Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதன் அவசியம்

Featured Replies

பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்­வதன் அவ­சியம்

 

அர­சியல் தீர்வு தொடர்­பான விவ­காரம் தற்­போது மிகவும் பர­ப­ரப்­பான நிலையை அடைந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக எவ்­வா­றான தீர்வுத் திட்­டத்தை முன்­வைப்­பது என்­பது தொடர்பில் சிக்­கல்கள் எழுந்­துள்­ளமை பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது. அதா­வது ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தென்­னி­லங்­கையில் கடும்­போக்­கு­வா­திகள் உட்­பட பல­த­ரப்­பட்டோர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். மறு­புறம் சமஷ்­டி­மு­றை­மை­யி­லேயே இணைந்த வடக்கு, கிழக்கில் உச்­ச­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுடன் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தமிழர் தரப்­பி­னரும் கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில் இவை இரண்டும் தவிர்ந்த பொது­வான ஒரு முறைமை ஊடாக தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்­க­வேண்­டு­மெ­னவும் வார்த்தைப் பிர­யோ­கங்­களில் தங்­கி­யி­ருப்­பதில் அர்த்­த­மில்லை என்றும் மற்­று­மொரு தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். எனவே ஐக்­கிய இலங்­கைக்குள் சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­ட­மொன்றை அடை­வது என்­பது மிகவும் சவா­லான ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து வரும் பாரா­ளு­மன்­றத்தின் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது இனப்­பி­ரச்­சினை தீர்வு, தேர்­தல்­முறை மாற்றம் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஆகி­யவை தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது. அது­மட்­டு­மின்றி பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆறு உப­குழுக்­களும் வகைப்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்து தற்­போது அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் அடுத்­த­கட்­ட­மாக பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது முக்­கி­ய­மான மூன்று விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்­ததன் பின்னர் அந்த அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதனைத் தொடர்ந்து அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யா­னது அர­சி­ய­ல­மைப்பு குறித்த மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்­கையையும் கவ­னத்தில் எடுத்து அர­சி­ய­ல­மைப்பு வரைபை தயா­ரிக்­க­வுள்­ளது.

அதன்­ பின்னர் வரை­பா­னது பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் நிறை­வேற்­றப்­பட்டு சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­பிற்கு செல்­ல­வேண்டும். இவ்­வா­றான பின்­ன­ணியில் இந்த பரந்­த­ள­வி­லான செயற்­பாட்டின் ஊடாக தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் வகையில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்டம் உள்­ள­டக்­கப்­ப­டு­மென பொது­வா­கவே அனைத்துத் தரப்­பி­னரும் விவா­திக்­கின்­றனர். மித­வாதப் போக்­கு­டைய தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் பலர் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக உள்­ள­டக்­கி­ய­வாறு அர­சி­யல்­தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆனால் கடும்­போக்­கு­வா­தி­களும் 13 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கூட எதிர்க்கும் நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் தீர்­வுத்­திட்டம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள தமிழ்த் ­தே­சி­ய­ கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அர­சியல் தீர்­வாக அமை­யாது என்றும் அதி­லி­ருந்து வெகு­தூரம் சென்று நியா­ய­மா­னதும் நீதி­யா­ன­து­மான தீர்வு கிடைத்தால் அதனை உதா­சீ­னப்­ப­டுத்த மாட்டோம் எனவும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது முழு­மை­யான நம்­பிக்கை வைக்­க­வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ரவின்றி நிறை­வேற்­றப்­பட்டால் அது பய­னற்­ற­தா­கிப்­போய்­விடும். ஏற்­ப­டப்­போகும் அர­சியல் தீர்­வா­னது நியா­ய­மா­ன­தா­கவும் இறை­மையின் அடிப்­ப­டை­யிலும் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும். நாட்டு மக்­க­ளுக்கு நீதி­யான தீர்வு கிடைக்­க­வேண்டும் எனவும் இரா. சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். அத்­துடன் வடக்கு, கிழக்கு இணைப்பை பொறுத்­த­வ­ரையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­மானம் எடுக்­க­வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் இதற்­காக முரண்­ப­டாமல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். பலர் தற்­போ­தைய செயற்­பா­டு­களை குழப்ப முயற்­சித்­தாலும் மக்கள் மத்­தியில் சென்று உண்­மையை கூறி அர­சி­ய­ல­மைப்­புக்கு மக்­களின் ஆத­ரவைப் பெற­வேண்டும். பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வின்றி பெற்­றுக்­கொள்­ளப்­படும் தீர்­வா­னது அர்த்­த­மற்­ற­தா­கி­விடும். அதனை ஜனா­தி­ப­திக்கும் கூறி­யி­ருக்­கின்றோம். நாமும் தொடர்ந்தும் தீவி­ர­மான போக்கில் இருக்க முடியாது. அதனால் எத­­னையும் அடைய முடி­யாது. கொள்­கையில் மாத்­திரம் தீவி­ர­மாக இருந்து வேண்­டி­யதை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அந்த வகையில் யதார்த்­த­மா­கவும் மிகவும் சாமர்த்­தி­ய­மா­கவும் செயற்­ப­டு­வதன் மூலமே உரிய தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென சம்­பந்தன் மிகவும் அழுத்தம் திருத்­த­மாக வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். இதற்­க­மைய சாது­ரி­ய­மாக செயற்­ப­டு­வதன் மூலம் நாம் தீர்வை நோக்கிப் பய­ணிக்க முடியும். இந்த விடயம் மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விவ­காரம் என்­பதால் செயற்­பா­டு­களை கவ­ன­மா­கவும், அவ­தா­னத்­து­டனும் முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போ­தைய நிலை­மையில் சமஷ்டி என்­பது சிங்­கள மக்கள் மத்­தியில் எவ்­வாறு ஒரு அச்சம் தரும்­சொல்­லாக அமைந்­தி­ருக்­கின்றதோ அது­போன்று தீர்­வுத்­திட்­டமும் மாறி­வி­டக்­கூடாது. தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நீதி­யான தீர்­வுத்­திட்டம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதை பெரும்­பான்மை மக்­க­ளிடம் எடுத்து சொல்­ல­வேண்டும். அத­னூ­டாக பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்டே ஒரு தீர்­வுத்­திட்­டத்தை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறு­வ­து­போன்று பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வின்றி தீர்­வுத்­திட்­டம் நிறை­வேற்­றப்­ப­டு­மாயின் அது அர்த்­த­மற்­ற­தா­கவே போய்­விடும். இந்த விட­யத்தை தூரநோக்கு கொண்டு ஆராய்ந்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

