Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழும் சக்குனி

Featured Replies

ஆணா­கப் பிறந்து பெண்­ணாக வாழும் சக்­கு­னி
 

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

170_DSCF4224.jpg“எனது அப்பா எனது பதி­னான்கு வயதில் கால­மானார். அவரின் திடீர் மறைவின் கவலை என்னை கலக்­கி­விட்­டது.

 

பாட­சா­லை­யில கல்வி கற்ற காலம் அது. என் அப்பா என்­னோடு உயி­ருக்கு உயி­ராக இருந் தார்.

 

அவரின் பிரிவு எனக்குள் பெரும் சோகத்தை வளர்த்­து­விட்­டது. இந்­
நி­லை­யில் தான் எனது பதி­னைந்து வயதில் காதல் உணர்வு ஏற்­பட்­டது.

 

எங்கள் பாட­சா­லையில் கல்வி கற்ற இரு­பது வயது மாண­வனை காத­லித்தேன். அவன் க.பொ.த. உயர்­தர வகுப்பு மாணவன். இது எனது முத­லா­வது காதல்” இவ்­வாறு தன்னைப் பற்றி கூற ஆரம்­பித்தார் எம். சக்­குனி.

 

“எங்­களின் காதல் வெளி­யு­ல­குக்கு வெளிச்சம் போட்டு காட்­டி­யது. எதிர் அலைகள் எழும்ப எங்­களின் காதல் சில மாதங்­க­ளி­லேயே முறிந்து விட்­டது.

 

எனது நடத்­தையில் வீட்டில் எதிர்ப்பு வெடித்­தது. நான் ஒரு பெண் என்­பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்­தனர். எனது உடல், உள்ளம், அனைத்தும் பெண் என்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தை பெற பெரும் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டி ஏற்­பட்­டது.

 

எனது குடும்­பத்தில் நான் மட்­டுமே ஆண் உரு­வத்தில் பிறந்­தவள் என சிரித்­தப்­ப­டியே கூறு­கி­றார் 36 வய­தான சக்­குனி. எனது இளம் பருவம் முதல் சிறு­மி­க­ளுடன் விளை­யா­டு­வது, சண்டை பிடிப்­பது வழக்­க­மாக இருந்­தது.

 

ஒன்­பது வயதில் பெண்­களின் உடை­களை அணிய ஆரம்­பித்தேன். பெண் பிள்­ளை­க­ளுடன் இணைந்து பெண் உருவ பொம்­மை­க­ளுடன் பேசு­வது, மண் சட்டி சமையல் செய்­வது என வேறு உலக வாழ்க்­கை க்குள் நுழைந்தேன்.

 

ஆண் பிள்­ளை­க­ளுடன் விளை­யாட விருப்பம் இல்­லாது இருந்த காலம் அது. பாட­சா­லையில் என் வகுப்பில் என்னைப் போன்று இருவர் கல்வி கற்­றனர். நாங்கள் மூவரும் ஏனைய மாண­வி­க­ளுடன் விளை­யா­டுவோம்.

 

என் கனவில் ஒரு நாள் நான் பெண்­ணாக மாற்றம் பெறு­வது தெரிந்­தது. எனது மாற்றம் பற்றி வீட்டில் பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன. என் அப்பா என அம்­மா­விடம் என்­னைப்­பற்றி தெரி­விப்­பது எனது காதில் விழுந்­தது.

 

நான் பெண்­ணாக உடை உடுத்தி திரு­நங்­கை­யாக மாறி­ரு­வது எமக்கு சரி­யல்ல, சமு­தாயம் ஏற்றுக் கொள்­ளாது என அம்­மா­விடம் தெரி­விப்­பது எனது காதில் விழுந்­தது. பயம் கொண்டேன். எனக்கு புத்தி சொன்­னார்கள்.

 

அது செவிடன் காதில் ஊதிய சங்­கா­னது. என்னால் ஆணாக உடை உடுத்தி செயல்­பட இய­ல­வில்லை. நாள­டைவில் வீட்டில் பச்சைக் கொடி காட்ட நான் என் பாதையில் பய­ணிக்கத் தொடங்­கினேன்.

