Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு காலக்கெடு

Featured Replies

கூட்­ட­மைப்பு காலக்கெடு

Heding-01-5adbf030119215e6e2980c9a59caeeabfeb547e2.jpg

 

ஆர்.ராம்

கேசரி வாரவெளியீட்டிற்கு சுமந்திரன்  எம். பி. பிரத்தியேக தகவல்

ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய முடி­வொன்றை எடுப்­பது என்­ப­தற்­காக தேசிய அர­சாங்­கத்­திற்கு எதிர்­வரும் பெப்­ர­வரி மாத நடுப்­ப­கு­தி­வ­ரையில் கால­ அ­வ­காசம் வழங்­கி­யுள்­ளது.

2017ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடுப்­ப­குதி வரையில் தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­போகும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடி வும் அமையும் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இக்­கூட்டத் ­தொ­டரில்

ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல்­ஹூசைன் இலங்கை அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பது தொடர்­பான அறிக்­கையை மார்ச் மாதம் 22ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

குறிப்­பாக ,கடந்­த­வ­ருடம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது உட்­பட இலங்கை விஜ­யத்தின் போது தான் நேரில் அவ­தா­னித்த மற்றும் ஆராய்ந்த விட­யங்­களின் அடிப்­ப­டையில் ஐ.நா ஆணை­யாளர் செய்ட் அல்­ஹூசைன் எழுத்­து­மூல அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஏகோ­பித்த ஆணை­பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது. அதே­நேரம் தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­களை தீர்ப்­பதில் தேசிய அர­சாங்­கமும் திருப்­தி­க­ர­மா­ன­தாக செயற்­ப­ட­வில்லை எனவும் குற்­றச்­சாட்­டுக்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மறு­பக்­கத்தில் தேசிய அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்கள், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற விட­யங்­களில் அக்­கறை செலுத்தி வரு­கின்­றது.

ஆகவே, தேசிய அர­சாங்கம் இவ்­வா­றான செயற்­பா­டு­களால் பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து தப்­பித்­து­வி­டுமா? மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் தேசிய அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்தும் நழு­விக்­கொள்­ளுமா? புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி என்ற ஒரு விட­யத்தால் அனைத்தும் மூடி மறைக்­கப்­பட்­டு­வி­டுமா? என எழுந்­துள்ள சந்­தே­கங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கேசரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக தக­வலில்

அர­சாங்கம் சரி­யான வேகத்­திலே செயற்­ப­ட­வில்லை என்­பதை பல தரு­ணங்­களில் சுட்­டிக்­காட்­டிக்­கொண்டு வரு­கின்றோம். இல­கு­வாக செய்­யக்­கூ­டிய பல விட­யங்­களை அவர்கள் செய்து முடிக்­க­வில்லை என்­பது எமது நிலைப்­பாடு.

கடந்த ஜுன் மாதம் ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­கரை நேர­டி­யாக சந்­தித்து பேசிய போது இவ்­வி­டயம் குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். அதன்­போதும் நான் அர­சாங்­கத்தின் கால­தா­ம­தங்கள் குறித்து தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருந்தேன். அது­மட்­டு­மன்றி ,இந்த விட­யங்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபையில் அங்­கத்­துவம் வகிக்கும் நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­தி­யி­ருக்­கின்றோம்.

இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை அளித்து தனது பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.தமது பொறுப்­புக்­கூ­றலை செய்து முடிப்­ப­தற்கு கால­அ­வ­காசம் போதாமல் போய்­விட்­டது. ஆகவே, எமக்கு மேலும் கால­அ­வ­காசம் தாருங்கள் என ஐ.நா.மனித உரிமை சார்பில் விண்­ணப்­பிக்க வேண்­டிய தேவை தற்­போது அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை நாம் உணர்­கின்றோம்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க பணிகள் சரி­யாக நடக்­கு­மாக இருந்தால் குறிப்­பாக தொடர்ந்தும் தாம­த­மின்றி வரை­வுகள் வெளி­யாகி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்ற வரை­யி­லான செயற்­பா­டுகள் பெப்­ர­வரி மாத­ம­ள­விலே வரு­மா­க­வி­ருந்தால் அவ்­வா­றான விண்­ணப்­பத்தை ஐ.நா சபையில் அர­சாங்கம் செய்யும் பட்­சத்தில் நாங்கள் ஏற்­றுக்­கொள்வோம்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் செய்­யப்­ப­டு­கின்ற அதே­வே­ளை­யி­லேயே மற்­றைய சில விட­யங்­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்­திற்கு அசௌ­க­ரி­ய­மா­க­வி­ருக்கும் என்­ப­தோடு மட்­டு­மல்ல முடி­யா­மலும் இருக்கும் என்­பதில் சில நியா­யங்கள் இருக்­கலாம்.

ஆனால் ,கைதிகள் விடு­தலை, நிலங்கள் விடு­விப்பு, வடக்கில் இரா­ணு­வத்தை குறைத்தல், மீள்­கு­டி­யேற்றப் பணி­களை நிறை­வுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்­றுதல், பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு முறை­யான வாழ்­வா­தா­ரத்­தினை வழங்­குதல், இளைஞர் யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­குதல் போன்ற உட­ன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய விட­யங்­களை அர­சாங்கம் காலம் தாழ்த்­திக்­கொண்­டி­ருக்­காது மேற்­கொள்ள முடியும்.

ஆகவே, இன்­றி­லி­ருந்து பெப்­ர­வரி நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தி­யினுள் அர­சாங்கம் ஆகக்­கு­றைந்­தது இந்த விட­யங்­க­ளி­லா­வது முற்­போக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு சட்ட உரு­வாக்­கத்­திலே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை ஏற்­றுக்­கொண்டு வரை­வுகள் வெளி­யா­க­வேண்டும். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் மாத்­தி­ரமே அர­சாங்­கத்­திற்கு கால­அ­வ­காசம் கொடுப்­பற்கு இணங்­குவோம். அது நியா­ய­மா­ன­தா­கவும் இருக்கும்.

அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத பட்சத்தில் நாங்கள் வித்தியாசமாக செயற்படவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே ஏற்படும். அதற்காக நாங்கள் பின்னிற்கவும் போவதில்லை. பொறப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலகி நிற்கமுடியாது. அதற்கும் நாமும் இடமளிக்கப்போவதில்லை.

சில விடயங்கள் அரசாங்கத்தினால் மட்டுமே செய்யமுடியும். அதற்காக நாம் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் பலவகைகளில் அழுத்தங்களை வழங்கியவாறே இருப்போம். அவ்வாறான விடயங்களுக்கு வெளிநாட்டுச் சக்திகள் உந்துசக்திகளாகவே இருக்கமுடியும். அந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக உந்து சக்திகளை உந்து சக்திகளாக பயன்படுத்துகின்ற யுக்தியையும் நாம் கையாள்வோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-25#page-1

2009 ஆம்  ஆண்டு பி டி  எப் ஜெனிவாவில். ஆரம்பித்து வைத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்னும் பொறியே கூட்டமைப்புக்ம் பேரம் பேசும் வல்லமையை வழங்கி உள்ளது. இதனை புலம் பெயர் அமைப்புக்கள் பி டி  எப் என்பவை மீது விமரிச்னம் வைட்தவர்கள் க்வனத்தில் எடுக்க வேணும். ஒன்றும் தன் பாட்டில்நிகழ்வதில்லை. சரியான முலோபாயம், தூர நோக்கு,நடைமுறை சார் செயற்திட்டம், அது சார்ந்து செயற்படும் அமைப்பு, இவை இன்றி எந்த விடுதலையும் சாத்தியப் படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.