Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20

Featured Replies

21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20

 

மகளிர்

பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய  மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது.  

மிதாலி  ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.  ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடும். இதில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும். ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டி வரும் ஞாயற்றுக் கிழமை நடக்கிறது. 

நவம்பர் 26 - டிசம்பர் 4 வரை நடக்கும் இந்த ஆசிய கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. மிதாலி ராஜின் அதிரடி, சிக்கனமான பந்து வீச்சுக் காரணமாக இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தெம்பாக  தொடரைத் தொடங்கியது. மறுநாளே தாய்லாந்தையும் புரட்டி எடுத்து  ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்து அசத்தியது இந்திய அணி. 

 சர்வதேச அரங்கில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக எந்தப் போட்டியும் நடக்க வில்லை. ஆண்கள் கிரிக்கெட்டில், இரண்டு அணிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுப் பின்னர் ரத்து செய்யப் பட்டது. கபடி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு வருவதற்குப் பாகிஸ்தான் அணிக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடக்க விருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியை மாற்ற வேண்டும் என  ஐசிசி க்கு பி.சி.சி .ஐ கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த செவ்வாய்க் கிழமை மகளிர் கிரிக்கெட்டில் மோதின.  

இந்த  ஆசியக் கோப்பைத் தொடரில் இதுவரை அதிகப் பரபரப்பைக் கூட்டிய  மேட்ச் இது தான். டாஸ்  வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஏழு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்தது, சேஸிங்கில் இந்திய அணி மிக மெதுவாக விளையாடியது. நடப்பது டி20 போட்டியா இல்லை டெஸ்ட் போட்டியா எனச் சந்தேகம் வரும் அளவுக்கு இந்திய அணியின் ரன் வேகம் மந்தமாக இருந்தது. கடைசிக் கட்டத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாய் ஆடி 22 பந்துகளில் 26  ரன்களைச் சேர்க்க இந்திய அணி 19.2 ஓவரில் 98 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. 

மகளிர்

இலங்கை அணியுடன் நேற்று நடந்த போட்டியில் 52  ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தச் சூழ்நிலையில் சம்பிரதாயப் போட்டியாக இந்தியாவும்- நேபாலும் லீக் போட்டியில் மோதின. மிதாலி ராஜ் உட்படச் சீனியர் வீரர்கள் சிலர், ஓய்வெடுக்க, ரிலாக்சாகக் களமிறங்கியது இந்திய அணி.  

முதலில் பேட்டிங் செய்த இந்தியா,  இருபது ஓவர் முடிவில் 120 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நேபால் பேட்டிங் பிடித்தது, இந்திய பந்துவீச்சாளர்களின் கிடுக்கிப் பிடி பந்துவீச்சில் நேபால் வீரர்களால் ரன்களை அடிக்கவே முடியவில்லை.  16.5 ஓவர்கள் ஆடியும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட நேபால் அணியால் அடிக்க முடியவில்லை. அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னே ஆறு தான். ஆடிய பத்து பேரும் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்து அவுட்டாகினர், இதில் நான்கு பேர் டக் அவுட். இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் மூன்று ஓவர் வீசி மூன்று  ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி 20 வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான  ரன்களுக்கு ஒரு அணி ஆல் அவுட் ஆவது இது தான் முதல் முறை.  

நேபாலை வென்றதையடுத்து ஐந்து போட்டிகளையும் இந்தியா வென்றுள்ளது, நாளைய தினம் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது, இதில் பாகிஸ்தான் ஜெயித்தால், ஞாயிற்றுக் கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதும். இந்த ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பரபரப்பான ஒரு போட்டி காத்திருக்கிறது என நம்பலாம்.

http://www.vikatan.com/news/sports/74012-indian-womens-cricket-team-bowled-out-opposition-for-just-21-runs.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.