எவ்­வா­றெ­னினும் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து குறைந்­த­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வு விவ­கா­ரங்­க­ளுக்கு கடும் எதிர்ப்­புக்கள் வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் கீழ் வரு­கின்ற ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்கள் முன்­வைத்­துள்ள அறிக்­கைகள் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்த உப கு­ழுக்­களின் அறிக்­கைகள் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் அமைந்­துள்­ள­தா­கவும், அதில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கும் யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விசனம் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் இல்­லாத கொள்­கைகள் குறித்து பரி­சீ­லனை செய்து நாட்டை சீர­ழித்­து­வி­ட­வேண்டாம். ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு அடி­மைப்­பட்­டுள்ள சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் தமது கட்­சியின் கொள்­கைக்கு துரோகம் இழைக்­கக்­கூ­டாது எனவும் மஹிந்த ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

காணி அதி­கா­ரங்­களைப் பொறுத்­த­வரை அரச காணிகள் தொடர்­பான அதி­கா­ரங்கள் அனைத்தும் மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­க­வேண்­டு­மென யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கீழ் அரச காணி­களை உப­யோகம் செய்­வ­தாயின் மத்­திய அர­சா­னது மாகாண அரசின் அனு­ம­தியைப் பெற­வேண்டும். இந்­தி­யாவின் மாநி­லங்கள் விரும்­பி­னாலும் விரும்­பா­வி­டினும் மத்­திய அரசு காணி­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் மஹிந்த ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டினார்.

இவ்­வாறு பார்க்கும் போது உப கு­ழுக்­களின் அறிக்­கை­க­ளுக்கே தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து கடும்­போக்­கு­வா­திகள் கடும் எதிர்ப்பை வெளி­யி­டு­கின்­ற­மையை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. எனவே இந்த விட­ய­மா­னது மிகவும் பொறுப்­பு­டனும் அவ­தா­ன­மா­கவும் கையா­ளப்­பட­வேண்டும் என்­பது மீண்டும் தெளிவாகியுள்ளது. அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் ஆரோக்கியமான நிலைப்பாட்டில் இருக்கின்றமை தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் நம்பிக்கை தரும் வகையில் அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு பார்க்கும்போது எப்போதும் இல்லாதவாறான ஒரு தீர்க்கமான கட்டம் தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் எழுந்துள்ளதை உணர முடிகின்றது. ஆனால் அந்த தீர்க்கமான கட்டத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கூறுவது போன்று தென்னிலங்கை மக்களினதும் ஆதரவைப் பெற்றுக்கொண்டு ஒரு தீர்வை அடைவதே யதார்த்தகரமானதாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் அமையும். எனவே அந்த நோக்கத்தை அடையும் வகையில் காய்கள் நகர்த்தப்படவேண்டும். இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டுமென்பதை நாங்களும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.