Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர். நினைவு நாள் அரசியல்... ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா போகாத பின்னணி!

Featured Replies

எம்.ஜி.ஆர். நினைவு நாள் அரசியல்... ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா போகாத பின்னணி!

 

ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் அடுத்த தலைமை யார் என்ற கேள்விச் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது, அ.தி.மு.க. 

‘‘ஜெயலலிதாவின் மறைவு அறிவிக்கப்பட்ட, டிசம்பர் 5-ம் தேதி முதலே கட்சி, இனம்புரியாத குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது’’ என்கின்றனர், தொண்டர்கள். ஜெயலலிதா இறப்பு, அறிவிக்கப்படுவதற்கு முன்பாக... அப்போலோவுக்கு கட்சி எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் வரவழைக்கப்பட்டதும், அவசரகதியில் ஓ.பி.எஸ். முதல்வராகப் பொறுப்பேற்றதும் அன்றைய காட்சி. ஓ.பி.எஸ். - சசிகலா கூட்டணிதான், இனி அ.தி.மு.க. என்கிற பெரும் இயக்கத்தை வழி நடத்தப்போகிறது என்ற கருத்தும் அந்தச் சூழலில் மையம் கொண்டது. ஜெயலலிதா இறந்து இன்றோடு 25 நாட்கள் ஆகின்றன. கட்சியும் ஆட்சியும் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு தொண்டர்களே பதிலைச் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அ.இ.அ.தி.மு.க. நிறுவனர் - தலைவரான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், கட்சியைத் தோற்றுவித்த நாள் என இரண்டு நாட்கள் அ.தி.மு.க. விழாக் கோலத்தில் இருக்கும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளராக பொறுப்புக்கு வந்தவர் ஜெயலலிதா. அவர், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் என ஆண்டுதோறும் முப்பெரும் நினைவூட்டு நாளாக உருவாக்கினார்.

jaya_dead_15519_17423.jpg

எம்.ஜி.ஆர். மறைந்த அதே டிசம்பர் மாதத்தின் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்ததால்... இனி வருங்காலங்களில் அ.தி.மு.க., ஆண்டில் நான்கு விழாக்களைக் கடைப்பிடிக்கும். ஜெயலலிதாவின் பிறந்த நாளோடு சேர்த்தால், அது ஐந்து விழாக்களாக இருக்கும்.

ஜெயலலிதா இறந்த பின்னர், கட்சியில் முதலில் வந்திருக்கும் முக்கியமான நிகழ்ச்சியாக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் (டிசம்பர் 24) வந்தது. வழக்கம்போல் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்று அங்கே அஞ்சலி செலுத்த வேண்டும். யார் இப்போது பொதுச் செயலாளர் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வின் சார்பில்... யார் போய் அஞ்சலி செலுத்துவது என்ற கேள்வி கடந்த சில நாட்களாக உச்சத்துக்குப் போய்விட்டது. தமிழ்நாடு அரசின் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்திருப்பது அ.தி.மு.க. அதன் முதல்மந்திரியாக இருப்பவர் ஓ.பி.எஸ். என்பதால், அவரே கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சமாதிக்குப் போய் அஞ்சலி செலுத்துவது, உடன் மந்திரி சகாக்கள் செல்வது என்றும் முடிவானது. அதன்படி ஓ.பி.எஸ்., மந்திரிகள் புடைசூழ... எம்.ஜி.ஆர். சமாதிக்குப் போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார். அப்படியே அருகில் இருக்கும் ஜெயலலிதா சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

46de1a93-9e3d-4249-b865-2b17b5b26e7d_1724a59c7b0-375b-40d8-86e0-192809f11c11_175d240bb87-87fb-4741-b481-d501bcc68290_171

‘சசிகலாவும் போய்விட்டு வந்திருக்கலாமே’ என்ற கேள்வியை சசிகலாவைச் சுற்றியுள்ள ஆட்களிடம் முன்வைத்தோம். ‘‘அதற்கு சாத்தியமான தருணம் இதுவல்ல... அம்மா சமாதி அருகில் வைத்தே சின்னம்மா போஸ்டரைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். சாணி அடிக்கின்றனர்... ‘கார்டனுக்கு இத்தனை போலீஸ் தேவையா’ என்று ஸ்டாலின் கேள்வி கேட்கிறார்; அதை, ஓ.பி.எஸ். ரசிக்கிறார். பதில் கொடுக்க வேண்டியதுதானே? கார்டன் வேறு... கோட்டை வேறா? ஸ்டாலினை தூண்டிவிட்டிருப்பதே ஓ.பி.எஸ்-தான். தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவருடைய அறையான கோட்டையிலும் ஐ.டி. ரெய்டு போகிறது. கார்டனுக்கு அல்லவா முதலில் ஓ.பி.எஸ். சொல்லியிருக்க வேண்டும். ஏன், ஓ.பி.எஸ். அன்று மவுனம் சாதித்தார்? தீபா வருகையை எதிர்பார்க்கிறாரா, ஓ.பி.எஸ். அவர், இப்போது வாழும் வாழ்க்கை எங்கள் சின்னம்மா கொடுத்தது... பொதுக்குழுவில் சக்தியைக் காட்டிவிட்டு... அடுத்து, ஆட்சிக்கு வருகிறோம், அப்போது தெரியும்... ஓ.பி.எஸ். கதை’’ என்று அடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

