Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

Featured Replies

பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

 

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 
பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
 
புதுடெல்லி:

புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.22,573 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில், முதல்கட்டமாக ரூ.1000 கோடி வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.

32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை, மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார். அவர் ஆற்றிய சேவையால் உலக அளவில் அவரது பெயர் தனி முத்திரை பதித்திருக்கிறது.

அதனை நினைவு கூறும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா மற்றும் சிலை வைப்பது தொடர்பாக ஆவன செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/19190008/1057075/what-spoke-with-pm--Panneerselvam-Interview-at-delhi.vpf

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சென்றால் அதிரும் டெல்லி, முதல்வர் பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொண்டது?

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்குமே வராது எனலாம். ஒரு மாநிலக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு அகில இந்தியத் தலைவர்களையே ஆட்டிப்படைப்பார். யாராக இருந்தாலும் தன்னை  சந்திக்க ஆசைப்பட வைக்கும் காந்த சக்தி படைத்தவர். மீடியாக்களிடம் அதிகம் பேசமாட்டார். மீடியாக்காரர்களை சற்று தள்ளியேதான் வைத்திருப்பார். அடிக்கடி டெல்லி சென்று மற்ற கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் பழக்கம் ஜெயலலிதாவிடம் இருந்தது இல்லை. டெல்லியில் உள்ள அதிமுக எம்.பிக்கள் 'அம்மா' என்ற வார்த்தைதான் மந்திரம். அந்த வார்த்தையை  உச்சரித்தே அரசியல் செய்ய பழக்கப்பட்டவர்கள். 

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க கோரி அதிமுக எம்பிக்கள் பிரதமரை சந்திக்க சென்றனர். அப்போது,' அம்மா எங்களை அனுப்பியுள்ளார்' என்றுதான் பிரதமர் அலுவலக வாயிலைத்  அதிமுக எம்.பிக்கள் தட்டினர். அம்மா என்ற வார்த்தைக்கு டெல்லிக்கு அத்தனை 'பவர்'.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்போதாவதுதான் தலைநகர் பக்கம் எட்டிப் பார்ப்பார். அப்போது தலைநகரமே அதிர்ந்து போகும். ஜெயலலிதா டெல்லி வருகிறார் என்றதும் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பரபரப்பு தொற்றிக் கொள்ளும். ஏற்கனவே உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கும் டெல்லியில் ஜெயலிதாவின் பயணத்திட்டங்களில் இடம் பெறும் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். டெல்வி விமான நிலையத்தில் ஜெயலலிதா கால் வைத்ததுமே ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ளும். 

245_10599.jpg

விமான நிலையத்தில் இருந்து மிழ்நாடு இல்லம் வரை, அதிமுக தொண்டர்கள் குவிந்து விடுவார்கள். ஜெயலலிதா செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் ஆராவரமிடுவார்கள். 'அதோ... ஜெயலலிதா போகிறார் ' என டெல்லி மக்களே பேசிக் கொள்வார்கள். தமிழ்நாடு இல்லத்தில் ஒருவித உற்சாகமும்  ஆழ்ந்த அமைதியும் காணப்படும். தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதை பெறும் தருணத்தில் ஜெயலலிதா நிற்கும் இடத்தில் தரையில் கூட புதிய விரிப்பு போடப்பட்டிருக்கும். 

ஜெயலலிதா டெல்லி வருகிறார் என்றதுமே... அவரை சந்திக்க அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களே முயற்சிப்பார்கள். மேடத்திடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா? என கேட்பார்கள்.  அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில்அதிபர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருப்பார்கள். எத்தனையோ குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் ஊழல் வழக்குகள் இருந்தாலும் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு எந்தவிதத்திலும் சரிந்தது இல்லை. மத்திய அரசால் கூட்டப்படும் முதல்வர்கள் ஆலேசனைக் கூட்டத்துக்கு சென்றாலும் ஜெயலலிதாவுக்கு தனி மரியாதைதான். அத்தனைத் தலைவர்களும் அவரிடம் வந்து பேச ஆர்வம் காட்டுவார்கள். 

'டெல்லியில் நம்ம சி.எம்.க்கு இருக்குற மரியாதை வேறு எந்த சி.எம்.கும் கிடையாது... ஜெயலலிதாவுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து நாங்களே வியந்து போயிருக்கிறோம்' என தமிழகத்தைச் சேர்ந்த ஊடக நண்பர்கள் சொல்வது வழக்கம்.

ஜெயலலிதா டெல்லி சென்றால் இன்னொரு காட்சியும் அங்கே அரங்கேறும். அகில இந்திய மீடியாக்கள் அத்தனையும் ஜெயலலிதாவின் பேட்டிக்காக காத்திருக்கும். டெல்லியில் ஜெயலலிதா பிரஸ்மீட் வைத்தால் அடிதடியே நடந்து விடும். அந்தளவுக்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் கூடும். கடந்த ஜுன் மாதத்தில் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றிருந்த போது அரங்கேறிய காட்சிகள் இவை.

அத்தகைய ஆளுமை மறைந்து விட, அவரது இடத்தில் இருந்து பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருக்கிறார். புயல் சேதங்களுக்கு  நிதி உதவி கோரி பிரதமரை சந்திக்கிறார். பன்னீர் செல்வம் வருகையால் டெல்லியில் எந்த அதிர்வும் இல்லை. பன்னீரைப் போலவே டெல்லியும் அமைதியாக இருக்கிறது. தமிழக முதல்வர் வருகிறார் என்கிற எந்த பதற்றமும் இல்லாமல் டெல்லி விமான நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது.

OPS_10183.jpg

தமிழக முதல்வரின் டெல்லி வருகையை பதிவு செய்ய தமிழ் ஊடகங்களைத் தவிர வேறு எந்த வடக்கத்திய மீடியாக்களும் ஆர்வம் காட்டவில்லை. சாலைகளில் கெடுபிடி எதுவும் இல்லை. தமிழக முதல்வரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்க வேண்டுமென்ற எண்ணம் எந்த மத்திய அமைச்சர்களுக்கும் வரவில்லை. தமிழ்நாடு இல்லத்தில் எந்த பரபரப்பும் காணப்படவில்லை.நிகழ்வுகள் நடப்பது எல்லாம் ஒரே இடத்தில்தான்.

கால ஓட்டத்தில்தான் எத்தனை மாற்றம்.

http://www.vikatan.com/news/india/75417-differences-between-jayalalithaa-visit-and-panneerselvam-visit-to-delhi.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.