Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1.15 பில்லியன் டொலர்களுக்கு 99 வீத குத்தகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்படும்

Featured Replies

1.15 பில்­லியன் டொலர்­க­ளுக்கு 99 வீத குத்­த­கையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­படும்

p17-bfd1374ac6c7bf40e7f5334288465a02aa95aac9.jpg

 

ஜன­வ­ரியில் ஒப்­பந்தம் கைச்­சாத்து; அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம அறி­விப்பு 
(ஆர்.யசி)

அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தித்திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் சீனா­வுடன் முதற்­கட்ட உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வுள்ளோம்.

 சீனாவின் 1.15 பில்­லியன் டொலர் முத­லீட்­டுடன் இலங்­கைக்கு 20 வீத பங்கு மற்றும் சீனா­வுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்­ப­டையில் 99 ஆண்­டு­கால குத்­த­கைக்கு அம்­பாந்­தோட்டை துறை­முகம் வழங்­கப்­படும் என்று அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்தார். 

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை சர்­வ­தேச தரம் வாய்ந்த துறை­மு­க­மாக மாற்ற இந்­தி­யாக, ஜப்பான் மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடு­க­ளுடன் பேச்­சு­வா­ரத்தை நடத்தி வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறு­கையில்,

அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் பொது எதி­ர­ணி­யினர் தான்­தோன்­றித்­த­ன­மாக கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.பொய்­யான கதை­களை கூறி மஹிந்த அர­சாங்கம் செய்த ஊழல் மோச­டி­களை மறைக்க முயற்­சிக்­கின்­றனர். அம்­பாந்­தோட்டை துறை­முக வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க சீனா­விடம் இருந்து 1.35 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் கட­னாக பெற்­றுள்ளோம். இதில் 306 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் 6.3 வட்டி வீதத்தில் பெறப்­பட்­டுள்­ளது. அதேபோல் 50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் 4.5 வட்டி வீதத்­திலும் எஞ்­சிய தொகையை 2.5 வட்டி வீதத்­திலும் இலங்கை அர­சாங்கம் பெற்­றுள்­ளது. இவ்­வ­ளவு தொகையை நாம் கட­னாக பெறு­கின்றோம் என்றால் அதன் மூல­மாக இலங்­கைக்கு ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வேண்­டிய வரு­மானம் மற்றும் வாய்ப்­புகள் என்­ப­ன­வற்றில் நாம் அதிக அக்­கறை செலுத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் எமது முன்­னைய அர­சாங்கம் தெளி­வான ஒரு வேலைத்­திட்டம் இல்­லாது இந்த நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பாந்­தோட்டை துறை­முக வேலைத்­திட்டம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையை இலங்கை அர­சங்கம் சீனா­வுடன் மேற்­கொண்­டுள்­ளது. அப்­போது முதல் ஆண்­டுக்கு 2 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நாம் கட­னா­கவும் வட்­டி­யா­கவும் செலுத்தி வரு­கின்றோம். ஆனால் வரு­மானம் மிகவும் குறை­வா­கவே எமக்கு கிடைத்து வரு­கின்­றது. ஆகவே இந்த பிரச்­சி­னையில் இருந்து மீள வேண்டும் என எமது அர­சாங்கம் பல்­வேறு திட்­டங்­களை மேற்­கொண்­டது. இறு­தியில் இந்த பிரச்­சி­னையை சுமூ­க­மாக அதே நிலையில் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தும் வகையில் கையாண்டோம். பேச்­சு­வா­ரத்தை மூலம் தீர்­வையும் கண்­டுள்ளோம்.

