Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை!

Featured Replies

மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை!

Image-01-a21c3054794332577ff79c241584a6f8125bb26c.jpg

 

முள்­ளி­வாய்க்கால் பேர­ழி­வுக்குப் பின்னர், முதல்­மு­றை­யாக, மாவீரர் நாள், வடக்கில் பெரு­மெ­டுப்­பிலும், கிழக்கில் ஓர­ள­வுக்கும் வெளிப்­ப­டை­யாக அனுஷ்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், புலி­ களின் அத்­தனை அடை­யா­ளங்­க­ளை யும் அழிப்­பதில் கவனம் செலுத்­திய, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், முதலில் கைவைத்­தது மாவீரர் துயி­லு­மில்­லங்­களின் மீது தான்.

ஏனென்றால், அவை ஒவ்­வொரு ஆண் டும் மாவீரர் நாளன்று மக்­களை ஈர்த்துக் கொள்ளும் வசீ­க­ரத்தைக் கொண்­டி­ருந்­தன.

புலிகள் இருந்­தா­லென்ன, இல்­லா­விட்­டா­லென்ன, அவர்கள் அழைத்­தா­லென்ன அழைக்­காது போனா­லென்ன, மாவீரர் நாளன்று துயி­லு­மில்­லங்­களை நோக்­கிய மக்­களின் படை­யெ­டுப்பு என்­பது, இரண்டு தசாப்­தங்­க­ளாக அவர்­களின் இரத்­தத்தில் உறைந்து போன மர­பாக மாறி­யி­ருந்­தது.

புலிகள் இல்­லாது போனாலும், துயி­லு­மில்­லங்கள் உயிர்ப்­பு­ட­னேயே இருக்கும் என்­பதால் தான், போரை முடி­வுக்குக் கொண்டு வந்த கையுடன் அவற்றை அர­சாங்கம் அழித்­தது. சில துயி­லு­மில்­லங்­களின் மீது நிரந்­த­ர­மான படைத்­த­ளங்கள் அமைக்­கப்­பட்­டன. வேறு சில­வற்றை படை­யினர் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வைத்­தி­ருந்­தனர்.

வெளி­நாட்­ட­வர்கள் கூட வியந்து பார்க் கும் அள­வுக்கு ஒரு கல்­லறைத் தோட்­ட­மாக விளங்­கிய துயி­லு­மில்­லங்கள், காடுகள் மண்­டியும், கற்­கு­வி­யல்­க­ளு­மாக மாற்­றப்­பட்­டன.

இதன் மூலம், முன்­னைய அர­சாங்­கமும் படை­யி­னரும் தமக்குள் திருப்­திப்­பட்டுக் கொண்­டார்கள். இனிமேல் துயி­லு­மில்­லங்கள் உயிர்க்­கவே முடி­யாது என்று நினைத்­தி­ருந்­தார்கள்.

அந்த அதி­கார மமதை, இம்­முறை மாவீரர் நாளன்று அடி­யோடு அழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தமக்குக் கிடைத்­துள்ள ஒரு சிறிய ஜன­நா­யக இடை­வெ­ளியைத் தமிழ் மக்கள், துயி­லு­மில்­லங்­களை உயிர்ப்­பித்துக் கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள், வடக்கில் உள்ள மாவீரர் துயி­லு­மில்­லங்­களில், முன்­னைய வழக்கம் போலவே ஒன்று கூடி, நினை­வுச்­சுடர் ஏற்றி வணக்கம் செலுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இப்­ப­டி­யொரு வாய்ப்புக் கிடைக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்­க­வில்லை. துயி­லு­மில்­லங்­களில் பல தாய்­மார்கள், “உன்னைக் காண இங்கு வர முடியும் என்று நினைக்­க­வே­யில்லை” என்று, தமது பிள்­ளை­களை நினைத்து அழுது புரண்ட காட்­சி­களை யாராலும் இல­குவில் மறக்க முடி­யாது.

இறந்­து­போன தமது உற­வு­களை நினைத்து, உற­வி­னர்­களும், மக்­களும் ஒன்று கூடி அஞ்­சலி செலுத்­திய அந்தக் கணத்­தி­லேயே, தமி­ழர்­களைப் போரில் வென்று விட்­ட­தாக 2009ஆம் ஆண்டு செய்­யப்­பட்ட பிர­க­ட­னங்கள் அத்­த­னையும் அடி­யோடு பெயர்ந்து விட்­டன.

