற்றியடையும். சில நேரங்களில் சொதப்பி விடும். மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என யோசிக்கும்போதே திகிலாக இருக்கும்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில்தான் என் மனைவிக்கு டெலிவரி.  மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. பாதுகாப்பற்ற ஏரியாவைக் கடந்தே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.  எனவே, அதிகாலை 4 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டேன்.  அந்த நேரத்தில் மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை. டாக்டர் உள்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல். எரிச்சலாக இருந்தது. ஒரு வழியாக ஆப்ரேஷன் நடந்தது. ஆனால், அந்த டாக்டர் அதிகமாக வசூலித்து விட்டார். 

 நீ ஒரு துரதிர்ஷ்டசாலி

பலமுறை, என் பெற்றோர் எனக்கு சாதகமாக நடக்கவில்லை என நினைத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் முழு நேரமாக கிரிக்கெட் விளையாட நினைத்தேன். ஆனால், என் தந்தை 'என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் தேர்வுகளைத் தவற விடாதே’ என்றார். இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என் தந்தைக்கு நன்றி. பல வீரர்கள் ஸ்போர்ட்ஸை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் தோல்வி அடைந்திருப்பர். ஆனால், நான் இப்போது பொது சுகாதாரத்துறையில் அஸிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர். கெசட்டட் ஆஃபீஸர். டென்னிஸ் லில்லி ஒருமுறை, 'இந்திய அணியில் நீ இடம்பெறவில்லை எனில், நீ ஒரு துரதிர்ஷ்டசாலி’ என்றார். இருக்கலாம். ஆனால், என் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது. அதில் எனக்கு திருப்தியே. 

படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தபோதும், பலமுறை நான் அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவனாக இருந்தேன். ஆறு முறை நார்த் ஜோன் டீமில் செலக்ட் செய்யப்பட்டேன்.  நான்கு போட்டியில் 25 விக்கெட்டுகளை எடுத்ததால் என்னை ஜோனல் டீமுக்குத் தேர்வு செய்தனர். அதில் பல சீனியர் வீரர்கள் இருந்ததால் அவர்கள் என்னை தண்ணீர் சுமக்கத்தான் பயன்படுத்தினர். எட்டு முறை துலீப் டிராபி மற்றும் தேவ்தர் டிராபிக்கு தேர்வானேன். ஒரேஒரு முறை மட்டுமே துலிப் டிராபியில் விளையாடினேன். அதுவும் 2014ல். அப்போது எனக்கு வயதும் ஆகி விட்டது. ஆனால்,  இப்போது நேரடியாக ரஞ்சி டீமுக்கு தகுதி பெற்று விடுகின்றனர். 

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி இல்லை. இதை வைத்தே நீங்கள் இங்கு கிரிக்கெட் எப்படி இருக்கும் என புரிந்து கொள்ளலாம். எங்கள் தலைமுறை வீரர்கள் சிலர், கிரிக்கெட் அகாடமிகளை துவக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், கிரிக்கெட்டை ஒரு தொழிலாக பாவிக்கும் மனநிலை இங்குள்ள பெற்றோருக்கு வர வேண்டும். 

Jammu-and-Kashmir-ranji-trophy_16071.jpg

(அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் பர்வேஸ் ரசூல்.கடைசியாக இருப்பவர் சமியுல்லா)

பர்வேஸ் ரசூல், இந்திய அணியில் இடம்பிடித்த பின், கிரிக்கெட் கரியர் இப்படித்தான் இருக்கும் என்று சிலர் நினைக்கின்றனர்.  14 ஆண்டுகளாக நான் விளையாடுவதைப் பார்த்து, கிரிக்கெட் இப்படித்தான் இருக்கும் என ஒருசிலர் வேறு விதமாக நினைக்கின்றனர். இதற்கு முன், இங்கிருந்து பெயர் சொல்லும்படியான வீரர்கள் யாரும் உருவாகவில்லை. அதனால் அவர்கள் அப்படி நினைக்கலாம். இப்போதும் கூட ஸ்போர்ட்ஸை துணிந்து தேர்ந்தெடுக்க பலர் தயங்குகின்றனர். ரசூல் தன் பகுதியில் அகாடமி அமைக்க முயற்சித்து வருகிறார். நான் ஸ்ரீநகரில் தொடங்க உள்ளேன்.

தெற்கே விளையாட்டும், வடக்கே அரசியலும் ஜொலிக்கிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கின்றனர். அவர்கள் அரசியலுக்குள் வர விரும்புவதில்லை. கிரிக்கெட் அகாடமி அமைப்பதன் மூலம், நான் சார்ந்த மாநிலத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த முடியும் என நம்புகிறேன். ஏனெனில் கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது  

இன்னும் சில நாட்களில் சமியுல்லா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால், கிரிக்கெட்டில் இருந்து ஜம்மு அண்ட் காஷ்மீர் விலகி விடக்கூடாது என்பதற்காக உழைத்துக்கொண்டுதான் இருப்பார்.

http://www.vikatan.com/news/sports/73928-journey-of-jammu--kashmir-cricketer-samiullah-beigh.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.