 

எனது காதல் முறி­வுடன் சில வரு­டங்கள் படிப்பைத் தொடர்ந்­ததன் பின்னர் வேலை தேடி அலைந்தேன். பொர­ளையில் பெண்கள் சிகை அலங்­கார நிலை­யத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

 

அங்கு சிகை அலங்­கா­ரத்­துடன் மண­மகள் அலங்­க­ரிப்பு போன்ற பல அலங்­கார வேலை­களை கற்­றுக்­கொண்ட நிலையில் அங்கு இருந்து விலகி சில தினங்கள் வீட்­டோடு இருந்­தேன்.

 

எனது பதி­னெட்டு வயதில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் இணைந் தேன். அங்கு எச்.ஐ.வி. தொற்று விட­ய­மான பிர­சார பணி பயிற்­சியை மேற்­கொண்டேன்.

 

அங்கு எனக்கு எச்.ஐ.வி. தொற்று பரவும் விதம், அதனால் ஏற்­படும் பாதிப்பு என அனைத்து பயிற்­சியும் பேச்சுப் பயிற்­சியும் வழங்­கப்­பட்­டது.

 

எனது வாழ்க்கை தனி வழி. என் வாழ்க்கை உலகம் ஏனை­ய­வர்­க­ளி­லி­ருந்து பிள­வு­பட்ட வாழ்க்கை. திரு­நங்­கை­க­ளுக்­கான உல­கத்­துக்குள் வாழவே நான் விரும்­பினேன்.

 

எனது மன உளைச்சல், அதன் வலி என்னை விட்டு வில­க­வில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தேன். எனது முடிவு அம்­மாவை உண்­மை­யி­லேயே தொந்­த­ரவு செய்­தி­ருக்கும். அவர் பெரும் கவ­லை­ய­டைந்த பின்னர் தெரிந்து கொண்டேன்.

 

170_DSCF4222.jpg

 

பெரும் வலி­களை சுமந்­த­வாறு தனி­யாக அறை வாட­கைக்கு எடுத்து தங்­கினேன். இன்றும் என் அம்­மாவை  நினைக்­கையில் எனது மனது ஆட்டம் காணும்.

 

என்ன இருந்­தாலும் என் அம்­மாவின் கரு­வ­றையில் எனக்கு இடம் கொடுத்து எனக்கு தன் இரத்­தத்­தத்தை பாலாக கொடுத்­தவர் தானே என்ற போது சக்­கு­னியின் ஒவ்­வொரு வார்த்­தை­யிலும் போர்த்­தி­யி­ருந்­தது அம்­மாவின் பாசம்.

 

எச்.ஐ.வி. தொற்று விட­ய­மாக விப­சார தொழி­லா­ளிகள், தன்னிச் சேர்க்­கை­யா­ளர்கள் மத்­தியில் தீவி­ர­மாக எனது பிர­சாரப் பணியை மேற்­கொண்டேன்.

 

இவ்­ வி­ழிப்­பு­ணர்ச்சி பணியின் மூல­மாக எனக்கு முதன் முதலில் பதி­னைந்­தா­யிரம் ரூபா சம்­ப­ள­மாக கிடைத்­தது. அத் ­தினம் என் வாழ்க்­கையில் மறக்க இய­லாத தின­மாகும்.

 

கை நிறைந்த பணத்­துடன் எனது வாடகை அறைக்குள் நுழைந்தேன். எனக்கே தெரி­யாத உணர்வு எனது உடலில் மின்­சாரம் பாய்ந்­தி­ருந்­தது. பெரு­மைப்­பட்டேன்.

 

உண்­மை­யான பெருமை வெறும் சந்­தர்ப்ப முயற்­சி­களால் உரு­வாக்­கப்­ப­டு­வது அல்ல. அதற்கு மாறாக ஒரு மனி­த­னு­டைய உயர் தகு­திகள் தரம் அவை வெளி­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்ப சூழ்­நி­லை­களைத் தாமா­கவே உரு­வாக்கிக் கொள்­கின்­றன.

 

அதற்கு இலட்­சி­யமும் பாதையும் வேண்டும் என்­பதை அன்று உணர்ந் தேன். அன்­றைய தினம் எனக்கு சந்­தோ­சத்தின் தாக்­கத்தால் தூக்­கமும் தொலைந்­தி­ருந்­தது.

 

சில வரு­டங்­களில் அந் நிறு­வ­னமும் மூடப்­பட்­டது. அப்­போது நான் முழு­மை­யான பெண்­ணாக மாறி­விட்டேன். எனக்­கென ஒரு வாழ்க்கை வலை­ய­மைப்பை அமைத்துக் கொண்டேன்.

