Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழகத்தைப் புகைப்படம் ஆட்சி செய்யும்' - அன்றே சொன்னது பி.பி.சி.

Featured Replies

'தமிழகத்தைப் புகைப்படம் ஆட்சி செய்யும்' - அன்றே சொன்னது பி.பி.சி.

 

புகைப்படம்

மறைந்த முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தமிழக அரசின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பொறுப்பு முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற பின்னரும் கூட முதல்வர் உயிருடன் இருக்கும் வரை அம்மாவின் புகைப்படம் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுல்ல, அமைச்சர்கள் துறை ரீதியாக ஏதாவது அதிகாரிகளின் கூட்டம் நடத்தினாலும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றதில்லை.

தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அதிமுகவினர் மறைந்து முதல்வரின் புகைப்படத்தை மறந்து விடுவதில்லை. ஒவ்வொரு செயலும் அவரது புகைப்படத்தை முன்வைத்தே நடைபெறுகிறது. ரியோ பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். தமிழக அரசு தரப்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், மாரியப்பனுக்கு ஊக்கத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ஜெயலலிதா மறைந்து 2 வாரங்கள் கழிந்த நிலையில், இன்று மாரியப்பனுக்கு ஊக்கத்தொகை ரூ.2 கோடி வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாரியப்பனிடம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போதும் மறைந்த முதல்வரின் ஜெயலலிதாவின் புகைப்படம் பின்னணியிலும் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது புகைப்படம் இல்லாமல் அதிமுகவில் எந்த விஷயமும் நடப்பதில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. 

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதிமுகவினரின்  விசுவாசத்தை குறிப்பிட்டு, பி.பி.சி. நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் 'தென்னிந்தியாவில் தமிழகம் என்ற மாநிலத்தை புகைப்படம் ஒன்று ஆட்சி செய்கிறது' என்று  தலைப்பிட்டிருந்தது. அந்த செய்தியில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பன்னீர்செல்வம் என்பவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். விசுவாசத்துக்கு பெயர் போன, பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் கூட அமர்வதில்லை. கேபினட் கூட்டத்தைக் கூட்டினாலும் தனது அருகே ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொள்கிறார்'' என செய்தி வெளியிட்டிருந்தது. 

மேலும் அந்த செய்தியில் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறிய கருத்தையும் பிபிசி பதிவு செய்திருந்தது. ''அம்மாவின் புகைப்படம் இருந்தால் அவர் எங்களுடன் இருப்பது போன்ற உணர்வு  ஏற்படுகிறது. நாங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அமைச்சரவையில் என்ன விவாதித்தாலும் அம்மாவின் முன்னிலையிலேயே எடுப்பதாக கருதுகிறோம். அதனால் நாங்கள் அதனை செய்கிறோம். கேபினட் கூட்டத்தில் புகைப்படம் வைத்தாலும் தவறில்லை. அதிமுகவை பொறுத்தவரை அம்மாவை தவிர்த்துவிட்டு எதுவுமில்லை '' என கூறியிருந்தார்.

அரசியல் விமர்சகர் சத்தியமூர்த்தியோ 'இந்த மாதிரியான பண்பை நான் எங்கும் கண்டதில்லை. பதவியேற்கும் போது கூட அம்மாவின் பெயரால் பதவியேற்றுக் கொள்கிறேன் என்கின்றனர். இதுவெல்லாம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது' என விமர்சித்திருந்தார். எதிர்கட்சியான திமுக. 'மக்களை விட தலைவர் பெரிது இல்லை' என்று குறைபட்டுக் கொள்கிறது. 

யார் எப்படி விமர்சித்தாலும் அதிமுகவினர் கண்டு கொள்வதில்லை. அம்மாவின் புகைப்படம் ஒன்றே போதும் ஆட்சி நடத்த என்கின்றனர்!

http://www.vikatan.com/news/tamilnadu/75804-admk-leaders-affection-towards-jayalalithaa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.