அதா­வது சீனாவின் பிர­தான இரண்டு நிறு­வ­னங்­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். சீன துறை­முக நிறு­வனம் மற்றும் சீன கடல்சார் நிறு­வனம் ஆகிய சீன அர­சாங்­கத்­துடன் தொடர்­புள்ள நிறு­வ­னங்­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இதன்­போது இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து அம்­பாந்­தோட்டை துறை­முக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அவர்கள் இணக்கம் தெரி­வித்­தனர். அதற்­க­மைய அவர்­களின் முன்­மொ­ழி­வு­களை எமக்கு வழங்­கினர். இதில் சீன துறை­முக நிறு­வனம் 750 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் முத­லீடு செய்­வ­துடன் 85 வீத பங்கு சீனா­வுக்கும் 15 வீத பங்கு இலங்­கைக்கும் வரும் வகை­யிலும் அவர்­களின் முன்­மொ­ழி­வு­களை வழங்­கினர். அதே நிலையில் சீன கடல் சார் நிறு­வனம் 1.15 பில்­லியன் டொலர் முத­லீட்­டுடன் இலங்­கைக்கு 20 வீத பங்கும் சீனா­வுக்கு 80 வீத பங்கும் என்­ற­வ­கையில் முன்­மொ­ழிவை வைத்­தது.

ஆகவே இந்த இரண்டு நிறு­வ­னங்­களின் முன்­மொ­ழி­வு­க­ளையும் அர­சாங்கம் ஆராய்ந்து இறு­தியில் சீன கடல்சார் துறை­மு­கத்தின் முன்­மொ­ழி­வு­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதற்­க­மைய இலங்கை அர­சாங்கம் மற்றும் சீன நிறு­வ­னத்­துடன் கட்­ட­மைப்பு உடன்­ப­டிக்கை ஒன்றை நவம்பர் மாதம் மேற்­கொண்டோம். ஏனைய வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் வாரத்தில் வேலைத்­திட்டம் தொடர்­பி­லான முதற்­கட்ட உடன்­ப­டிக்­கையை இரண்டு நாடு­களும் செய்­து­கொள்­கின்­றன. 99 ஆண்­டு­கால குத்­த­கைக்கு இந்த உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­ப­டு­கின்­ற­துடன் அதன் மூலம் இலங்­கையில் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கவும் அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை கையாண்டு வரு­கின்­றது.

குறிப்­பாக 1200 ஏக்கர் பரப்பில் இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நிலையில் துறை­முகம் தவிர்ந்து சீமெந்து தொழிற்­சாலை, இயற்கை திர­வ­வியல் எரி­வாயு சாலை ,எண்ணெய் சேமிப்பு தாங்­கிகள் மற்றும் கப்பல் பழு­து­பார்த்தல் மையம் ஆகி­ய­வற்­றையும் உரு­வாக்கும் நட­வ­டிக்­களை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதற்­கான உடன்­ப­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் செய்­து­கொள்­ள­வுள்­ளது. மேலும் இந்த தொழிற்­சா­லை­க­ளுக்கு அப்பால் 15ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தொழில் பேட்டை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. அடுத்த ஐந்­து­அல்­லது ஆறு ஆண்­டு­களில் தெற்கில் பாரிய மாற்­றங்­களை கொண்­டு­வரும் தொழில் பேட்­டை­களை உரு­வாக்கி அதன் மூலம் நான்கு இலட்சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வுள்ளோம். ஆகவே இலங்­கையில் வேலை­யில்லா நிலை­மைக்கு இது பாரிய மாற்று நகர்­வாக அமை­யப்­போ­கின்­றது. அதேபோல் வழங்­கப்­படும் நிலப்­ப­ரப்பில் 90 வீதம் அரச நிலங்­க­ளையும் 10 வீத தனியார் நிலங்­க­ளையும் வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் இந்த நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.மக்கள் எவரும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் எனின் அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களை வழங்கவும் தயாராக உள்ளோம் .

மேலும் அம்பந்தோட்டை துறைமுகத்தில் பொருளாதார மற்றும் வியாபார நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் கடற்படை முகாம் மாத்திரம் இந்த பகுதியில் அமைக்கப்படும். மாறாக சர்வதேச இராணுவ நகர்வுகளுக்கு இங்கு இடம் இல்லை. திருகோணமலை துறைமுகத்தை சர்வதேச தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்றும் நடவடிக்கைகளுகான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நாம் இந்தியாக, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.