Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை

Featured Replies

பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை

 
 

லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

 

மொசாவின் குழந்தை

புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை

24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார்.

லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார்.

"ஆரோக்கியமான குழந்தை ஒன்றிற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம்" என்று மோசா தெரிவித்துள்ளார்.

மகப்பேறியல் மருத்துவர் மற்றும் மோசாவின் மருத்துவரான சாரா மாத்யூஸ், "தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் இந்நிகழ்வின் மூலம் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வருவது குறித்தும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்".

"இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். சினைப்பை திசு மாற்று வயதான பெண்மணிகளுக்கு வேலை செய்யும் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் குழந்தையாக இருக்கும் போது திசுக்களை எடுத்து உறைய வைத்து அதை திரும்பவும் வேலை செய்ய வைக்க முடியும் என்பது எங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய், ரத்தம் அல்லது நோய் எதிர்ப்புக் கோளாறுகளுக்காக சிகிச்சை எடுத்து கொள்வதால் கருவுற முடியாமல் போகும் ஆபத்தை எதிர்கொள்ளும், பிற சிறுமிகளுக்கும் பிற இளவயது பெண்களுக்கும், குழந்தை பெற்று கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அது தரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசாவின் கருத்தரிப்பு தன்மையை விளக்கும் படம்  

எதிர்காலத்திற்காக உறைய வைத்தல்

துபாயில் பிறந்த மோசா அல் மட்ருஷி, சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் "பீட்டா தலசமெயா" என்னும் வழிவழியாக வரும் ரத்த கோளாறால் பாதிக்கப்பட்டு வந்தார்.

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு முன்னதாக கீமோதெரபி அவருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை முறை சினைப்பைகளை சேதப்படுத்தும்.

அதனால் அந்த சிகிச்சைக்கு முன்னதாக, அவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது, அவரது வலது சினைப்பை ஒரு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் திசுக்கள் உறைய வைக்கப்பட்டன.

அவரது சினைப்பை திசு துண்டுகளில், "கிரையோ ப்ரொடக்டிவ் ஏஜண்ட்ஸ்" என்னும் திசுக்களை பாதுகாக்கும் பொருள் கலக்கப்பட்டது, மேலும் திரவ நைட்ரஜனில் வைக்கப்படுவதற்கு முன்பு மெதுவாக 196 செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைக்கப்பட்டது.

கடந்த வருடம், டென்மார்க்கை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால், மோசாவின் சினைப்பை திசுக்கள் ஐந்தாக பிரிக்கப்பட்டு, அதில் நான்கு அவரின் செயலிழந்த இடது பக்க சினைப்பையில் பொறுத்தப்பட்டன; மேலும் ஒன்று அவரின் கர்ப்பப்பையின் பக்கம் தைக்கப்பட்டது.

மோசாவிற்கு மாதவிடாய் நின்று விட்டது ; ஆனால் அந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின; மேலும் மாதவிடாய் வர தொடங்கியது; அவரின் கருவுறுதல் தன்மையும் மீட்கப்பட்டது.

மேலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மோசாவும் அவரது கணவரும் ஐவிஎஃப் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட எட்டு சினைமுட்டைகளில், மூன்று கருமுட்டைகளாக உருவாயின. அதில் இரண்டு இந்த வருடத்தின் தொடக்கத்தில் மோசாவிற்கு பொருத்தப்பட்டது.

கருவுறுதல் தன்மை மீண்டும் மீட்கப்பட்டு உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன; ஆனால் பூப்பெய்தலுக்கு முன்னர் உறையவைக்கப்பட்ட சினைப்பை கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட முதல் பெண்மணி மோசாதான்; மேலும் "பீட்டா தலசிமியா" சிகிச்சைக்கு பிறகு கருவுற்ற முதல் பெண்ணும் இவர்தான் என்ற சிறப்பையும் பெறுகிறார் மோசா.

http://www.bbc.com/tamil/global-38327176

  • தொடங்கியவர்

தாயான 24 வயதுடைய பெண் : மருத்துவ வரலாற்றில் புதிய சம்பவம்

 

பெண் ஒருவரின் கருப்பையின் திசுவை 13 வருடங்களாக உறைய வைத்து பின்னர் அதனை உரித்துடைய பெண்ணுக்கு பொறுத்தி குழந்தை ஒன்றை பெற்றெடுத்த வரலாற்றுச் சம்பவம் லண்டனில் போரட்லான்ட் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. unnamed.jpg

உலகில் முதல் முறையாக 13 வருடங்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கர்ப்பை  திசுவையை மீண்டும் உரித்த பெண்ணிற்கே பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. இச் சம்பவம் மருத்துவ துறையில் 

புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.

டுபாயில் பிறந்த மோசா அல் மன்ரூசி என்பவருக்கு அவரின் 11ஆவது வயதில் உடலில் ஏற்பட்ட இரத்த சம்பந்தமான பிரச்சினையால் கருப்பை திசுவை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் கருப்பை திசு 13 வருடங்களாக  பாதுகாப்பான முறையில் உறையவைத்திருந்த வைத்தியர்கள் அவரின் 23 ஆவது வயதில் திசுவை மீண்டும் குறித்தப் பெண்ணிற்கே பொறுத்தவே அவர் 24வது வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.

 

இது மருத்துவ துறையில்   புதுவித புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என லண்டன் போர்ட்லேண்ட் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

குழந்தைக்கு ராசீட் என பெயர் வைத்துள்ளதாகவும் இவ்வாறானதொரு குழந்தையை நீண்ட நாட்கள் காத்திருந்து பெற்றமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் மோசா மற்றும் அவரின் கணவர் அஹமட் ஆகியோர் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/14438

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்தின் மைல்கல் .... தாயும் சேயும் நீடுழி வாழட்டும் ....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.