 

எனக்கு நேரம் கிடைக்­கும்­போ­தெல்லாம் அம்­மாவை பார்க்கச் செல்வேன். என்னை கரு­வ­றையில் பத்­தி­ரமாய் சுமந்த என் தாயின் வீட்டில் எனக்கு ஒரு அறை இல்­லையே என கவ­லைப்­பட்­ட­தில்லை. காரணம் நான் தானே வீம்பு பேசி வீட்டை விட்டு வெளி­யேறி எனக்­கென தனி கட்சி அமைத்துக் கொண்டேன்.

 

அம்மா மீது விரல் நீட்­டு­வது பாவ­மாகும். பின்னர் ‘ஹார்ட் 2 ஹார்ட்’  நிறு­வ­னத்தில் இணைந்தேன். தற்­போது இந் நிறு­வ­னத்தின் வெளிக்­கள அலு­வ­ல­ராக தொழில் புரி­கின்றேன்.

 

இப்­போது நல்ல சம்­பளம் கிடைக்­கின்­றது. நான் முழு­மை­யான பெண்­ணா­கவே வாழ விரும்­பு­கின்றேன். அதற்­கான வைத்­திய சிகிச்­சை­களை பெற்று வரு­கின்றேன். நான் இவ்­வாறு மாற்றம் பெற முயற்­சிப்­ப­தற்கு வீட்டில் அனை­வரும் சம்­ம­தத்தை வழங்கி விட்­டனர்.

 

இன்று நான் அழ­கான பெண் என்­பதில் நான் பெரு­மைப்­ப­டு­கிறேன்” என சக்­குனி தெரி­வித்தார். அதன்பின் எங்­களை குறு­கு­று­வென பார்­வையைச் செலுத்­தி­ய­வாறு மீளவும் நான் ஒரு காதல் வலையில் விழுந்தேன் “ எனக் கூறி அதிர்வை ஏற்­ப­டுத்­தினார்.

 

“அவர் என் மீது காதல் கொண்டார். அக்­காதல் முகநூல் மூல­மாக ஏற்­பட்ட காதல். இரு­வரும் முகநூல் மூல­மாக பல நாட்கள் தொடர்பு கொண்டோம்” என மிக சர்வ சாதா­ர­ண­மாக சொல்லி கல கல­வென சிரித்தார் சக்­குனி.

 

“பல மாதங்­களின் பின் இரு­வரும் புறக்­கோட்டை மெனிங் சந்­தையில் சந்­தித்துக் கொண்டோம். அந்­நாள்­வரை அவர் என்னை முழு­மை­யான பெண் என நினைத்தே காதல் வயப்­பட்டார்.

 

என்னை நேரில் கண்­டதும் எவ்­வித எதிர்ப்­பையும் காட்­ட­வில்லை. காதல் வளர்ச்­சி­யா­னது. அது செம்­மை­யான காத­லாகும். இப்­போது இரு­வரும் ஒன்­றாக வீட்டில் வாழ்­கின்றோம். எங்­க­ளுக்குள் பிரச்­சினை இல்லை. அவர் வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

 

உண்­மை­யி­லேயே ஒரு பெண் தன் கண­வனை கவ­னிப்­பது போன்று எனது கண­வரை கவ­னித்து வரு­கின்றேன். சமைப்­பது, உடை­களை துவைப்­பது என்­ப­தெல்லாம் நானே.

 

என்னை ஒரு பெண்­ணா­கத்தான் எனது கணவர் நோக்­கு­கிறார். என க்கு அன்பு, பாசம் என அனைத்து சுகமும் கிடைக்­கின்­றன” என சக்­குனி தெரி­வித்தார்.

 

“நாம் திரு­நங்­கை­க­ளுக்­கான உரிமைக்காக குரல் எழுப்புகிறோம். அனைத்து மொழி ஊடகங்களும் எமக்கு ஆதரவாக இயங்க வேண்டும். திருநங்கைகளும் மனித சமுதாயத்தின் ஒரு பிரிவினர் என்ற வாதத்தை கைவிட்டு எமக்கு பெண்கள் என்ற அங்கீகாரத்தை வழங்குங்கள்.

 

நாங்களும் வீதியில் சுதந்திரமாக உரிமையோடு பயணிக்க வேண் டும். முழு சமுதாயமும் எங்களை பிரித்துபார்வையிடாது ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என முழு குடும்பமும் எம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களின் மனதை சிதைத்து விடாதீர்கள்’’ என்றார் சக்குனி.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=170&display=0#sthash.lA09FXSC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.