Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றம்...!

Featured Replies

வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியதாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடமும், இலங்கை கடற்படையிடமும் முன்வைத்து அவசியமான அனுமதியை பெற்றுக் கொடுத்ததாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பயணத்திற்கு அவசியமான கடவுச்சீட்டு, விசா மற்றும் கப்பல் கட்டணங்கள் பக்தர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்று எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/transport/01/128623?ref=right_featured

  • தொடங்கியவர்

நிரந்தர கப்பல் போக்குவரத்தை நான் கோரவில்லை ; ரெஜினோல்ட் குரே

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்து அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகவுக்கு ஒரு படகை ஏற்பாடு செய்துதருமாறே நான் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.எனது கோரிக்கைக்கு இன்னும் அரசாங்கம் பதில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

asdfasfaf1_copy.jpg

இலங்கை இந்தியா ஆகிய நாடுகலக்கு இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தையோ அல்லது இருநாடுகலக்கு இடையிலான தடைகளை நீக்கும் முயற்சிகளையோ  என்மூலம் எவரும் முன்னேடுக்கவில்லை.இந்தியாவில் நடைபெறும் இந்துமத நிகழ்வான திருவாதிரை நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் வடக்கின் சிலர் என்னிடம் முன்வைத்தனர்.  அதனடிப்படையிலேயே அரசாங்கத்திடம் குறித்த கோரிக்கையினை தான் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.