ஜெயலலிதாவுடன் சிறைக்குச் சென்றவர் சசிகலா. அவர், உயிருடன் இருந்தவரையில், “சின்னம்மா கிட்டே  சொல்லிட்டோம், அவங்க பாத்துப்பாங்க” என்ற குரலே கட்சியின் அனைத்து மட்டத்திலும் எதிரொலித்தது.

“முதல்வராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஜெயலலிதா இருந்தாலும், சசிகலாவின் கண்ணசைவின் படிதான் கட்சி நடந்துவந்தது. சசிகலா, சொன்னவர்களுக்கு மட்டுமே ‘சீட்’ கொடுக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசின் முக்கிய அத்தனை அதிகார மையத்தினரும் சசிகலாவின் வாயிலாகத்தான் ஜெயலலிதாவைச் சந்தித்து வந்தனர் என்பது அனைத்து மட்டத்திலும் அறிந்த விஷயமாக இருந்தது. ஜெ. மறைவுக்கு ஆறுதல் கூறவந்த பல்வேறு துறையினர், அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக்குமார் வீட்டுக்கோ, தீபா வீட்டுக்கோ போகவில்லை. அனைவரும் தேடிப்போய்ப் பார்த்து ஆறுதல் சொன்னது சசிகலாவுக்குத்தான்.அதிகார மையங்கள், அரசியல் சக்திகள் என்று பலர் சசிகலாவை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்தாலும், அடிமட்டத் தொண்டன் சசிகலா வசிக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் கூடவில்லை. மாறாக, சசிகலாவுக்கு மாற்று யார் என்பதில்  தொண்டனின் கவனம் வேகமாகி வருவதாகக் கூறப்படுகிறது. தீபக்குமார், சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசி வருவதால் தீபக்குமார் குறித்து அடிமட்டத் தொண்டன் யாரும் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. சசிகலாவை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், தீபக்குமாரின் தங்கையுமான தீபாவின் குரல்தான் இப்போது சசிகலா தரப்பின் வேகத்தைக் குறைத்துள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில்தான் எத்தனை விதமான கேள்விகள் எழுகின்றன, அவைகளுக்கு பதில்கள் உண்டா எனத் தெரியவில்லை. தீபா கட்சியில் எத்தனை ஆண்டு உறுப்பினர்... சசிகலா எத்தனை ஆண்டு உறுப்பினர்? ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்தான் இருந்தாலும் ஜெயலலிதா, தீபாவை அருகில் சேர்க்கவில்லை. சசிகலாவைத்தான் நம்பினார், அவரைத்தான் அருகில் வைத்துக்கொண்டார். 

OPS_long_17148.jpg

சசிகலா, ஜெயலலிதாவின் நட்புக்காகச் சிறைக்குப் போயிருக்கிறார். 28 ஆண்டுகள் கணவரைப் பிரிந்து ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனிலேயே தங்கிவிட்டார். ஜெயலலிதா இறந்த பின்னரும் அவர் கணவரைத் தேடிப்போகவில்லை, கார்டனில்தான் வசிக்கிறார். சசிகலா பொறுப்புக்கு வருவதே சரி, பொதுச்செயலாளர் ஆவதே முறை. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பி முதல்வர் ஆக வேண்டும். ஆர்.கே. நகர் நிரந்தர முதல்வர் தொகுதி ஆக வேண்டும்’’ என்கின்றனர், கட்சியின் இருபிரிவினர்.
  
இவைகளுக்கு விடை கிடைக்குமா என்பதை 29-ம் தேதி கூடவுள்ள அ.தி.மு.க-வின் பொதுக்குழுதான் தீர்மானிக்கும். 

- ஆர்.கே. நகரில் சசிகலா நின்றால், எதிர் வேட்பாளராக தீபா களத்தில் இறங்குவார். முன்னதாக போட்டி பொதுக்குழுவும் இருக்கலாம், அதை இப்போதைக்குச் சொல்ல முடியாது - என்கிறது தீபாவை ஆதரிக்கும் சைலன்ட் தரப்பு!

போஸ்டர் கிழிப்பு, போட்டி பொதுக்குழு, ஓ.பி.எஸ். மூவ், டெல்லி குழப்பம், ஸ்டாலின் குற்றச்சாட்டு... என்று அ.தி.மு.க-வின் தற்போதைய சூழல் ரணகளத்தில் இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/75913-why-sasikala-didnt-go-to-jayalalithaa-memorial.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.