இம்­முறை மாவீரர் நாள் அனுஷ்­டிப்­புக்கு அர­சாங்கம் எந்த தடை­யையும் பகி­ரங்­க­மாக விதிக்­காமல் ஒதுங்கிக் கொண்­டது பல­ரையும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

குறிப்­பாக, தமிழர் தரப்பில் அர­சாங்­கத்தை மிக கடு­மை­யாக விமர்­சித்து வந்­த­வர்­களைக் கூட, அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யி­ருக்­கி­றது.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர், தமிழ்­மக்­க­ளுக்குக் கிடைத்­தி­ருக்­கின்ற ஒரு முக்­கி­ய­மான அடை­வாக இந்த வாய்ப்பைக் குறிப்­பி­டு­வதில் தவ­றில்லை.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்டு வந்த ஒரு முக்­கி­ய­மான உரிமை, இந்த முறை கிடைத்­தி­ருக்­கி­றது என்­பதை ஏற்றுக் கொண்­டாக வேண்டும்.

இது நிரந்­த­ர­மா­னதா என்று கூற முடி­யா­வி­டினும் இப்­போ­தைக்கு இந்த உரிமை கிடைத்­துள்­ளது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

இறந்­தோரை நினைவு கூருதல் மனித மரபு. மனி­தனின் அடிப்­படை உரிமை. ஆனால் அது­கூட இல்­லாத நிலையில் தான், தமிழ் மக்கள், கடந்த ஆட்­சியில் இருந்­தனர். அத்­த­கைய நிலை இப்­போது, முற்­றி­லு­மாக இல்­லா­விட்­டாலும் கணி­ச­மாக மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கி­றது என்­ப­தற்கு இம்­முறை மாவீரர் நாளே சாட்சி.

அர­சாங்கம் நினைத்­தி­ருந்தால், பொலி­ஸாரைக் கொண்டு, சட்­ட­ரீ­தி­யா­கவே இந்த நிகழ்­வுக்குத் தடை­களை விதித்­தி­ருக்­கலாம். அவ்­வா­றான எந்த முயற்­சி­க­ளிலும், அர­சாங்கம் இறங்­க­வில்லை.

காரணம், இது தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளுடன் தொடர்­பு­டைய விடயம் என்­பதை, அர­சாங்கம் உணர்ந்­தி­ருந்­தது.

அர­சாங்­கத்தில் உள்ள சில அமைச்­சர்கள், மாவீரர் நாள் அனுஷ்­டிப்­புக்கு எதி­ராக குதர்க்­க­மான கருத்­துக்­களை வெளி­யி­டவே செய்­தனர். அவர்­களில் தமி­ழர்­க­ளான அமைச்­சர்­களும் அடங்­கி­யி­ருந்­தனர்.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், பாது­காப்புச் செய­லரும் கூட, மாவீரர் நாளை அனுஷ்­டிப்­பது சட்­ட­வி­ரோதம், சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றெல்லாம், எச்­ச­ரித்துப் பார்த்­தனர்.

ஆனாலும், இந்த நிகழ்­வு­களைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் தனது கரு­வி­களை பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. அதிலும், இந்த விட­யத்தில் பாது­காப்பு அமைச்சின் கீழ் உள்ள முப்­ப­டை­க­ளையும் தலை­யி­டாமல் தடுத்து வைத்­தி­ருந்­தது அர­சாங்கம்.

மாவீரர் நாளை அனுஷ்­டிப்­பது சட்­ட­வி­ரோதம் என்று எச்­ச­ரித்த பாது­காப்புச் செயலர், கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி, பின்னர் இதனைத் தடுக்கும் அதி­காரம் படை­யி­ன­ருக்கு இல்லை என்றும், பொலி­ஸாரே அதனை கவ­னிக்க வேண்டும் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

மாவீரர் நாள் நிகழ்­வு­களைத் தடுக்கும் நட­வ­டிக்­கை­களில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டி­ருந்தால், அது பல எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

இரா­ணு­வத்­தி­ன­ருடன் மக்கள் முரண்­படும் நிலை ஏற்­பட்­டி­ருக்கும். அது, தமிழ் மக்­க­ளுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ளும், இரா­ணு­வத்­தி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் தற்­போ­தைய அணு­கு­மு­றைக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

அதை­விட, சிவில் விவ­கா­ரங்­களில் இரா­ணுவத் தலை­யீ­டுகள் இன்­னமும் உள்­ளன என்­பது, மீண்டும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். வடக்கில் இயல்பு வாழ்­வுக்கு அதி­க­ரித்த இரா­ணுவப் பிர­சன்­னமே முக்­கிய காரணம் என்ற கருத்து உல­கெங்கும் பர­வி­யுள்­ளது.

தமிழ் மக்­களால் முன்­வைக்­கப்­பட்ட இந்தக் குற்­றச்­சாட்டை, ஐ.நா. அதி­கா­ரி­க­ளென்­றாலும், சரி, சர்­வ­தேச பிர­தி­நி­திகள் என்­றாலும் சரி, ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்­கைக்கு வரும், வெளி­நாட்டு மற்றும் ஐ.நா. பிர­தி­நி­திகள், பிர­மு­கர்கள், வடக்கில் இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் குறைக்க வேண்டும் என்­ப­தையும், பொது­மக்­களின் செயற்­பா­டு­களில் இருந்து அவர்­களை அகற்ற வேண்டும் என்றும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள்.

ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளிலும் இது முக்­கிய இடத்தைப் பிடித்­தி­ருந்­தது.

இப்­ப­டிப்­பட்ட நிலையில், மாவீரர் நாள் நிகழ்­வு­களைத் தடுக்கும் நட­வ­டிக்­கையில் இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்­தி­யி­ருந்தால், அது சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணு­வத்தின் தலை­யீட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்து விடும்.

அதை­விட, வடக்கில் இருந்து படை­களைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்­தங்கள் இன்னும் அதி­க­ரிப்­ப­தற்கும் கார­ண­மாகி விடும்.

அதனால், தான் இந்த விவ­கா­ரங்­களில் இருந்து இரா­ணு­வத்தை முற்­றா­கவே விலக்கி வைத்­தி­ருந்­தது அர­சாங்கம்.

இரா­ணு­வத்தை மாத்­தி­ர­மன்றி, பொலி­ஸா­ரையும் கூட இதில் தலை­யீடு செய்ய அனு­ம­திக்­க­வில்லை.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­ட­ருக்­கா­கவே, அர­சாங்கம் இந்த அனு­ம­தியைக் கொடுத்­த­தாக, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கூறி­யி­ருந்தார்.

அதுவும் ஒரு கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். சர்­வ­தேச சமூ­கத்­துக்கு சில வாக்­கு­று­தி­களை கொடுத்­தி­ருக்கும் நிலையில் அவற்றை நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­துக்கு உள்­ளது.

அதை­விட, நல்­லி­ணக்க செயல்­மு­றையில், இறந்­தோரை நினைவு கூரும் உரி­மையும் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து ஏற்­க­னவே பல்­வேறு தரப்­பி­னரும் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றனர்.

அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நல்­லி­ணக்க செயல்­மு­றை­களை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்­வ­தற்கு, இது­போன்ற விட­யங்­க­ளுக்கு அனு­ம­தித்தல் துணை­யாக இருக்கும் என்­பதை மறந்து விட முடி­யாது.

மாவீரர் நாள் அனுஷ்­டிப்பை குழப்பும் முயற்­சி­களை மேற்­கொண்டால் அது தேவை­யற்ற எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தி, அர­சாங்­கத்தின் மீதான தமிழ் மக்­களின் நம்­பிக்கை இன்னும் மோச­மாக பாதிக்­கப்­படும் சூழல் இருந்­தது.

ஏற்­க­னவே கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­று­வதில் அர­சாங்கம் முழு அக்­கறை செலுத்­த­வில்லை என்ற மனக்­குறை தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கி­றது. இத்­த­கைய நிலையில், மாவீரர் நாளைக் குழப்­பினால், அது தமிழ்­மக்­க­ளுக்கு இன்னும் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் என்­பதை அர­சாங்கம் அறிந்­தே­யி­ருக்கும்.

அந்த வகையில், நல்­லி­ணக்க சமிக்­ஞை­யா­கவோ அல்­லது, சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்குப் பயந்தோ, மாவீரர் நாளைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு எந்த தடை­யையும் விதிக்­காமல் ஒதுங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இதனை அர­சாங்­கத்தின் ஒரு இரா­ஜ­தந்­திரம் என்று கூடச் சொல்­லலாம். தமிழ்­மக்­க­ளையும், சர்­வ­தேச சமூ­கத்­தையும் வெற்றி கொள்ளும் இரா­ஜ­தந்­திரம் இது.

இதனைச் செய்ததன் மூலம் அரசாங்கம் வெற்றி பெற்று விட்டதாகவோ, தமிழர் தரப்பு தோற்று விட்டதாகவோ கருதக் கூடாது. அவ்வாறான ஒரு கற்பிதத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழர் தரப்பில் சிலர் முன்னெடுப்பதையும் காண முடிகிறது.

தமிழ் மக்களுக்குத் தேவையானது அவர்களின் உரிமை. மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை தமிழர்கள் இந்த இடத்தில் தற்காலிகமாகவேனும் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம், மாவீரர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதல் கிடைத்திருக்கிறது. மனநிம்மதி கிடைத்திருக்கிறது.

இதற்கு அரசாங்கத்தின் நெகிழ்வுத்தன்மை தான் காரணம்.

இதுபோன்ற விடயங்களில் அரசாங்கத்துடன் இழுபறி யுத்தம் நடத்துவதோ, இதுபோன்ற விடயங்களில் அரசியல் ஆதாயங்களை இலக்கு வைப்பதோ அபத்தமான செயலாகவே இருக்கும்.

அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ மாவீரர் நாள் தொடர்பாக எடுத்த மென்போக்கான முடிவு, தமிழ் மக்களின் தொடர் வசைகளில் இருந்து தப்பிக்க கொஞ்சம் உதவியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.