Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

Featured Replies

அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

 

 
 
 
 
சென்னை போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: ம.பிரபு
சென்னை போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: ம.பிரபு
 
 

போயஸ் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரா கவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதே நேரம் அதிமுகவின் அடுத்த பொதுச் செய லாளர் யார் என்பதற்கான சதுரங்கம் தற்போது தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலுக்கு முன், சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, ‘‘ எனக்குப் பின்னும் அதிமுக இருக்கும்” என்று ஜெயல லிதா அறிவித்தார். ஆனால், தனக்குப்பின் கட்சியை யும், ஆட்சியையும் யார் வழிநடத்துவார் என்பது தொடர்பாக அவர் எந்த ஒரு தகவலையும் அளிக்க வில்லை. இதனால் அவரது மறைவுக்குப் பின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப் பதவிக்கு ஜெயலலி தாவின் தோழியும், 30 ஆண்டுகளாக அவருடன் இருந்தவருமான சசிகலா வின் பெயர் தற்போது பிரதானமாக பேசப்படுகிறது.

அதே நேரம், ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்ததைப் போல், கட்சி நிர்வாக மாற்றமும் சுமூகமாக நடக்க வேண்டும் என்று அதிமுகவினர் எதிர் பார்க்கின்றனர். இதையடுத்து கடந்த இரு தினங்களாக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 7-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இதில், செங்கோட்டையன் மாலை வரை அங்கிருந்ததாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதே போல், நேற்று காலையும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், இ.மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அங்கு ஒருமணி நேரத்துக்கும் மேல் அவர்கள் சசிகலா முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். அதன் பின், ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றனர். நேற்று காலையும் செங்கோட்டையன் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தார். அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தேர்தல் ஆணைய விதிகளின் படி, ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுக் குழு கூட்டப்பட வேண்டும். அதிமு கவைப் பொறுத்தவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில் வரும் 30-ம் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதன்படி, ஜெயலலிதா மறைவு தொடர்பான சம்பிரதாயங்கள் முடிந்ததும், விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என்றும், அதில் பொதுச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுகவை-யார்-வழி-நடத்துவது-தமிழக-அமைச்சர்கள்-ஆலோசனை/article9418646.ece?homepage=true

  • தொடங்கியவர்

அதிமுக எதிர் காலம்.. செங்கோட்டையன் திடீர் அறிக்கை..!

 

Sengottaiyan_new_20366.jpg

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு அறிக்கை மூலம் முற்றி புள்ளி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் அதிமுகவின் எதிர்காலம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால், கட்சியில் கடும் மோதல் போக்கு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அதிமுகவில், தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும், குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறி, ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று போர்க் கொடி தூக்குவதாக செய்திகள் வெளியானது.

முக்கியமாக ஜெயலலிதா இருக்கும்போதே, அதிமுகவில் கால் நூற்றாண்டு காலம் பலம் மிக்க 2-ம் கட்ட தலைவர்களில் ஒருவராக வலம் வந்த செங்கோட்டையன், கட்சியில் தற்போது உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி, சசிகலாவோடு போட்டி போடுவதாகவும் கூறப்பட்டது. மேலும், பொதுச்செயலாளர் பதவி கேட்டு தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர் நெருக்கடி தருவதாகவும் கூறப்பட்டது. இதனால், அதிமுகவில் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் அதிமுகவில் நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, செங்கோட்டையன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதில், "அம்மா கட்டிக்காத்த, அதிமுக இயக்கத்திற்கு உறுதுணையாக என்றென்றும், என் உயிர் மூச்சு உள்ளவரை இருப்பேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்திய திருநாட்டின் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இயக்கமாக உருவாக்கிய அம்மா அவர்களால் வெற்றி வாகை சூடிய அதிமுக இயக்கத்தை யாராலும், எவராலும் ஒரு இம்மி அளவு கூட அசைக்க இயலாது.

அன்றும், இன்றும், என்றும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கும், தலைமைக்கும் விசுவாசமாகப் பணியாற்றிவரும் அம்மாவின் உண்மை விசுவாசியான என்மீது இனி வீண் வதந்திகளையும், பொய் பிரச்சாரங்களையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"எந்த வித சலனத்திற்கும் உட்படாமல் ஒரு உண்மையான தொண்டனாக பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்து, குழப்பத்தை உருவாக்க நினைத்து, சில தீயசக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். முக்கியமாக அதிமுக தலைமைக்கும், புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசியாக அன்றும், இன்றும், என்றும் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் செங்கோட்டையனால், அதிமுக வில் நிலவி வந்த சர்ச்சை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74579-sengkottaiyan-statement-about-admks-future.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.